Tuesday, 15 October 2019

ரேவதி நட்சத்திர பலன்கள்

பேச்சில் சுத்தமும், கொடுக்கல் வாங்கலில் நாணயத்தையும் காப்பாற்ற நினைப்பவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து  கேட்டாலும், அதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் விருப்பட்ப்படியே நடப்பார்கள்.
தே, தோ, ச, சி போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் ரேவதி நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
புதனின் நட்சத்திரமான ரேவதி, குருவின் வீடான மீனத்தில் அமைந்துள்ளதால், சாதுர்யமும், மென்மையான போக்கும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
ராசி மண்டலத்தின் கடைசி நட்சத்திரமான ரேவதியில் பிறந்தவர்கள், யுகங்களை முடித்த நிலையில் உள்ளது போல, கொஞ்சம் மெதுவாகவே இயங்குவார்கள். சோம்பேறித்தனமும் அலட்சியமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
மற்றவர்களிடம் அனாவசியமாக எதையும் பேச மாட்டார்கள். மற்றவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். எதுவாக இருந்தாலும், அதை தன்னுடைய விருப்பப்படியே செய்ய விரும்புவார்கள். அதனால் விளையும் நன்மை தீமைகளை பற்றியும் கவலை பட மாட்டார்கள்.
கண்மூடித்தனமாக யாரையும் ஏற்க மாட்டார்கள். அதுபோல், ஒருவரை பிடித்துவிட்டால், அவரை எக்காரணம் கொண்டும் ஒதுக்கித்தள்ள மாட்டார்கள்.
சில நேரங்களில் தவறு என்று தெரிந்தாலும், தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். மூட நம்பிக்கைகளை ஏற்கும் தன்மை இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் ஏற்பட்டால் கூட அதிக மன பாதிப்பு அடைவார்கள். ஆனால், கடவுள் அருளும் அதிர்ஷ்டமும் இவர்களுக்கு அதிகம் உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக பிடிவாத குணம் உண்டு. பிறரை அடக்கி ஆளும் எண்ணம் இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இதே குணம் பிரதிபலிக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களிடம் பணம் வாங்கினாலும், அடுத்தவர் வீட்டில் உணவு அருந்தினாலும், அதிர்ஷ்டம் போய்விடும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
ரேவதி நட்சத்திரத்தில் நின்ற கிரகம், சிறு வயதில் அதிக மருத்துவ செலவு, மஞ்சள் நோட்டிஸ், மூடிய கிணறுகள், மற்றொரு வீட்டில் பிறப்பது, கால் வலி, ஊரை விட்டு வெளியேறுதல் ஆகியவற்றையும் குறிக்கும்.
ரேவதி நட்சத்திரம் மீன் மற்றும் மத்தளம் போன்ற வடிவம் கொண்டுள்ளதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த வடிவங்களை லோகோவாக பயன்படுத்தலாம்.
தேவ கணம் கொண்ட ரேவதி நட்சத்திரத்தின் அதிதேவதை அரங்கநாதன், ஈஸ்வரன். மதுரையில் உள்ள சுந்தரானந்த சித்தர் ஜீவ சமாதியையும் வணங்கலாம். உகந்த மலர் செம்பருத்தி.
ரேவதி நட்சத்திரத்தின் விருட்சம் இலுப்பை மரம். எனவே இலுப்பை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய மிருகம் பெண் யானை. பறவை வல்லூறு. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யக்கூடாது.
திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே காருகுடி என்ற ஊரில் அமைந்துள்ள கைலாசநாதர் உடனுறை பெரியநாயகி அம்மன் ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும்.
எனவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள பொன் தானம் செய்வது நல்லது

No comments:

Post a Comment