Tuesday, 15 October 2019

பூராட நட்சத்திர பலன்கள்


ஏற்றுக்கொண்ட கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும் குணம் கொண்டவர்கள் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
அறிவும், புத்திசாலித்தனமும் நிறைந்தவர்கள். எதையும் எளிதாக உள்வாங்கி கொள்வதும், அதற்கேற்ப விரைந்து முடிவெடுப்பதும் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தனித்தன்மை.
பு, த, ப, ட ஆகிய எழுத்துக்களை, பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் பூராட நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
சுக்கிரனின் நட்சத்திரமான பூராடம், குருவின் வீடான தனுசில் அமைந்துள்ளதால், இவர்களுக்கு சாதுர்யமும், விடாமுயற்சியும் கைவந்த கலையாக இருக்கும்.
நல்ல பேச்சு திறனும், விவாதம் செய்யும் திறனும் நிறைந்த இவர்கள், தங்களுடைய கருத்தே சரி என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களிடம் மற்றவர்கள் ஆலோசனை கேட்கலாமே ஒழிய, இவர்களுக்கு ஆலோசனை சொன்னால் ஏற்க மாட்டார்கள்.
இவர்கள் மிகவும் தைரிய சாலிகள் போல வெளியில் தெரிந்தாலும், உள்ளூர பயமும் இருக்கும். அதனால், சில நேரங்களில் சின்ன பிரச்சினைகளுக்கு கூட தீர்வுக்கான முடியாமல் தவிப்பதுண்டு.
அதேபோல், ஒரு தவறான முடிவெடுத்துவிட்டு அதை மாற்றிக்கொள்ள் முடியாமல் தவிப்பதும் உண்டு.
எந்த பலனும் எதிர் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் இவர்களுக்கு, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களால் நல்ல ஆதாயம் உண்டு. இவர்களுக்கு நிரந்தர நட்பும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அறிவாளிகள். எதையும் அடைய வேண்டும் எந்த எண்ணமும் ஆசையும் உடையவர்கள். நெருக்கடியான நிலைகளை சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்கள்.
இவர்களுடைய கருத்தை மற்றவர்கள் ஜீரணிப்பது கஷ்டம். செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிப்பதும் உண்டு.
பூராட நட்சத்திரத்தில் நின்ற கிரகம், காதல் திருமணம் நரம்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை சொல்லும்.
பூராட நட்சத்திரத்தின் வடிவம் விசிறி, முறம், கட்டில் கால் போல இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இவற்றை தங்கள் தொழில் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூராட நட்சத்திரத்திற்கான அதிதேவதை ஜம்புகேஸ்வரர், வருணன். பரிகார தெய்வம் துர்கை. திருப்பதியில் உள்ள கொங்கன சித்தர் ஜீவ சமாதியையும் வழிபடலாம். உகந்த மலர் விருட்சி பூ.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் வஞ்சி மரம். எனவே வஞ்சி மரத்திற்கு நீர் ஊற்றுவது சிறப்பு/
பூராட நட்சத்திரத்திற்கான மிருகம் ஆண் குரங்கு. பறவை கௌதாரி, எனவே இவற்றுக்கு இடையூறோ, தொந்தரவோ செய்யக்கூடாது.
திருவையாறு அருகே உள்ள கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் உடனுறை மங்களாம்பிகை ஆலயமே, பூராட நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். ஜென்ம நட்சத்திரம் அன்று, பூராட நட்சத்திரக்காரர்கள், இந்த ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு.
பூராட நட்சத்திரத்தினர் தங்களது அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, முடிந்த வரை அன்னதானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment