Tuesday, 15 October 2019

சதய நட்சத்திர பலன்கள்



உண்மையை நிலைநாட்ட இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
தெற்காசியா முழுவதும் கட்டி ஆண்டு, வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதய நட்சத்திரம்.
கோ, ஸ, ஸி, ஸு போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்துக்களாக கொண்டவர்களும் சதய நட்சத்திரத்தின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆவர்.
பிரம்மாண்டத்தை சொல்லும் ராகுவின் நட்சத்திரமான சதயம், சனியின் வீடான கும்பத்தில் அமைந்துள்ளதால், எதையும் பெரிதாக செய்து முடிக்கும் ஆற்றலும், நுணுக்கமும் இவர்களிடம் நிறைந்து இருக்கும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், உண்மையான குணம் உள்ளவர்கள். உண்மையை நிலைநாட்ட போராடுவார்கள். பிடிவாதமான செயல்பாடுகளால், பிறர் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.
பெரிய அளவுக்கு விளம்பர பிரியம் இருக்காது, ஆனாலும், இவர்களது தனித்திறமை வெளிச்சத்திற்கு வந்தே தீரும். இவர்கள் ஒரு முறை முடிவெடுத்து விட்டால், அதை மாற்றிக்கொள்வது கஷ்டம்.
நல்ல குணம், கெட்ட குணம் இரண்டும் கலந்தே இருக்கும். ஆனாலும் இறக்கம் உள்ளவர்கள்..
இவர்களை சீண்டாத வரை அமைதியாக இருப்பார்கள். சீண்டி பார்த்தால் வேட்டை நாயை போல விரட்டி குதறிவிடுவார்கள்.
மொத்தத்தில் நல்ல குணத்துடன் போராட்டமான வாழ்க்கையும், அதில் வெற்றியும் இவர்களுக்கு  உண்டு.
கடுமையான போராட்டத்திற்கு பின்னர், காலம் காலமாய் நிலைத்து நிற்கும் பல படைப்புகளை வழங்க கூடியவர்கள் சதய நட்சத்திரக்காரர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அழகாகவும், நளினமாகவும் இருப்பார்கள். பாரம்பரியத்தை மதிக்கும் குணமும், நவீனத்தை ஏற்றுக்கொள்ளும் குணமும் இவர்களிடம் நிறைந்து இருக்கும். செய்வதை தெளிவாக செய்யும் மனோபாவம் கொண்ட இவர்கள், தங்கள் விஷயத்தில் மற்றவர்கள் தேவை இல்லாமல் மூக்கை நுழைப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
சதய நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திடீர் மரணத்தையும், காணாமல் போனவர்களையும் சொல்லும்.
சதய நட்சத்திரம் பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
ராட்சத கணம் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் கடம்ப மரம். எனவே சதய நட்சத்திர காரர்கள் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
சதய நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை மிருத்யுஞ்சேஸ்வரர். எமன். பரிகார தெய்வம் துர்கை. சிதம்பரத்தில் உள்ள திருமூலர், சீர்காழி சட்டநாதர், வைதீஸ்வரன் கோயில் தன்வந்திரி ஜீவ சமாதிகளையும் வணங்கலாம். உகந்த மலர் நீலோற்பவம்.
இந்த நட்சத்திரத்திற்கு உரிய மிருகம் பெண் குதிரை. பறவை அண்டங்காக்கை. எனவே இவற்றுக்கு இடையூறு செய்யக்கூடாது.
நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் உடனுறை கருந்தார் குழலி ஆலயமே, இந்த நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாகும். எனவே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று, இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வது நல்லது.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை பெருக்கிக்கொள்ள, சந்தன தானம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment