“ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று சேரும்போது யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் ‘அமிர்தாதி யோகங்கள்' என்பவை உண்டு. அவை தினசரி உண்டாகும், அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், மரணயோகம், நாசயோகம், ப்ரபலாரிஷ்டயோகம் என்பவை. இவற்றில் அமிர்தயோகம் சித்தயோகம், சுபயோகம் ஆகியவை நல்லவை. நாச யோகம், மரணயோகம் ப்ரபலாரிஷ்ட யோகம் ஆகியவை நல்லவையல்ல. இவை தினந்தோறும் நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது ஏற்படுபவை. இவற்றைப் பற்றி பஞ்சாங்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.. இவை ஒரு சுபகாரியத்துக்காகப் பார்க்கப் படுபவை.
இதேப்போல் ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து, அவருக்கு என்ன வகையான யோகங்கள் அமைந்திருக்கின்றன, அவற்றை அவர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம். ஜாதக ரீதியாக யோகங்களை முக்கியமான ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.
* கிரகங்கள் ஒன்றுகொன்று கேந்திரத்தில் 1, 4, 7,10 - ம் இடங்களில் நிற்கும் அமைப்பு.
* கிரகங்கள் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் 1,5 9 - ம் இடங்களில் நிற்கும் அமைப்பு.
* கிரகங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் 1, 7-ம் இடத்தில் நிற்கும் அமைப்பு.
* கிரகச் சேர்கையில் ஏற்படுவது, அதாவது இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் நிற்கும் அமைப்பு .
* கிரகங்களின் பரிவர்த்தனையால் ஏற்படுவது, கிரகங்கள் ஒருவர் வீட்டில், ஒருவர் மாறி நிற்கும் அமைப்பு.
இந்த அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும், அந்த யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும். பொதுவாக, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 300க்கும் மேல் உள்ளன. அதில் முக்கியமான பத்து யோகங்களைப் பற்றி பார்ப்போம்.
* கிரகங்கள் ஒன்றுகொன்று கேந்திரத்தில் 1, 4, 7,10 - ம் இடங்களில் நிற்கும் அமைப்பு.
* கிரகங்கள் ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் 1,5 9 - ம் இடங்களில் நிற்கும் அமைப்பு.
* கிரகங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் 1, 7-ம் இடத்தில் நிற்கும் அமைப்பு.
* கிரகச் சேர்கையில் ஏற்படுவது, அதாவது இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் நிற்கும் அமைப்பு .
* கிரகங்களின் பரிவர்த்தனையால் ஏற்படுவது, கிரகங்கள் ஒருவர் வீட்டில், ஒருவர் மாறி நிற்கும் அமைப்பு.
இந்த அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும், அந்த யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும். பொதுவாக, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 300க்கும் மேல் உள்ளன. அதில் முக்கியமான பத்து யோகங்களைப் பற்றி பார்ப்போம்.
1. தர்ம கர்மாதிபதி யோகம்: ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு
அதிபதியும் சேர்ந்து நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் நிறுவி, பொதுத்தொண்டு செய்வார்கள். ஆலயப் பணி செய்வார்கள். கோயில் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொந்த செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய தகுதி உண்டாகும். சிலர் தினமும் அன்னதானம் செய்வார்கள். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணிக்காக எழுதியும் வைப்பார்கள்.
2. கஜ கேசரி யோகம்: ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாக பல வீடுகள், வாகன யோகங்களையும் தரும். அதே சமயம் எதிரிகளும் உருவாகுவார்கள். ஆனால், அவர்கள் இவர்களிடம் தோற்றுபோவார்கள்.
3. குரு சந்திர யோகம்: சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் , 9 - ம் வீட்டில் குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 -வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.
4. சந்திரமங்கள யோகம் : ஜாதகத்தில், செவ்வாய், சந்திரனுக்கு அதாவது ராசிக்குக் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 - வது வீட்டில் நின்றால் இந்த யோகம் ஏற்படும். இது திருமணத்துக்குப் பிறகு ஜாதகனுக்கு நல்ல உயர்ந்த அந்தஸ்தைத் தரும்.
5. குரு மங்கள யோகம்: ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது, ஒருவருக்கொருவர் எதிரில் நின்றாலோ, இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள், தான் செய்யும் தொழிலில் உயர்வுபெற்று, பல தொழில்களாக விரிவுபெற்று நல்ல ஒரு தொழிலதிபராக முன்னுக்கு வருவார்கள்.
6. பத்ர யோகம்: ஜாதகத்தில் ஒருவருடைய லக்னத்துக்கு 4, 7, 10 - ம் இடத்தில் புதன் ஆட்சியாக, உச்சமாக இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் சிறந்த கல்வி அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பிலிருக்கும் புதனை, குரு பார்த்தால் பெரும் கல்விமானாகப் பெயர் எடுத்து, கல்வி நிறுவனங்கள் நிறுவி, கல்விப் பணி ஆற்றுவார்கள். அத்துடன் குருவும் சேர்ந்து பலம் பெற்று இந்த அமைப்புள்ளவர்கள் கல்வி மந்திரியாக இருந்தால், அந்த நாட்டின் கல்வி நிலை எல்லா நாடும் போற்றும்படி இருக்கும். அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் கல்வியின் தரம் உயர்ந்து சிறந்த கல்விமான்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். யாருக்கும் பயப்படாமல் அவர் முடிவுகள் எடுப்பார். கல்விச் சாலைகள் பெருகும். அடிப்படை அறிவு மக்களுக்குக் கிடைக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் பெறுவார்.
7. ஹம்ஸ யோகம்: ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 -ம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும். நல்ல நீதிமானாக இருப்பார். இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு மக்களிடம் மதிப்பு இருக்கும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவரை யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.
8. அரசாளும் யோகம்: ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 - ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார்.
9. சகடயோகம்: ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் 'ஷஷ்டாஷ்டகம்' எனப்படும் 6, 8- ம் இடங்களில் அமர்ந்தால், இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் அதிக போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதி மிகவும் யோகமாக அமையும்.
10. கிரகமாலிக யோகம்: ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் உயர்ந்து சமூக அந்தஸ்துடன் மாலை மரியாதையோடு வாழக்கூடிய சந்தர்ப்பங்களை இந்த யோகம் கொண்டு வரும்.
No comments:
Post a Comment