கிரகத்தை காட்டிலும் நட்சத்திரங்கள் முக்கியமானது .
ஒரு கண்ணாடியில் ஒளி விழுவதாக கொள்வோம். கண்ணாடியின் தன்மைக்கும், நிறத்திற்கு ஏற்ப அந்த ஒளி தன்னை மாற்றிக்கொள்ளும். கண்ணாடி சிவப்பு நிறமாக இருந்தால் ஒளியும் சிவப்பாகவும், கண்ணடி தடிமனாக இருந்தால் ஒளி அளவில் குறைவாகவும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
ஒரு கண்ணாடியில் ஒளி விழுவதாக கொள்வோம். கண்ணாடியின் தன்மைக்கும், நிறத்திற்கு ஏற்ப அந்த ஒளி தன்னை மாற்றிக்கொள்ளும். கண்ணாடி சிவப்பு நிறமாக இருந்தால் ஒளியும் சிவப்பாகவும், கண்ணடி தடிமனாக இருந்தால் ஒளி அளவில் குறைவாகவும் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
மேற்கண்ட உதாரணத்தில் கண்ணாடி என்பது கிரகத்தையும் , ஒளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும். ஒளி இல்லை என்றால் கண்ணாடியின் தன்மையை உணர முடியாது அது போல, கிரகமும் நட்சத்திரமும் இணைந்து செயல்பட்டுதான் உலகின் செயல்களுக்கு காரணமாக இருக்கிறது.
நட்சத்திரம் என நான் சொல்லுவது ஒரே ஒரு நட்சத்திரத்தை குறிப்பதில்லை. பிரபஞ்சத்தில் என்னிலா கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது. எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சில தலைப்புகளில் பிரித்துவிடலாம்.
பிறப்பால் அனைவரும் ஒன்றாக இருந்தாலும் அரசும்,மக்களும் ஜாதீய அடிப்படையில் பிரிவு பெருகிறார்களே அது போல. பிரபஞ்ச நட்சத்திரங்கள் 27 வகையானது என பிரிவுபடுகிறது. கவனிக்க. 27 நட்சத்திரங்கள் அல்ல. 27 வகையான நட்சத்திர கூட்டங்கள்.
ராசிமண்டலம் 360 டிகிரி கொண்டது என்பது நாம் கண்டோம்.
இந்த 360டிகிரியில் 27 நட்சத்திரங்கள் எப்படி அமைகிறது என காண்போம்.
இந்த 360டிகிரியில் 27 நட்சத்திரங்கள் எப்படி அமைகிறது என காண்போம்.
360 டிகிரியில் 27 பிரிவு என கொண்டால் (360 / 27= 13 பாகை 20 கலை ) 13.20 என வரும்.
உதாரணமாக ஒரு பெட்டியில் ஒரு டஜன் குளிர்பான பாட்டில்கள் வைக்கலாம் என்றால், உங்களிடம் நான்கு பெட்டியும் நாற்பது குளிர்பான பாட்டில்களும் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?
பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்வி போன்று இருக்கிறதா?
முதல் பெட்டியில் [1 முதல் 12]
இரண்டாம் பெட்டியில் [13 முதல் 24]
மூன்றாம் பெட்டியில் [25 முதல் 36]
நான்காம் பெட்டியில் [37 முதல் 40]
இரண்டாம் பெட்டியில் [13 முதல் 24]
மூன்றாம் பெட்டியில் [25 முதல் 36]
நான்காம் பெட்டியில் [37 முதல் 40]
என பிரித்து வைப்போம் அல்லவா?
அதே போல ராசி எனும் பெட்டியில் நட்சத்திரம் எனும் குளிர்பான பாட்டில்களை அடுக்குவோம். ஒரு நட்சத்திரத்தின் அளவு 13.20. இதை வரிசையாக ராசிமண்டலத்தில் அடுக்கி வரிசைப்படுத்த வேண்டும்.
ஒரு ராசியானது 30 டிகிரி கொண்டது. எனவே இதில் 13.20 + 13.20 என இரண்டு நட்சத்திரங்கள் வைக்கலாம். அப்படி வைத்த பிறகு 26.40 டிகிரி போக ஒரு ராசியில் மீதம் 3.20 டிகிரி எஞ்சி நிற்கும்,அதில் ஒரு நட்சத்திரத்தின் ஒரு பகுதியை வைத்து மீதியை அடுத்த ராசிக்கு எடுத்து செல்லலாம். அடுத்த ராசியில் நட்சத்திரத்தின் 10டிகிரி வரும்.
இவ்வாறாக ராசிமண்டலம் முழுவதும் 27 நட்சத்திரங்களை வைக்க முடியும்.
நமது வீட்டின் ஜன்னல் வழியே வானத்தை பார்த்தால், வானம் சதுரமாக தெரியும். ஆனால் வானம் சதுரம் அல்ல. அது போல ராசி மண்டலம் மூலம் பார்க்கும் பொழுது நட்சத்திரம் 13.20 பாகை அளவே தெரிகிறது. அதனால் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் 13.20 அளவில் தான் இருக்கிறது என முடிவு செய்ய கூடாது.
ஒன்பது கிரகங்கள் மூன்று நட்சத்திரம் வீதம் 27 நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறது. 9X3 =27.
கீழ்கண்ட படத்தில் நட்சத்திரங்கள் எப்படி ராசிமண்டலத்தை அமைக்கிறது என காணலாம்.
நட்சத்திர பெயர்கள் நமக்கு தேவை இல்லை. அஸ்வினி முதல் ரேவதி வரை நட்சத்திரங்களை மனப்பாடம் செய்ய தேவை இல்லை. கீழ்கண்ட வரிசையை மனதில் வையுங்கள். நட்சத்திரத்தை ஆளும் கிரகமும் அது எடுத்துக்கொள்ளும் டிகிரியும் மட்டுமே முக்கியம்.
கேது------13.20
சுக்கிரன்----13.20
சூரியன்----3.20 ----10.00
சந்திரன்----13.20
செவ்வாய்---6.40---6.40
ராகு------13.20
குரு------10.00------3.20
சனி------13.20
புதன்-----13.20
சுக்கிரன்----13.20
சூரியன்----3.20 ----10.00
சந்திரன்----13.20
செவ்வாய்---6.40---6.40
ராகு------13.20
குரு------10.00------3.20
சனி------13.20
புதன்-----13.20
கேது முதல் புதன் வரை உள்ள கிரகங்கள் மேஷம் முதல் கடகம், சிம்மம் முதல் விருச்சிகம், தனுசு முதல் மீனம் என மூன்று நிலைகளில் ஒரே அமைப்பில் தான் இருக்கிறது.
இதில் சூரியன், செவ்வாய், குரு என்னும் கிரகங்கள் மட்டுமே இரு பிரிவுகளாக பிரிந்து இரு ராசிகளில் வரும். மற்றவை முழுமையாக ஒரே ராசியில் இருக்கும்.
இன்றைய பாடம் உங்களுக்கு கணிதமாக இருப்பதாக தோன்றலாம், உண்மையில் இது லாஜிக்கலான விஷயமே அன்றி கணக்கு சார்ந்த விஷயம் அன்று. நட்சத்திர மண்டலம் எனும் இந்த விஷயம் மிகவும் முக்கியனானது. இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் ஜோதிடத்தை கற்றும் பயனில்லை.
நட்சத்திர மண்டலம் எனும் பாடம் இன்றுடன் முடியவில்லை. அடுத்த பாடத்திலும் தொரும்.
ராசி நிலையில் மாதங்கள்
ராசி நிலையில் மாதங்கள்
பன்னிரு ராசிகளும் கால நிலையையும் மாதங்களையும் குறிக்கிறது. ராசி மண்டலம் 360 பாகை கொண்டது என நாம் படித்தோம். சூரியன் தினமும் ஒரு பாகை வீதம் 360 டிகிரியை 365.25 நாட்களில் சுற்றிவருகிறார்.
"சூரியன் சுற்றிவருகிறார்” என படித்தவுடன் உங்கள் பகுத்தறிவு பாசறையை திறந்துவிடாதீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் பஸ் முன்னோக்கி செல்லும் பொழுது அருகில் நிலையாக இருக்கும் பஸ் பின்னோக்கி செல்லுவது போல தோற்றம் கொடுக்கும். அது போல சூரியன் நிலையாக இருந்தாலும், பூமி சுற்றிவருவதால் சார்பியல் கோட்பாட்டின் படி சூரியன் சுற்றிவருவதாக சொல்லுவோம்.
ஐந்தேகால் நாட்கள் அதிகம் வருவதற்கு காரணம் பூமியின் சுற்றுபாதை நீள்வட்டமாக இருப்பதால் அகண்ட வளைவுகளில் அதிகமாக காலத்தை சூரியன் எடுத்துக்கொள்கிறார். சில ஓட்டப்பந்தையத்தில் போட்டியாளர்களை கோணலாக நிற்க வைத்திருப்பார்களே பார்த்திருக்கிறீர்களா? காரணம் ஓடுகளம் நீள்வட்டமாக இருந்தால் ஓடுகளத்தின் வெளிச்சுற்றில் இருப்பவர் அதிக கால அளவு ஓடவேண்டி இருக்கும்.
சூரியன் ஒரு டிகிரி செல்ல ஒரு நாள் எடுத்துகொள்வதால், ஒரு ராசியை முப்பது நாட்களில் கடந்துவிடுவார். ஆக ஒரு வருடம் என்பது சூரியன் பன்னிரு ராசியை 365.25 நாட்களில் சுற்றிவருவதை பொருத்து அமைகிறது.
ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷம் முதல் நாட்களும் மாதங்களும் துவங்கும். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகள் சித்திரை முதல் மீனம் வரை உள்ள மாதங்களை குறிக்கும். சூரியன் மேஷ ராசியில் முதல் பாகையில் சென்றால் அன்று சித்திரை ஒன்றாம் தேதியாகும். மேஷ ராசியில் 15 டிகிரி சென்றால் அன்று சித்திரை 15ஆம் தேதி. எளிமையாக சொல்ல வேண்டுமானால் சூரியன் இருக்கும் பாகைதான் நமக்கு தேதியாக இருக்கும்.
ஒருவர் ஆகஸ்டு 4ஆம் தேதி பிறக்கிறார் என்றால், ஜூலை 15 முதல் ஆகஸ்டு 15 வரை சூரியன் கடக ராசியில் இருக்கும். அதாவது அந்த நபர் ஆடி மாதத்தில் பிறந்திருக்கிறார் என கொள்ளவேண்டும். ஜோதிட ரீதியான மாதம் தெரியவில்லை என்றால் ஆங்கில மாதத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் இருக்கும் சமூகம் மட்டுமே இப்படி இருக்கும் நாள்காட்டியை கொடுக்க முடியும். 550 வருடம் முன்பு வரை ஆங்கிலேயர்களின் காலண்டரில் பத்து மாதங்கள் தான். காரணம் சராசரி மனிதனுக்கு எண்ணிக்கை அவனது பத்து விரலுக்கு மேல் விரிவதில்லை. ஜூலியர் சீசர் காலத்தில் நமது கலாச்சார தாக்கம் காரணமாக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் இடையே இணைக்கப்பட்டது. அதற்கு முன்புவரை செப்,அக்ட்,நவா,டிச என துவங்கும் எண்ணிக்கைகள் 7,8,9,10 எனும் வரிசையிலேயே கிரேக்கர்கள் பயன்படுத்தினர்.
திடிரென இரு மாதங்கள் இணைத்தும் 365.25 நாட்கள் வராத காரணத்தால் ஒரு மாதத்திற்கு 30 அடுத்த மாதத்திற்கு 31 என கொடுக்க ஆரம்பித்தனர். குரங்கு அப்பம் தின்ற கதையாக ஆங்கில நாள்காட்டி அலங்கோலமாக இருக்கிறது.
சித்திரை முதல் பங்குனி வரை கூறப்படும் மாதங்கள் தமிழ் மாதங்கள் அல்ல. மாதத்தின் பெயர்களான சித்திரை, வைகாசி என்பதும் தமிழ் பெயர்கள் அல்ல.
தமிழனுக்கு சொந்தமான நாள்காட்டியை உருவாக்க இங்கு நிறைய குடிதாங்கிகள் இருக்கிறார்கள். அதனால் இந்த மாதங்களை "ஜோதிட மாதங்கள்" என கொள்வோம். விஞ்ஞான ரீதியான நாள்காட்டியை பயன்படுத்தமாட்டோம் என சொல்லும் தமிழனை என்ன என்று சொல்லுவது? சூரியன் தமிழனுக்கு மட்டும் சொந்தமா என்ன? நமக்கு எதுக்கு அரசியல், வாருங்கள் பாடத்தை கவனிப்போம்.
ராசி நிலையில் நேரங்கள் :
சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகை செல்லுவதாக சொன்னேன். ஒரு நாள் என்பது ஒரு மாதம் மற்றும் வருடம் உருவாக காரணமாக இருக்கிறது.
நாள் எப்படி காரணியாக இருக்கிறதோ அது போல நேரம் ஒரு நாள் உருவாக காரணமாகிறது. 24 மணி நேரத்தில் பூமி தன்னை தானே சுற்றுவதை ஒரு நாள் என்கிறோம். எனவே ஒரு ராசிக்கு இரண்டு மணி நேரம் வீதம் பன்னிரெண்டு ராசிகளில் நேரம் ஒரு நாளில் பயணிக்கும்.
( 24 மணி நேரம் / 12 ராசிகள் = 2 மணி நேரம்).
( 24 மணி நேரம் / 12 ராசிகள் = 2 மணி நேரம்).
தினமும் நேரம் சூரியன் இருக்கும் ராசியில் தான் துவங்கும். உதாரணமாக சித்திரை மாதம் ( ஏப்ரல் 14 முதல் மே 15) காலை 5.30 மணி மேஷ ராசியில் துவங்கும். 5.30 என்பது இந்திய தேசிய மணி. ( IST)
காலை 5.30 துவங்கி 7.30 வரை இரண்டு மணி நேரம் , நேரமானது மேஷ ராசியில் பயணிக்கும். 7.30 முதல் 9.30 வரை ரிஷபம் என இரண்டு இரண்டு மணி நேரமாக பன்னிரு ராசிகளை 24 மணி நேரத்தில் நேரமானது கடக்கும்.
மேலே நேரம் என நான் சொன்னதை வடமொழியில் எளிமையாக லக்னம் என சொன்னார்கள். லக்னம் என்பது ராசிநிலையில் நேரம் காட்டும் குறியீடு என அறிக. மிகவும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
மேலே X எனும் குறியீடு லக்னத்தை குறிக்கும்.
முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது , சூரியன் இருக்கும் ராசியிலிருந்து தான் லக்னம் ஆரம்பிக்கும். சித்திரை என்பதால் மேஷ ராசியில், ஐப்பசி என்றால் துலாராசியில் என சூரியன் இருக்கும் ராசியில் தான் காலை 5.30க்கு லக்னம் துவங்கும்.
லக்ன ஓட்டத்தையும் சூரியனின் மாற்றத்தையும் எளிமையாக நினைவில் வைக்க கடிகார முள் சிறந்த உதாரணம். லக்னம் எனும் பெரிய முள் ராசி மண்டலத்தை 30 முறை சுற்றினால், சூரியன் எனும் சின்ன முள் ஒரு ராசி நகரும். எந்த வருடமானாலும் லக்னம் மற்றும் சூரியனின் இந்த மாற்றம் நிலையானது.
ராசிநிலையில் உடல் உறுப்புக்கள்
ராசிகளின் தன்மைகளை சென்ற வகுப்பில் பார்த்தோம். ஒவ்வொரு ராசியும் மனித உடலின் சில பாகங்களை குறிக்கும்.மேஷம் முதல் மீனம் வரை பன்னிரு ராசிகள் குறிக்கும் உடல் பகுதிகள் எளிதில் புரிய படமாக கீழே கொடுத்துள்ளேன்.
ராசிகள் குறிக்கும் உடல் உறுப்புகளை மனதில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி உண்டு. ஒரு மனிதனை தலை முதல் பாதம் வரை மேலிருந்து கீழாக பன்னிரண்டு பிரிவாக பிரித்தால் எளிமையாக கூறலாம்.
ராசிகள் மட்டுமல்லாமல் , கிரகக்களும் மனித உடலின் உறுப்புக்களையும் வியாதியின் தன்மையையும் குறிக்கும்.
சூரியன் : ஆண்களுக்கு வலது கண், பெண்களுக்கு இடது கண், இருதயம், சுத்தமான ரத்தம்
சந்திரன் : பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரயீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள்
செவ்வாய்: அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்
புதன் : நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு
குரு : ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்
சுக்கிரன்: சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்
சனி : தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்
ராகு : அதிகமான வலி, அலர்ஜி
கேது : வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்
சந்திரன் : பெண்களுக்கு வலது கண், ஆண்களுக்கு இடது கண், நுரயீரல், உடலில் உள்ள திரவ பொருட்கள்
செவ்வாய்: அசுத்தமான ரத்தம், கழிவு பொருட்கள், மல துவாரம், உடல் வெப்பம், மூளை மற்றும் இருதயத்தின் இயங்கும் திறன்
புதன் : நரம்பு மண்டலம், விலா எழும்பு, இடுப்பு, உடலின் அமைப்பு, முதுகெலும்பு
குரு : ஜீரண உறுப்புகள், புதிய வளர்ச்சி, சதைப் பற்றுள்ள பகுதிகள், மார்பகம், தொடைப் பகுதி, பிட்டம்
சுக்கிரன்: சிறுநீரகம், கருப்பை, பிறப்புறுப்புகள், உடலில் உள்ள சுரபிகள்
சனி : தோல், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கேசம்,நகம்
ராகு : அதிகமான வலி, அலர்ஜி
கேது : வளர்ச்சியை தடுத்தல், எதிர்ப்பு சக்தியை குறைத்தல்
மனித உடலில் ஏற்படும் நோய் மற்றும் உறுப்பு இழத்தல் (அங்கஹீனம்) ஆகியவற்றை அறிய மேற்கண்ட தன்மைகள் பயன்படும். மேலும் ஒருவரி உடலில் இருக்கும் மச்சம் மற்றும் தழும்புகள் எந்த பகுதியில் இருக்கிறது எனவும் காணலாம். கிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உடல் உறுப்பை குறிக்கிறது, ஆனால் ராகு கேதுக்கள் உறுப்புகளை குறிக்காது. காரணம் ராகு-கேதுக்கள் உருவமில்லா கிரகம் என்பதால், அவை குறிக்கும் விஷயமும் உருவம் இல்லாமல் இருக்கிறது. வலியை கண்களால் பார்க்க முடியுமா?
ராசி தன்மையுடன் இணைத்து கிரகத்தன்மையை பயன்படுத்தும் பொழுது பலன்கள் மேலும் துல்லியமடையும்.உதாரணமாக நோய் கொடுக்கும் கிரகம் ஒருவருக்கு ரிஷபராசியில் இருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு கண், காது, மூக்கு , வாய் மற்றும் தொண்டை பகுதியில் நோய்வரும் என பொதுவாகத்தான் சொல்ல முடியும். ஆனால் கிரகத்தன்மையை இணைத்தால் மேலும் துல்லியமாக்கலாம்.
நோய் கொடுக்கும் கிரகம் சூரியனாக இருந்து ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகருக்கு கண் சம்பந்தபட்ட நோய் மட்டுமே வரும் என சொல்லலாம். காரணம் ரிஷப ராசிக்கும் சூரியனுக்கும் பொதுவான தன்மை கண்கள். மேலும் நீங்கள் நன்கு சிந்திப்பவராக இருந்தால் பலனை ஆழமாக சொல்ல முற்படுவீர்கள்.
கண்களில் நோய்வரும் என்பது மட்டுமல்லாமல் ஜாதகர் ஆணாக இருந்தால் வலது கண்ணிலும், பெண்ணாக இருந்தால் இடது கண்ணிலும் நோய்வரும் என சொல்லி உங்கள் பலனை துல்லியமாக்கலாம்.
மருத்துவ ஜோதிடம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஓர் தனிப்பிரிவு. நடைமுறை உலகிற்கு நன்கு பயன்படக்கூடிய துறையும் கூட. உயர்நிலை மருத்துவ ஜோதிடம் கற்றால் மருத்துவ ஜோதிடர் ஆகி நோய்வரும் தன்மை, எது போன்ற மருத்துவ முறையில் குணமாகும், எவ்வளவு காலம் அவர் நோயில் துன்பப்படுவார் போன்ற விஷயங்காளை சொல்ல முடியும். அனைத்துக்கும் இதுதான் அடிப்படை, எனவே இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
ராசிகள் மற்றும் அதன் பெயர்களை பற்றி தெரிந்து கொண்டோம். இனி ராசிகளின் தன்மைகளை பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசியும் தனக்கென ஓர் தன்மையை கொண்டுள்ளது. இதை பயன்படுத்தினால் பலன் சொல்லும் நிலையில் மேம்மை கிடைக்கும்.
No comments:
Post a Comment