Sunday, 29 September 2019

சந்திரனால் அமையும் யோகங்கள்

சந்திரனால் பலவிதமன யோகங்கள் ஏற்படும்.
1) சுனபயோகம்,2)அனப யோகம், 3) துருதரா யோகம் 4)சந்திரஅதியோகம், 5)அமலா யோகம்,6) வசுமதி யோகம், 7)-சசிமங்கள யோகம்,8-சந்திரிகா யோகம் 9)கல்யாண சகட யோகம், 10)ராஜலட்ச யோகாம், 11)கஜகேசரி யோகம் தருவர்கள். இந்த யோகங்கள் சுப பலன்களை தருபவைகள் .
1)சகட யோகம், 2)கேமத்துரும யோகம், 3)சந்திர சண்டாள யோகம், 4)மாதுர்நாச யோகம் .தீய பலன் தரும்.
சந்திரனை அடிப்படையில் கணக்கிடப் படுககின்ற சிறப்பு வாய்ந்த யோகங்களாகும்.

சுனப யோகம் 1
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டில் சூரியன், ராகு, கேதுவைத் தவிர பஞ்சமவர்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி தனித்தனியே த்தித்இருந்தாலும், இணைந்திருந்தலும் சுனப யோகம் அமையும்.
ஜாதகர் /ஜாதகி உழைப்பினாலும் முயற்ச்சியினாலும் பணத்தை சம்பாதிப்பார்கள், பூமி, சொத்துக்கள், அரச வாழ்வு, பூகழ், புத்திசாதுர்யம் உள்ளவராகவும், செலல்வந்தராகவும் இருப்பார்கள்.
சந்திரனை சனி, சுக்கிரன் பார்வை, இணைவு இல்லமால் இருக்க வேண்டும்.
சந்திரனுக்கு சூரியன், ராகு, கேது இவர்களின் தொடர்பு இல்லமால் இருக்க வேண்டும்.
வளர் சந்திரனக இருப்பது சிறப்பன யோகம் தரும்.
இந்துவுக்கு இரண்டாம் வீட்டில் இனிய கோளிருந்த
காலை
முந்திய சுனப யோகமிதன் பலன் மொழியுங் காலை
சந்தந் தனவான் ராஜன் மன்னன் புத்தியுள்ளான்
சுந்தரப்புவி களெங்குத்து தித்திடுங் கீர்த்திமானாம்
சந்திரனுக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் சுனப யோகமகும் .ஜாதகர் /ஜாதகி அழகனவர், செல்வந்தர், மந்திரி, ராஜ போகவாழ்வும், அரசு உயர் உத்தியோகம், புத்தி சதுர்யம், உள்ளவர்கள், வாகனதி வசதியும் பூகழ் கீர்த்தி அடைவர்கள்.
சோமனார் தனக்கிரண்டில் சனி சுனப யோகம்
தாமிதமாமுன் தந்தை யிசித்து தனங்களில்லைத்
காமுறு சிறுவன் தானு ங்காசினித் ரசானாகித்
தாமிகு தனங்கள் தேடித்தகுதி பெற்றிடுவான்றானே
சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் சுனப யோகம்.ஜாதகர் /ஜாதகியின் தந்தைக்கு யோகமில்லை பிறந்த முதல் தந்தை யாசித்து செல்வங்கள் இல்லதவர்கள் கஷ்டங்களும் அனுபவிvxzvxzcbmப்பார்கள். ஜாதகர் /ஜாதகிக்கு உயர்பதவி, அந்தஸ்தும், அதிக செல்வம் பெற்று சுகபோக வாழ்வு அமையும்.
பாரப்பா இன்னு மொன்று பகரக் கேளு
பானுமைந்தன் பால் மதிக்கு வாக்கில் வந்தால்
கீரப்பா மேம் பாடு சவுக்கியம் செம் பொன்
சிவ சிவா கிட்டுமடா வேட்டல் கூடு
கூறப்பா கோதையினால் பொருளுஞ் சேரும்
கொற்றவனே குடி நாதன் வலுவைபாரு
ஆரப்பா போகருட கடாசத்தாலே
அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
சூரியனின் மகனான சனி சந்திரனுக்கு இரண்டில் வந்தால் அல்லது இருந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம்,சௌபாக்கியம், செம்போன்னும்
சிவ பரம் பொருளின் அருளானையால் யோகம் கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். மனைவியால் தனலாபம் கிட்டும். சனி இருந்த வீட்டின் அதிபதியின், லக்கினாதிபதி பலத்தையும் ஆராய்ந்து அறிந்து கூறவேண்டும்.போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.
சந்திரனுக்கு இரண்டில் செவ்வாவ் ஜாதகர் /ஜாதகி திறமை சாலிகள், தொழில் திறமை உயர்வு தீய சொல்லுடையவர்கள், தலைமை பொறுப்பும், தீய எண்ணணம், கர்வமுள்ளவர்கள், விரோத எண்ணம் உள்ளவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் புதன் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், சாமர்த்தியசாலி, கதை, காவியம், கட்டுரைகள் இயற்றுவர்கள். அனைவர்க்கும் பியமுள்ளவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் குரு பலதொழில்கள் புரிவர்கள், புகழ், அரசு மரியதை, நல்ல குடும்பம், உள்ளவர்கள். சிறப்பன சம்பத்துடையவர்கள்.
சந்திரனுக்கு இரண்டில் சுக்கிரன் காம சுகம், விவசாயம், பூமி லாபம், கால் நடை, வாகன யொகம் பல கலைகள் அறிந்தவர்கள், சுகமுடன் வாழ்வு அமையும்.
சந்திரனுக்கு இரண்டில் சனி ஆராய்ச்சி மனம், மக்கள் மத்தியில் புகழ் ஏற்படும், அதிக தனச் சோர்க்கையுள்ளவர்கள் .மறைமுக காரியங்களில் ஆதாயம் அனைத்திலும் வெற்றி பெறுவர்கள்.

No comments:

Post a Comment