ஜோதிடமுத்துக்கள்
ஜோதிடமுத்துக்கள்: ஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தித்த பின்:
ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு:
லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர். லக்னாதிபதி
இருக்கும் இடம் அவர்மனப்பாங்கை தீர்மாணிக்கும்.
லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றால் நேர்மறை மனப்பாங்கு உடையவர், 1,2,3,4,5,7,9,10,11 ல் இருப்பது நேர்மறை மனப்பாங்கைத் தரும்....
உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீசம் பெறும் பலம் பொறுத்து நேர்மறை மனப்பாங்கை செயல்படுத்தும்
நிலை தரும்.
லக்னாதிபதி 6,8,12ல் இருப்பது எதிர்மறை மனப்பாங்கை தரும். பெறும் பலம் பொறுத்து
செயல்படும் நிலை இருக்கும்.
தீய திசை புத்திகளில் தொடர்ந்து வரும் பிரச்சினைகளால் நமது
சூழ்நிலைகளால் எதிர்மறை மனப்பாங்கு ஏற்பட்டு எல்லா வகையிலும் பிரச்சினைகளை
அதிகரிக்கும்.
நல்ல திசை புத்திகளால் உற்சாகமும் வெற்றி களிப்பும், மகிழ்ச்சியும் உருவதால், நேர்மறை மனப்பாங்கு
ஏற்பட்டு சோதனைகளை சாதனைகளாக,
எல்லோர்க்கும் நல்லவனாகும் நிலை
ஏற்படும்.
6,8,12 , பாதகஸ்தானம், சனி , ராகு , கேது, இவற்றின் திசையில்
சுய புத்தியில் மிகுதியான எதிர்மறை மன்பாங்கு அதிகரிக்கும். சனி ராகு
கேது உபஜெய ஸ்தாணங்களில் இருந்தால் நேர்மறை மனப்பாங்கு தரும் மற்ற நல் பாவங்களின் 1,2,3,4,5,7,9,10,11 மற்றும் சூரி,
சந், செவ், குரு, சுக் திசா புத்திகளில்
நேர்மறை மனப்பாங்கு தந்து வாழ்வில் வெற்றி தரும்.
சூரியன் சனி,
சனி செவ்வாய் தொடர்பு , சேர்க்கை, சம்பந்தம்
சந்தேகபுத்தியை தரும்
ஜோதிட முத்துக்கள் :
லக்னாதிபதி 8
-ல் இருந்தால் - ஜாதகன் கஞ்சனாகவும்
செல்வத்தை சேமிப்பவனாகவும் இருப்பான். லக்கனாதிபதி சுபக்கோளாகில் நீண்ட
ஆயுள் உடையவனாகவும்,
பாபராகில் குறைந்த ஆயுள் உடையவனாகவும்
இருப்பான்.
2-ஆம் அதிபதி 8-ல் நின்றால் -
ஜாதகன் தற்கொலை செய்து கொள்பவனாயும், கபாலத்தைக் கொள்பவனாயும் , உயர்ந்த குடியில்
பிறந்தாலும் வெகு விரைவில் தாழ்ந்த நிலையை அடைவான்.
3 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்-
ஜாதகனின் சகோதரன் நோயாளியாவான். அசுபக்கிரகமானால் 8 - வது வயதில்
ஜாதகனுக்கு நோ...ய் - கண்டத்தை ஏற்படுத்தும். சுபக்கிரகமாயின்
நோயிலிருந்து விடுபடுவான்.
4 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்-
ஜாதகனுக்கு தீராத வியாதி இருந்து கொண்டேயிருக்கும். தீய செயல்களில்
ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
5 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்-
ஜாதகனின் மனைவி ஒல்லியாகவும்,
வீட்டுச்செயல்களை முடிக்க
இயலாதவளாகவும் இருப்பாள்.
6 - ஆம் அதிபதி 8 -ல் நின்றால்-
ஜாதகன் எப்பொழுதும் கவலைப்பட்டவனாகவும், நண்பர்கள் அற்றவனாகவும், எதிரிகளால்
ஆயுளுக்கு பங்கத்தை ஏற்படுத்திக் கொள்பவனாகவும் இருப்பான்.
ஜோதிடமுத்துக்கள் :
பிறப்பு ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம்
வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்
சுக்கிரன் + புதன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற
ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான்.
சுக்கிரன் + குரு + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற
ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான்.
செவ்வாய் + சந்திரன் + சூரியன்- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை
பெற்ற ஜாதகன்- கிராம தலைவனாகும் அமைப்பு உண்டு. பேச்சு திறமையின் காரணமாக
புகழ் பெறுவான்....
சூரியன் + சந்திரன் + புதன் சேர்க்கை- சேர்க்கை சுப ஸ்தானங்களில்
வலிமை பெற்ற ஜாதகன்- அரசனைப் போல செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாவான்
குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால்
ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை
அமையும்.
குரு + சுக்கிரன் + புதன் - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை
பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன்.
குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்பவன்.
செவ்வாய் + சுக்கிரன் + சனி - சேர்க்கை சுப ஸ்தானங்களில் நின்றால் , ஜாதகனுக்கு
பிறக்கும் மகன் நற்பண்புகள் இல்லாதவனாக இருப்பான். அதனால் ஜாதகனுக்கு பொருள்
நஷ்ட...மும் மான இழப்பும் ஏற்படும்.
குரு + சனி சேர்க்கை - வலிமை பெற்று சுப ஸ்தானங்களில் நிற்க -
ஜாதகன், புகழ் உள்ளவன். செல்வம் சேர்ப்பவன். ஒழுக்கமுள்ளவன், கொடுத் வாக்கை காப்பபாற்றுபவன்.
பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவன்.
7-ல் சனி, லக்கனத்தில் - குரு இருக்க பிறந்த
ஜாதகனுக்கு வாதநோய், பக்கவாதம் ஏற்படும்.
5, 9 -ல் சனி இருந்து -அந்த சனியை செவ்வாய் , சூரியன் பார்த்தால்
பல் வியாதி.
லக்கனத்திற்கு 4
அல்லது 10 -ல் - சூரியன் +
செவ்வாய் சேர்க்கை - மலை மீதிருந்து வீழ்ந்து சாவான் அல்லது உயரமான இடத்தில் இருந்து
விழுந்து உயிர் துறப்பான்.
லக்னத்திற்கு 10
- ல் சந்திரன், 7 -ல் செவ்வாய், சூரியனுக்கு 2-ல் சனி இருக்க
பிறந்தவன் - அங்க வீணணாக இருப்பான்.
லக்கனத்திற்கு 10
-ல் சந்திரன், 7 -ல் சுக்கிரன், 4-ல் பாவர்கள்
இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு புத்திரர்கள் ( சந்ததி ) நசிந்து போகும்.
5- க்குடையவன் 10-லும் , 10 -க்குடையவன் 5-லும் பரிவர்த்தனைப்
பெற்று இருப்பது , அல்லது
5- ல் 2 -ஆம் அதிபதி அல்லது புதன் + சனி +
செவ்வாய் --- சேர்க்கைப் பெற்று பலம் பொருந்தி இருக்க பிறந்த ஜாதகர்-
வைத்தியத்தில் வல்லுனர் + இரண சிகிச்சை புரிவதில் சமர்த்தர்.
1-5-9- க்குடையவர்வர் 6- ல் அமர்ந்து 12-ஆம் அதிபதி 5- அமர்ந்து இருக்கப் பிறந்த ஜாதகி-
கர்ப்பச்சேதம் அல்லது வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 - ஆம் வீட்டில் அல்லது 5 -ஆம் அதிபதியுடன் , அல்லது குரு - இவர்களை செவ்வாய்
பார்கினும் அல்லது சேர - பிறந்த ஜாதகிக்கு கர்ப்பத்திலேயே குழந்தை இறந்து பிறக்கும்.
5 -ஆம் வீடு - கன்னி , கும்பமாகி அதில்
புத்திர ஸ்தானாதிபதி + மாந்தி நிற்கினும், 5 -ஆம் வீட்டை 6-8-12- க்குடையவர்கள்
பார்த்தால் தத்துபுத்திரர் உண்டு.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் அதிகமாக தூங்குவாள்
சுகமும், உணவும் அதிகமாக விரும்பமாட்டாள்
யாருக்கும் வஞ்சகம் செய்ய மாட்டாள்...
இவள் மனதில் ஆசையும் இருக்காது.,
பயமும் இருக்காது
கொண்ட கணவன் மீது குறை சொல்ல மாட்டாள்
கணவனே தனக்கு எல்லாம் என்று கருதுவாள்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உருவான தொடையும்,
மெலிந்த காலும்,
கரிய கூந்தலும்,
பருத்த கண்ணும்,
அளவில்லாத தனங்களும், சிறு சொல்
சொல்லுதலும்,
நல்ல அழகும் உடையவள் இவள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் உச்சந்தலை சிறிது
உயர்ந்திருக்கும்
பொய் பேசுவாள்,
ஆனால் அச்சம் இருக்கும்.
அன்பில்லாதவள் போல் காணப்படுவாள்...
அண்டியவருக்கு உதவி செய்வாள்
உறவினரைக் காப்பாற்றுவாள்
இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் தன் பெருமையை
பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்
ஆண் ஜாதகத்தில களத்திரகாரகனான சுக்கிரன் கன்னியில் நின்று அந்த
ஆணுக்கு வரும் மனைவியின் ஜாதகத்தில் கன்னி ராசியில் கேது கிரகம்
இருக்கக்கூடாது. இந்நிலையில் உள்ள ஜாதகம் இணைந்தால் அந்த ஆணின் காமம் அந்த
பெண்ணிடம் செல்லாது. காம விஷயத்தில் விரக்தியே மிஞ்சும். மற்ற கிரக நிலையை
அனுசரித்து விவாகப்பிரிவினைக்கும் இட்டுச் செல்லும். பொருத்தம் பார்க்கும்
போது இந்நிலையை கவனித்துச் சேர்க்க நலம்.
மணவாழ்க்கை மகிழ்ச்சிக்கான விதிகள்
ஒருவரின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய லக்கின ராசிக்கு 7ம் பாவமும், களத்திரகாரகன்
சுக்கிரனும் லக்கின சுபர்களின் சம்பந்தம் பெறவேண்டும்.
இவர்கள் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்று எந்த வொரு பாவ கிரக
தொடர்பு பெறாமல் இருந்தால் அச் ஜாதகரின் திருமண வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை
உறுதியாக கூறலாம். மேலும் 7ம் அதிபதி அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பின்
திருமணத்திற்கு பிறகு முன்னேற்றம் பன்மடங்கு இருக்கும்....
லக்கினத்திற்கும் லக்கினாதிபதிக்கும் கேந்திர கோணங்களில் 7ம் அதிபதி சுபர்
தொடர்பில் இருந்தால் அவரின் மணவாழ்க்கை பிரகாசிக்கும்.
தோஷம் இல்லாத் குருவின் பார்வை 7ம் அதிபதி மேல் இருப்பது யோகத்தை உறுதிசெய்யும்.
சுபரான சனியின் பார்வை 7ம் அதிபதி மேல் இருந்தால் திருமணத்திற்கு பின் யோகத்தை கொடுத்து
நிம்மதியை பரித்துவிடுவார். அல்லது வாழ்க்கை துனைவிக்கு எதேனும் நிரந்தர
நோயை தந்துவிடுவார்.
செவ்வாயின் பார்வை அதிகாரம் மிக்க துனைவி அமைவதற்கான வாய்ப்புகள்
மிக அதிகம் உண்டு. பொதுவாக திரிகோணதிபதிகளின் பார்வை 7ம் அதிபதி அல்லது சுக்கிரன் மேல்
இருப்பது நலம் பயக்கும்.
ஜென்ம லக்கினத்திற்கு 2, 7ம் அதிபதிகள் 6, 8, 12 ல் மறையாமல் இருப்பதும் 2, 7ம் அதிபதிகள் வக்ரம் பெறாமல்
இருப்பதும். ஜென்ம லக்கினாதிபதியும் 7ம் அதிபதியும்
ஒருவருக்கொருவர் மறையாமல் இருப்பதும் நல்லது. ஒற்றுமையை நிலை நிறுத்தும்.
மேலும் ஆண்களுக்கு 7ம் அதிபதி மற்றும் சுக்கிரனும், பெண்களுக்கு 7ம் அதிபதி
செவ்வாயும் , குருவும் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
No comments:
Post a Comment