Sunday, 23 April 2017

ஜோதிடமுத்துக்கள் 2




பாதகாதிபதி யார் ??
=======================
சரத்திற்கு (மேசம், கடகம், துலாம், மகரம்) லாப ஸ்தானமும் 
ஸ்திர ராசிக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சகம்) பாக்ய ஸ்தானமும்
உபயதிற்க்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) களத்திர ஸ்தானமும்...பாதக ஸ்தனங்கள் மற்றும் அதன் அதிபதிகள் பாதகாதிபதிகள்.

சர லக்னத்து பாதகாதிபதிகள் - கால புருஷ சக்கரத்திற்கு பண பர கேந்திரங்களையும் (2, 5, 8, 11) பாதிப்பதை காணவும்
ஸ்திர லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் லக்ன கேந்திரங்களையும் (1, 4, 7, 10) பாதிப்பதை காணவும்
உபய லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் அசுப கேந்திரம் என்னும் அபோலீகதையும் (3, 6, 9, 12) பாதிப்பதை காணவும்.

இதன் மூலம் சர லக்ன பாதகாதிபதி பலம் பெற, பாதகாதிபதி தன் காரகத்துவ மூலம் பணவரவை தடுக்கும், பணம் தேவையற்ற வழிகளில் செலவழியும் அல்லது சேர்த்துவைத்த பணத்தால் அவமானம் ஏற்படும்.
இதன் மூலம் ஸ்திர லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் தொழில், மனைவி மற்றும் ஆரோக்கியம் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும்.
இதன் மூலம் உபய லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் வீரிய இழப்பு, எதிரிகளால் தொல்லை மற்றும் காம எண்ணங்களால் பாதிப்பு போன்றவைகள் ஏற்படும்.

ரிஷிபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய நான்கு லக்னங்களும் ஸ்திர லக்னங்கள்.இந்த லக்னங்களில் பிறந்த பெரும்பாலான ஜாதகர்கள் ஜோதிட கலையில் ஆர்வம் உள்ளவர்களாவும் மற்றும் சிறந்த ஜோதிடர்களாவும் திகழ்கிறார்கள்
பாதகாதிபதி எப்போது நன்மை செய்வார்
====================================
1. பாதகாதிபதி லக்ன திரிகோணத்தில் இருந்து, திரிகோண அதிபதி பலம் பெற நற்பலன்கள் உண்டாகும். முன்னோர்கள் செய்த புண்ணிய காரியங்கள் ஜாதகனை காக்கும்.
2. பாதகாதிபதி லக்ன தொடர்பு கொள்ளாமல், லக்னத்துக்கு மறைவு பெறும் போது நன்மை செய்வார்கள். கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
3. பாதகாதிபதி நீச பங்கம் பெற்று இருக்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
4. தன் சுய வீட்டிற்க்கு மறைந்திருந்தால் நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
5. பாதகாதிபதி திரிகோனாதிபதிகள் நட்சத்திரத்தில் இருக்க பலன் உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
6. பாதகாதிபதி வக்கிரம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
7. பாதகாதிபதியை சனி பார்க்க நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
8. பாதகாதிபதி ராகு மற்றும் கேதுகளின் சமந்தம் பெற நன்மை உண்டு. கெட்டவன் கெட நற்பலன்கள் உண்டு
9. பாதகாதிபதி பலம் இழந்தால் பாதக ஸ்தானமும் பலம் இழக்கும் என்ற கூற்றுபடி, பாதகாதிபதியால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.
10. பாதகாதிபதி திரிகோண அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றால் நற்பலன்கள் உண்டு.
11. பாதகாதிபதி அஸ்தங்கம் பெற, அந்த கிரக காரகத்துவம் பாதிக்கபட்டு, பாதகா ஸ்தனம் பலம் இழக்கும்.
12. பாதகாதிபதி ராசியதிபதியாக வரும்போது தீமைகள் செய்வதில்லை.

குறிப்பு: குரு பாதகாதிபதி வரும் கன்னி மற்றும் மிதுன லக்ன ஜாதகத்தில், குருவின் பார்வை நமையே செய்யும். ஏனெனில் பார்வை என்பது ஒரு கிரகத்தின் காரகத்துவ வெளிபாடு என்பதே. அது பாவஆதிபத்திய வெளிபாடு அல்ல.

பாவம் 
6,8,12 அதிபதிகள் லக்கின அசுபர்கள் இல்லை. லக்கின அசுபர்கள் 3,6,11 ஸ்தானாதிபதிகள் தான். மேச லக்கினம் 1,8க்கு அதிபதி செவ்வாய் லக்கின அசுபர் இல்லை, ரிஷப லக்கினம் 1,6 க்கு அதிபதி சுக்கிரன் அசுபர் இல்லை, கும்ப லக்கினம் 1,12 அதிபதி சனி அசுபர் இல்லை. எந்த பாவமும் நல்ல பாவம் இல்லை, எந்த பாவமும் கெட்டபாவமும் இல்லை. எந்தக் கோளும் நல்வர்கள் இல்லை எந்தக் கோளும் கெட்டவர்கள் இல்லை. அந்த அந்த பாவங்களும் அதன் வேலையை செய்கிறது. இதெபோல் கோள்களும். 6,8,12 ல் நல்ல காரகத்துவங்களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணம். 6 - உப ஜெயம். 8 - பணபரம் (பணம் வரும் வழி). 12 - வெளி நாட்டு வாசம் / படுக்கை சுகம்.
  ராகு
உயிர்யுள்ள தன்மைகளை அழிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை பெருக்கும்
கேது
உயிர்யுள்ள தன்மைகளை பிரிக்கும்...உயிர் அற்ற தன்மைகளை அழிக்கும்

கிரக நீச்சம் யாரைபாதிக்காது?

சூரியன் - வேளாளர்,முதலியார்,வேடர்கள்,மலைவாசிகள்
சந்திரன்- வன்னார்,செம்படவர் செவ்வாய்... குயவர்,கருமன்
புதன்  - செட்டியார்,வாணியர்,கோமுட்டி
குரு - பிராமணர்,சேட்டு,ஜனர்கள்,
சுக்கிரன் - வேசிகள்,நட்டுவனர்,கோனார்,மந்திரி,இடையர்
சனி - அரிஜனம்
ராகு - முகமதியர்கள் 
கேது - கிருஸ்துவர்கள்,

மேற்கண்டவர்களுக்கு கிரகநீசத்தினால்பாதிப்புஇல்லை

திதி சூன்ய ராசிகள்:

திதி - சூன்ய ராசிகள் -அதிபதிகள்
பிரதமை - மகரம், துலாம் - சனி ...சுக்கிரன்
துதியை - தனுசு, மகரம் - குரு சனி
திருதியை - மகரம், சிம்மம் - சனி  சூரியன்
சதுர்த்தி - கும்பம்,ரிஷபம் - சனி  சுக்கிரன்
பஞ்சமி - மிதுனம், கன்னி - புதன்
சஷ்டி - மேஷம், சிம்மம் - செவ், சூரியன்
சப்தமி - தனுசு, கடகம் - குரு , சந்திரன்
அஷ்டமி - மிதுனம், கன்னி - புதன்
நவமி - சிம்மம் - சூரியன்
தசமி - விருச்சிகம் - செவ்வாய்
ஏகாதசி - மகரம்,துலாம் - சனி சுக்கிரன்
திரயோதசி - ரிஷபம் , சிம்மம் - சுக்கிரன்,  சூரியன்
சதுர்தசி - மிதுனம், கன்னி,் - புதன்
துவாதசி - துலாம் மகரம் - சுக சனி

# பௌர்ணமி, அமாவாசை திதி சூன்ய ராசிகள் இல்லை.

# ராகு, கேது சூன்ய ராசிகளில் இருந்தால் அதன் தசாபுத்திகளில் நன்மை தரும்.

# ஒருவர் துதியை திதியில் பிறந்தவரானால் தனுசு, மகரம் சூன்ய ராசிகளாகிறது. அதன் அதிபதிகள் குரு , சனியின் தசாபுத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறுவதில்லை.

# சூன்யமடைந்த கிரகங்கங்கள் நலம் தரும் பாவங்களான, 1,2,4,5,7,9,10,11 இல் இருந்தால் நன்மை தருவதில்லை.

# அவை லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 இல் இருந்தால் நலம் தரும்.

# கேந்திர ஸ்தானங்களில் ஒரு கிரகம் சூன்யம் பெற்றால் தோஷம் நீங்கி நன்மை தரும்.

# சூன்ய ராசிக்குரிய கிரகம் வக்கிரம் நீசம் பெற்றால் நன்மையே தரும்.

# திதி சூன்யம் பெறும் கிரகங்கள் தன் காரக பலத்தை இழந்துவிடும். அதன் காரகத்துவத்தால் பாதிப்பு ஏற்படுத்தும்

# செவ்வாய் திதி சூன்யம் பெற்றால் உடன் பிறப்புகளால் நன்மை இல்லை.

# சந்திரன் திதி சூன்யம் பெற்றால் தாயாரின் அன்பை பெற மாட்டார்.

# சூரியன் திதி சூன்யம் பெற்றால் தந்தை பாசம் குறையும்

# புதன் திதி சூன்யம் பெற்றால் கல்வியில் தடங்கல் ஏற்படும்

# சுக்கிரன் திதி சூன்யம் பெற்றால் திருமணம் தாமதப்படும்

# குரு திதி சூன்யம் பெற்றால் புதல்வர்களால் நன்மை இல்லை

# சனி திதி சூன்யம் பெற்றால் தொழிலாளர்களால் பாதிப்பு ஏற்படும்

சகல தேவதை வசிய அஞ்சனம் :

இதனை நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு எந்த மந்திரம் ஜெபம் செய்தாலும் அந்த தேவதை பிரசன்னமாகி நமக்கு வசம் ஆகும் தொட்டால் சுருங்கி வேர் பேய்தும்பை வேர் சிருமுன்னை வேர் வெண்குன்றி வேர் வெள்ளெருக்கன் வேர் பேய்தேத்தான் வேர் புன்னை வேர் சந்தனவேர் இவைகளை முறையாகக் காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஹோமத் தீயில் கறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பச்சை கற்பூரம் புனுகு கொரோசம் கும்குமப்பு கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி பிரமாணம் சேர்த்து ஒரு ஜாமம் அரைத்து மை...யை எடுத்து வெள்ளி சிமிழில் பத்திரம் செய்யவும்.

சத்துரு வசிய அஞ்சனம்:

வெள்ளைக் காக்கரட்டைவேர் வெள்ளெருக்கன் வேர் வெண் குன்றிவேர் வெள்ளை விஷ்ணு காந்தி வேர் வெண்கொழிஞ்சிவேர் ஆனைவணங்கி வேர் இவைகளை முறைப்படி காப்பு கட்டி சாபம் பொக்கி ஆணிவேர் அறாமல் வெட்டி எடுத்து தீயில் கறுக்கி எடுத்துக் கொண்டு பச்சைக் கற்பூரம் கொரோசனம் புனுகு குங்குமப்பூ கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை வீதம் மேல்கண்ட வேருடன் சேர்த்து கலுவத்திலிட்டு காராம்பசு நேய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரம் செய...்யவும் இதற்கு பூஜை மந்திரம் ஒம் க்லீம் ஸெளம் ஸ்ரீம் நமோ பகவதி ராஜமோகினி க்லீம் க்லீம் சகல ஸ்தாவர ஜங்கமம் மமவசம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா இந்த மந்திரத்தை பத்தொன்பது தினம் ஜெபம் செய்ய வேண்டும் தினம் 1008உருவு வீதம் ஜெபம் செய்தால் மை உயிர்பெறும் இதன் பின் தான் இதைக் கொஞ்சம் எடுத்து நெற்றியில் அணிந்து சென்றால் பகையாளி கிடையாது எதிரி நம்மை காணும் போது வணங்கி மரியாதை செய்வான் இந்த சத்ரு வசியம் மட்டுமின்றி சத்துரு இல்லாமல் எல்லா நன்மையும் கூட அடையலாம்! பெண்களும் இது பயன்படுத்தலாம் ! சத்துருயாராயினும் நமக்கு நண்பராவது உறுதி !

 ஆன்மாவைப் பற்றி அறியும் கலைக்குப்பெயர் ஆன்மீகம்