Friday, 2 June 2017

மருத்துவமும் ஜோதிடமும்

                                                                                                       மருத்துவமும் ஜோதிடமும் 


வயிற்றை வைத்துதான் ஒரு பெண் தாய்மை அடைந்திருக்கின்றாரா இல்லையா என்பதை பொதுவாக கண்டறிகின்றோம்

வயிற்றின் மையமாக இருப்பது தொப்புள்.
சூரியன்தான் அனைத்து கிரகங்களுக்கும் மையமாக இருந்து அணைத்து கிரகங்களையும் இணைக்கின்றது.

சிருஷ்டி இங்கேதான் உருவாக்கப்படுகின்றது. குழந்தை தாயின் தொப்புள்கொடி வாயிலாகத்தான் தனக்கு தேவையான உயிர் சக்தியை பெறுகின்றது.

நவீன மருத்துவம் கூட தொப்புள் கொடியை சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் தேவையான நோய்களை குணப்படுத்தலாம் என்று கூறுகின்றது.

இப்பேற்பட்ட சக்தி வாய்ந்த இடம்தான் தொப்புள். ஓர் உயிர் ஜனிக்கின்ற இடம்.

காலப்புருஷனுக்கு 5க்குரியவர் சூரியன். 5 ஆம் பாவம் புத்திரபாக்கியத்தை குறிக்கும். 
எனவேதான் தொப்புளுக்கு காரகன் சூரியன் ஆவார். சூரியனுடைய சக்தியை நாம் அறிவோம். 5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

நமது இந்து மதத்தில் வழிபாட்டு முறைகள் எல்லாம் நமது சக்தி மையத்தை மறைமுகமாக குறிப்பிடுகின்றது.
(பார்க்க படம்). என்னுடைய ஜோதிடமும் மருத்துவமும் என்ள முதல் பகுதியில் கூட இந்து மத வழிபாட்டில் சில இரகசியங்களை குறிப்பிட்டிருந்தேன். இறைவனின் உருவத்தில் மனிதனின் சக்தி வாய்ந்த இடங்களை மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆங்கிலத்தில் Unconscious நிலை என்று சொல்லப்படும் உணர்வற்ற நிலையில் இருக்கும் நோயாளியின் தொப்புள் கொடியில் அழுத்தம் கொடுத்துவர சக்திநிலை உயிர்ப்பிக்கப்பட்டு நோய் குணமடைய செய்கின்றனர்.

5ஆம் பாவமே நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும். நோய் குணமடைதலையும் குறிக்கும்.

இவ்வளவு இரகசியங்களை கொண்ட நம் ஜோதிடத்தை நம் வழிபாட்டு முறைகளை அழிக்க துடிக்கும் அந்நிய சக்திகளை வேரறுப்போம்

 


                                                                                                                                                                                                 மருத்துவமும் ஜோதிடமும் [2]



சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் கிரகம் புதன் ஆகும்.

புதனின் ஒருப்பகுதி மிகுந்த குளிர்த்தன்மை வாய்ந்த பனிக்கட்டி போன்று இருப்பதாக நவீன விஞ்ஞானம் கூறுகின்றது.

நீங்கள் வெயிலில் செல்லும்போது உங்கள் கழுத்தின் ஒருபுறம் மட்டும் வியர்வையை சுரந்து சட்டை காலரை அழுக்காக்கி விடும்

நீங்கள் வெயில் சென்று வந்த பிறகு கைகளை நீரை பிடித்து பின்னங்கழுத்தை கழுவ உடம்பு நீங்கள் இருக்கும் அறையின் வெப்பநிலையை அடையும் என்று நவீன மருத்துவம் கூறுகின்றது.

நெற்றியை குறிக்கும் கிரகம் புதன். முன்பெல்லாம் உடல் ஜூரத்தால் பாதிக்கப்பட்டால் ஒரு துணியை நீரில் நனைத்து புழிந்து நெற்றியில் வைத்திருப்பார்இள். இது உடலின் வெப்ப நிலையை சரி செய்யும் தன்மை கொண்டது.



                                                       ஜோதிடமும் மருத்துவமும் [3]

முகநூல் நண்பர்கள் இந்த பதிவினை மிகவும் அதிகமாக முகநூல் வாயிலாகவும் வாட்ஸ்அப் மற்றும் இன்னும் பிற சமூக ஊடகங்கள் மூலம் ஷேர் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டுகின்றேன்.

நாடி ஜோதிடத்தில் குரு ஜீவகாரகன் என்று அழைக்கப்படுகின்றார். ஜீவன் என்றால் உயிர் என்று அர்த்தம்.

இந்த ஜீவகாரகனின் ஒரு வீடான மீன ராசியில்தான் சுக்கிரன் உச்சமடைகின்றார். மீனம் பாதங்களை குறிக்கும். 

சுக்கிராச்சாரியருக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை கொண்டவர் என்று புராணங்களில் குறிப்பிடப்படுகின்றது

சுக்கிரனின் அதிபதியான மஹாலக்ஷ்மி தாயாரும் பகவான் ஶ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருப்பதை காணுகின்றோம்.

அதாவது ஜீவன் கால்களிலே அதிலும் குறிப்பாக பாதங்களிலே இருக்கின்றது என்பதை மறைமுகமாக உணர்த்துவதே இதன் தத்துவமாகும். 

அக்குபஞ்சர் மருத்துவம் கூட கைகள் மற்றும் கால்பகுதிகளிலேயே பல சிகிச்சைகளை அளிக்கின்றது.

முக்கியமாக பல்ஸ் மிகவும் குறையும் போது கையின் சுக்கிரனை குறிக்கும் கட்டை விரல், புதனை குறிக்கும் சுண்டு விரல் மற்றும் ஜீவகாரகன் குரு ஆட்சி பெறும் மற்றும் சுக்கிரன் உச்சம் பெறும் கால்களில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்துவதன் மூலம் அவரை உயிர்ப்புடன் இருக்கச்செய்கிறது.

புதன் மீனராசியில் நீச்சம் அடைகின்றது. புத்தியை குறிக்கும் கிரகம் புதன். அதாவது புத்தி சுவாதீனமாவர்கள், மூளைவளம் குன்றியவர்கள் இவர்களுக்கு கூட கால்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அவர்களை உயிர்பிக்க முடியும்.

புதன் புத்தியை குறிக்கும் என்று பார்த்தோம். புதன் கைகளை குறிக்கும் கிரகமாகும். காலப்புருஷனுக்கு ஆறாம் பாவம் நோய்களை குறிக்கும். இந்த ஆறாம் ராசியில் உச்சமடையும் கிரகம் புதன். நீசம் ஆகும் கிரகம் சுக்கிரன்.
நோய் வந்தால் ஜீவன் அவஸ்தை பெறும்.

இறைவனின் கைகள் ஒன்று உள்ளங்கைகளை காட்டி மேல்நோக்கியும் மற்றொரு கை கால்களை நோக்கியும் இருக்கும்.

எனவே புத்தி, அறிவு குறைந்தவர்களுக்கு தொடர்ந்து கைகளில் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தும் போது புத்தி பலம் அடையும். நோய் குணமாகும்.

உயிருக்கு அவசரம், தீவிர நோய் தாக்கத்தில் இருப்பவர்களை காப்பாற்ற கால்களிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். (((இறந்தவர்களின் கால்களை கட்டிவைக்கும் பழக்கம் நமக்கு உண்டு)))

படங்களில் நாம் பார்த்திருப்போம். 
மயக்கமடைந்தவர்களை மார்பில் அழுத்தம் கொடுத்தவுடன் அவர்கள் கண் விழிப்பார்கள். ரஜினி நடத்திய சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும். பல படங்களில் இந்த காட்சிவரும்.
உயிருக்கு போராடுபவர்களை மின்சார அயன்பாக்ஸ் போன்ற வடிவில் உள்ள இரண்டு கருவிகளை மார்பில் வைத்து அழுத்துவார்கள். உடனே உடல் மேல்தூக்கி போடும். சில முறைகள் செய்தவுடன் உடல் உயிர் பெறும்.

ஜீவகாரகன் குரு உச்சமடைவது மார்பை குறிக்கும் கடக ராசியில்தான். எனவேதான் ஆங்கில மருத்துவர்கள் மார்பிலே அழுத்தம் கொடுக்கின்றார்கள். 

பெண்களே எப்போதும் ஆண்களுக்காக தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். நம்மை பெறும் போது கடும் வலியினை அடைந்து இரத்த போக்கையும் அடைந்து மீண்டும் உயிர் பெறுகின்றாள். அந்த சமயத்தில் அவள்படும் பாட்டை வார்த்தைகளால் எழுத முடியாது.

மேலும் நமக்கு பாலூட்டி சோறூட்டி
நமக்கான பல அன்றாட வேலைகளை செய்பளும் பெண்தான்

எனவே அந்த பெண் எப்போதும் உயிர் சக்தியினை பெறுவதற்காக 
புதன் குறிக்கும் கழுத்தில் நகைகளும், குரு உச்சமடையும் பகுதியான மார்பில் தாலியும், கால்களை குறிக்கும் பகுதியில் கொலுசும் மெட்டியும் அணிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த இடம் அழுத்தப்பட்டு உயிர்சக்தி பெறப்படுகின்றது (சில மதங்கள் பெண்கள் ஒரு பொட்டு நகை கூட அணியகூடாதும் என்றும், அணிந்தால் இறைவன் முக்தி தரமாட்டார் என்றும் கூறுவது வருத்தம் அளிக்கின்றது)

திருமணமடைந்த பெண்களே எப்போதும் தாலியுடனும், காலில் கொலுசுடனும் மெட்டியுடனும் இருங்கள். அவைகள் உங்கள் உயிர்காக்கும் கருவிகளாகும்.

ஆத்ம காரகன் உச்சமடையும் தலையில் இருக்கும் நெற்றி வகிட்டில்
குங்குமம் வைக்கும் போது அந்த பகுதியில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனால் ஆத்மபலம் பெறப்படுகின்றது.

புதன், குரு, சுக்கிரன், சூரியன் இவர்கள் குறிக்கும் பகுதியில்தான் உயிர்சத்தும் ஜீவனும் ஆத்மசக்தியும் உள்ளது. இதனை தூண்டியே அக்குபஞ்சர் மருத்துவம் செயல்படுகின்றது.

ஜோதிடமும் மருத்துவமும் கசடற கற்ற ஒரு மருத்துவரால் எந்த ஒரு தீவிர நோயின் தாக்கத்தால் இருந்தாலும் கூட அவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கூறி எனது ஆராய்ச்சி கட்டுரையை முடிக்கின்றேன்



 

 

No comments:

Post a Comment