Thursday, 1 June 2017

பரிகாரம்

                                                             






                                                                   பரிகாரம்
 ஜாதகத்தில் கால சர்ப்ப தோசமிருந்து ராகு தசை -கேது புக்தியோ அல்லது கேது தசை -ராகு புக்தியோ நடந்தால் அவர்களுக்கு பல விதமான தடைகள் உண்டாகும். அவர்களை ஏதாவது ஒரு வழியில் கட்டிப்போட பலர் முயற்சிப்பார்கள். அவர்களை செயல்பட முடியாமல் தடுக்க பலர் முயற்சி செய்வர்.










 

கால சர்ப்ப தோசத்திற்கு பரிகாரமாக கோயிலுக்கு மணி வாங்கித்தரலாம்.




 

நாதஸ்வரத்தில் 7 துளைகள் உள்ளன. அவை சப்த கிரகங்களை குறிப்பவை. நாதஸ்வரம் ஒரு பக்கம் அகன்றும், இன்னொரு பக்கம் சிறுத்தும் இருக்கும். அகன்ற பாகம் ராகுவை குறிக்கும், சிறுத்த பாகம் கேதுவை குறிக்கும். கால சர்ப்ப தோசம் உள்ளவர்கள் நாதஸ்வர இசை கேட்டால் கிரக பாதிப்புகள் குறையும்.




வீணையில் 7 நரம்புகள் உள்ளன. அவை சப்த கிரகங்களை குறிப்பவை. வீணை ஒரு பக்கம் அகன்றும், இன்னொரு பக்கம் சிறுத்தும் இருக்கும். அகன்ற பாகம் ராகுவை குறிக்கும், சிறுத்த பாகம் கேதுவை குரிக்கும். வீணையில் 4 பெரிய நரம்புகளும், 3 சிறிய நரம்புகளும் இருக்கும். 4 பெரிய நரம்புகள் ஆண் கிரகங்களையும்(சூரியன், செவ்வாய், குரு,சனி), 3 சிறிய நரம்புகள் பெண் கிரகங்களையும்(சந்திரன்,சுக்கிரன்,புதன்) குறிக்கும். கர்பினிப்பெண்கள் வீணை இசை கேட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல மூளை வளச்சியோடு அறிவாளியாக பிறக்கும் என கூறப்படுகிறது. கால சர்ப்ப தோசம் உள்ளவர்கள் வீணை இசை கேட்டால் கிரக தோச பாதிப்புகள் குறையும்.

No comments:

Post a Comment