Sunday, 23 April 2017

ஜோதிடமுத்துக்கள் 1





இவர்கள் யாருடனும் சேர்ந்து கெட்டுவிட கூடாது. குறிப்பாக இவர்கள் நின்ற வீட்டதிபதிகள் ராசியிலோ அல்லது அம்சத்திலோ நீச்சம் பெறக்கூடாது. ராகு கேதுக்களுடன் சேரவும் கூடாது.
ஒருவரின் ஜாதகத்தில் திருமண பாவகங்களான 1,2,4,7,8,10,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப் பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்சிகரமானதாக‌ இருக்கும்,.பொதுவாக 7ம் மிடம் சுத்தமாக இருப்பது அவசியம்.

சம்போக விஷயம்:

திருமணம் ஆன தம்பதியினரின்  தாம்பத்யம் (உடல் உறவு ) வைத்துக்கொள்ள கூடாத நாட்கள்...

ஏகாதசி , பவுர்ணமி , அமாவாசை ,மாதப் பிறப்பு ஆகும்.
இது தவிர மாதவிடாய் ஏற்பட்ட முதல் மூன்று நாட்களும் சேர்க்கைக்கு ஆகாத நாட்களாகும்.

பெண்ணானவள் மாதவிடாய் முடிந்த நான்காம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த கல்வியாளனாக இருக்கும்

6ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த தவ வலிமையும் ஞானமும் உடையதாக இருக்கும்
7,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை கொடைத் தன்மை மிகுந்ததாகவும், தயை தாட்சண்யம் கொண்டதாகவும் இருக்கும்
9ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையானது செல்வச் செழிப்பு மிக்கதாக இருக்கும்
10ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது காமம் மிகுந்ததாகவும், பெண் மோகங் கொண்டதாகவும் இருக்கும்
12ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது சிறந்த பாண்டித்தியமுடைய நிபுணராகவும் 
கல்வி , கேள்விகளில் வல்லவனாகவும் விளங்கும்
15,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையும் 
16ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையும் சிறந்த யோகியாகவும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகவும் இருக்கும்
நல்ல நாட்கள் மட்டுமே பதிவிடப்பட்டு உள்ளது. நன்றி-காளிதாஸர், உத்தர காலாமிர்தம்
புகழ் உடைய குழந்தை பிறக்க. ஒருவருடைய சாதகத்தில் குரு,செவ்வாய்,சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து 1,2,5,9,11 ஆகிய ஜந்து வீட்டில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் இளமையிலே பேரும்,புகழும் அடைய கூடிய குழந்தை பிறப்பான்.

புத்திர தோஷம்

ஒரு ஜாதகத்தில் புத்திர ஸ்தானம்என்பது ஜந்தாமிடம் அதேபோல் 
ஜந்தாமிட அதிபதி புத்திரஸ்தானாதிபதி,குரு புத்திரகாரகன்....
ஒருவருக்கு குழந்தை பாக்கியம் குறைவின்றி கிடைக்க மேற்கண்ட மூன்று ஸ்தானங்களும் பாதிப்படைய கூடாது.

மேற்கண்ட மூன்று ஸ்தானங்களுடன் பாவிகள்( ராகு,கேது,சனி) சேர்க்கை, பார்வை, நட்சததிர சாரம் பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும்,
இதேபோல் குரு, புத்திர ஸ்தானதிபதி நீசம்,அஸ்தங்கம்,பகை மற்றும் மறைவு ஸ்தானங்களிலிருந்து பாவிகள் பார்வை பெற்று,சுபர் பார்வையின்றி இருந்தாலும் புத்திர தோஷம்

பரிகாரம் :ராகு,கேது ஸ்தலங்களுக்கு சென்று சர்ப்ப சாந்தி பரிகாரம் செய்து கொள்ளவும்.
குரு ஸ்தலத்திற்கு வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
அரச மரம் சுற்றி வந்து சுமங்கலி பெண்களுக்கு பூ,பொட்டு,மஞ்சள்,துணி தாணம் செய்யவும்

1.ஜந்துக்குசடையவர் புதன் வீட்டில் ஏறி ஏகனாய் தனித்து நின்றால்குழந்தை இல்லை.கூட்டு கிரகம் இருந்தால் அல்லது பார்வை பெற்றால் மறுதாரம் செய்து 7 ஆண்டுக்கு பிறகு ஆண்குழந்தை பிறக்கும்
2.குருவோடு,சூரியன் அவருக்கு ஏழில் சனியும்,செவ்வாயும் சேர புத்திர வம்சம் நிற்காது.சந்திரன் கூடியிருக்கில் தாய்க்கு தோஷம்....
நன்றி கேரள சோதிடம்

திருவாதிரை நட்சத்திரத்திலாவது,அஸ்த்த நட்சத்திரத்திலாவது புத்திர ஸ்தானதிபதி இருந்தால் புத்திரன் இல்லை.

புத்திர ஸ்தானதிபதி புதனாகி சனி வீடு ஏறினாலும், புத்திரஸ்தானாதிபதி சனியாக அமைந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரம் இல்லை என பிரஹத் சோதிடம் கூறுகிறது.

அதிமதுரம் :
மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்!!!
ம‌ணமாகியும் இன்னும் குழந்தை பேறு கிட்ட‍வில்லையே என்று ஏங்கும் கணவன் மனைவிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அவர் களுக்கு ஓர் இனிப்பான
செய்தி...
அதிமதுரம், உலர் திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாத விடாய் தொட ங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், 6 ஆவது நாளில் கணவனுடன் தாம்பத் தியம் கொள்ளும் பெண்ணுக்குக் கருத்தரிக்கும். சில பெண்களுக்கு இது தாமதப்படலாம். அவர் கள் சோர்ந்து போகாமல் கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள்வரை இதுபோன்றே சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கூடிய விரைவில் எதிர்நோக்க‍லாம்.


புதன் அஸ்தங்கம் ஒருவரை கல்வியில் சிறந்தவர் ஆக்கும். புதன் வக்கிர அஸ்தங்கம் ஒருவரை மிக சிறந்த அறிவாளியாக்கும். எனினும் சந்திரனின் நிலை கொண்டே அவர்களின் புத்திசாலிதனத்தை (நல்ல வழி/தீய வழி ) செயல்படுத்தும் என்ற நிலை அமையும். ஏனெனில் புதனின் இயக்கம் சந்திரனின் நிலை பொருத்தது.
இங்கே சந்திர நிலை என்பது
1. சந்திரனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்,
2. சந்திரனை பார்க்கும் கிரகம்
3. சந்திரன் அமர்ந்த நட்சத்திர அதிபதி....
4. சந்திரன் உச்சம் மற்றும் நீசம்
5. சந்திரன் இருக்கும் ராசி
Note: சந்திரனுடன் குரு சேர்க்கை இதில் சிறப்பு மிக்கது

சந்திரன், சுக்ரன் , ராகு ஆகியவை பெண் கிரகங்கள்சூரியன், செவ்வாய், குரு ஆகியவை ஆண் கிரகங்கள்.புதன், சனி, கேது ஆகியவை அலி கிரகங்கள்.

அமாவாசையில் பிறந்தவர்களிடம் ரகசியம் அறிய முடியாது.பௌர்ணமியில் பிறந்தவரின் ரகசியம் உடன் அறியலாம்.

சுகத்திலும்(4),விரயத்திலும்(12) பாவியிருக்க(பாவ கிரகங்கள்) பஞ்சம ஸ்தானாதிபதியுடன்(%) கதிரோன் மைந்தன்(சனி) கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் பிள்ளை இல்லாமல் போகும்.

ஆறுமி ஆறுதன்னில் அம்புலி கதிரோன் சேர 
கூறுவார் ஈனம் என்று கொடும் பிணி விரோதன்
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதுடன் 
வேறு வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு." 
பலன்: சூரியனும்,சநதிரனும் 12_ல் கூடினால் தாய்,தந்தை செல்வம் குறைவதோடு தனித்தனியாக வாழ்வார்கள்.

பேசிடும் நாலாமாதி பலத் திரி கேண மேறில்
காசி யாத்திரையே போவான் கணக்கனும் பார்வை
யுற்றால்
தேசமும்சுற்றி மன்னன் திசையெட்டும் பேரு மோங்க
வாசமாயிருக்கப் பூவியில் வணங்கு வாரிவரைத்தானே
...
நான்காம் அதிபதி பலம் பெற்று 1-5-9-ல் இருந்தால் பல புண்னிய திர்த்த யாத்திரைகள் செல்வார்கள். புதனும் நான்காம் அதிபதியை பார்த்தால் பல நாடுகள் சுற்றி வருவர்கள். எட்டு திசையிலும் மன்னனைப்போல் புகழ் பெறுவர்கள். உலகில் அனைவரும் இவரை வணங்குவர்கள்.
பிரபல சாமிஜி சர்சைக்குரீய ஒருவர் ஜாதகத்தில் இந்த அமைப்புள்ளது.

நவக்கிரக காரகத்துவங்கள் :

சூரியன்: தந்தை, மகன், வலது கண்,அரசாங்கம், அமைச்சர், ஆத்மா, புகழ்,கீர்த்தி, மாநகரம், நிர்வாகப்
பொறுப்பில் உள்ளவர், சிவன்,...அரசியல்வாதி, வீட்டின் வலது ஜன்னல்,சந்தன மரம், தேக்கு, பொன் ஆபரணம்,மண், அணுத் தொழில், அறுவைசிகிச்சை நிபுணர், துப்பறிதல்,தந்தையின் தொழில்.

சந்திரன்: மனம், ஆழம், அறிவு, தாய்,மாமியார், திரவப் பொருள், பயணம்,உணவுப்பொருள், இடது கண்,
இடமாற்றம், கற்பனை, பால், நதி,கள்ளக்காதல், வீட்டின் இடப்புற ஜன்னல்,துர்நடத்தை, குளிர்ச்சி, தாய்மாமன்மனைவி, சோதிடம், அரிசிவியாபாரம், பழ வியாபாரம், கவிதை,ஓவியம், நீர் தொடர்பான தொழில்,பார்வதி.

செவ்வாய்: சகோதரன், கணவன், பழி வாங்குதல், மனவலிமை,காவல்துறை, இராணுவம், வெட்டுக்
காயம், வீரம், பூமி, ரத்தம், பல்,முருகன், எதிரிகள், கூர்மையான ஆயுதம், திருமணம், விவசாயம்,
அடுப்பு, மின் கருவி, பாறை, வீட்டு உத்திரம், தீயணைப்புத் துறை,செங்கல் சூளை, தாதுப் பொருட்கள்,
பொறியியல் துறை, சுரங்கத் துறை, அறுவை சிகிச்சை.

 செவ்வாய் காரகத்துவம் : { ஆண்கள் }

கட்டுக்கோப்பான உடல், குறையில்லாத ரத்த ஓட்டம், சுகபோகம் தரும் வீரியம், ஆகிய தன்மைகள், செவ்வாய் நல்ல முறையில் ஒரு ஆண் ஜாதகத்திலிருந்தால் அமையக்கூடியனவாகும்.
 செவ்வாய் காரகத்துவம்: { பெண்கள் }
காலத்தே பூப்பெய்துதல், முறையான மாத விடாய் ஆகியன, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் அமையக்கூடியனவாகும்.

புதன்: கல்வி, அறிவு, வணிகம்,பேச்சுத்திறன், நிலபுலன், கணக்கர்,கணிதம், பத்திரிகைத் தொழில்,
நண்பன், இளைய சகோதரி, சகோதரன், தாய் மாமன், காதலி, காதலன், சட்டம்,கைகள், கழுத்து, வரவேற்பு அறை,உள்ளங்கை, சோதிடம், தொலை பேசி,புலனாய்வுத் துறை, தரகு,
மஹாவிஷ்ணு, தூதரகப்பணி.

குரு: ஜீவன், வேதம், பக்தி, ஞானம்,ஒழுக்கம், கோவில், வழக்கறிஞர்,நீதிபதி, உயர்குலம், ஆசிரியர்
கௌரவம், சாந்த குணம், தெற்கு,சதை, தொடை, பூஜை அறை, பசு,அமைச்சர், நிர்வாகி, மூக்கு,
கரும்பு, வாழை, சோதிடம்,நீதித்துறை, தட்சணாமூர்த்தி.

சுக்கிரன்: மனைவி, சகோதரி,காமம், காதல், பாடகன், நடிகன், வீடுசுகம், வாசனைத் திரவியங்கள்,
ருப்பை, கன்னம், வட்டித் தொழில், மதுபானம், ஆடை ஆபரணங்கள், மலர்,வேசி, திருமணம், பிந்து, பணம்,இனிப்பு, சிறுநீரகம், கேளிக்கை விடுதி, துணிமணிகள், பிரம்மா,மஹாலட்சுமி, மூத்த சகோதரி,
மூத்த மரு மகள்.

சனி: மூத்த சகோதரன், சேவகன்,கழுதை, எருமை, தொழில்காரகன்,தாடை, பிட்டம், பூட்டு, ஜீரண
உறுப்பு, சேமிப்பு அறை,சாப்பாட்டு அறை, சாலை, வாயுசம்பந்தமான நோய், நிலக்கரி,
சோம்பேறித்தனம், பிச்சை எடுத்தல்,தொழிற்சாலையில் எடுபிடிவேலை, ஹோட்டல் சுத்தம் செய்யும்
வேலை, பழைய பொருள் விற்பனை,துப்புறவுத் தொழில், கால்நடைவளர்த்தல், லட்சுமி, பரமசிவன், கர்மா,அரசு தூதுவர்.

ராகு: வாய், உதடு, காது, முஸ்லீம்,கோபுரம், அகலமான வீதி, தகப்பன்வழிப் பாட்டன், தலை, நிழல், மாயை,குடை, பாம்பின் தலை, கடத்தல்தொழில், உலர்ந்த தோல், பிளாஸ்டிக்,இரசாயனம், மொட்டை மாடி,சேமிப்புக் கிடங்கு, விதவை,தொழுநோய், மருத்துவம்,வெளிநாட்டு வர்த்தகம், விபசாரம்
செய்தல், வாகனம் ஓட்டுதல், சினிமாத்தொழில், போகக்காரகன்.

கேது: சாயா கிரகம், மோட்ச காரகன்,கயிறு, நூல், கூந்தல், மூலிகை,பாம்பின் வால், குறுகிய சந்து,
மருத்துவம், சோதிடம், ஆன்மீகம்,சட்டத்துறை, துறவறம், தாய்வழிப்பாட்டன், நரம்பு, குளியல் அறை,
ஞானம், தவம், மனவெறுப்பு,கொலை செய்தல்.




No comments:

Post a Comment