Tuesday, 31 May 2022

*உயிர்களுக்கு உணவிடும் சூட்சும* *பரிகாரம்*!!

 

*உயிர்களுக்கு உணவிடும் சூட்சும* *பரிகாரம்*!!
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்த உயிர்களுக்கு என்னென்ன உணவுகளை வழங்கி பலன் தேடி கொள்ளலாம் என்பதற்கான சூட்சும பரிகாரம்
மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்களுக்கு உணவிட்டு வருவது நம் அனேக பிரச்சனைகளுக்கு உடனடி பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும்.
அன்றாட வாழ்வில் அதன் பயனை உணரலாம்.
மேலும் உயிர் வதை (அசைவ உணவு) செய்யாமல் இருப்பதும், உணவுக்காக வெட்ட அழைத்து செல்லப்படும் பசுக்களை காப்பாற்றி பசு மடங்களுகளில் சேர்த்து-பசு வதையை தடுப்பது சனி,ராகு,குரு, சுக்கிரன் போன்ற கிரகங்களை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது நீண்ட நாள் பிரச்சனைகள் பலவற்றுக்கு திடீர் தீர்வினை தேடித்தரும் மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும்..
இங்கே ஒவ்வொரு நாளிலும் எந்தெந்த உயிர்களுக்கு என்னென்ன வகை உணவுகளை உணவிட்டு பலன் தேடி கொள்ளலாம் என்ற விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜாதகம் இருப்பவர்கள்/இல்லாதவர்கள் அனைவரும் ஏழு நாட்களும் தங்களால் முடிந்த அளவு உணவிட்டு பலன் அடையலாம்.
நாட்கள் - கிரகம் - உணவு
ஞாயிறு - சூரியன் - சப்பாத்தி மற்றும் ஊற வைத்த கோதுமை பசுக்களுக்கு கொடுக்கலாம். வெல்லம் குரங்குகளுக்கு கொடுக்கலாம்.
திங்கள் - சந்திரன் - கோதுமை மாவை சீறிய உருண்டைகள் செய்து மீன்களுக்கு உணவிடலாம். (வீட்டில் உள்ள மீன் தொட்டி மீன்களுக்கல்ல). பசுவிற்க்கு நீர் வைக்கலாம்
செவ்வாய் - செவ்வாய்- ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் வெல்லம்- குரங்குகளுக்கும் இனிப்பு பொடி - எறும்புகளுக்கும்
வழங்கலாம்
புதன் - புதன் - பச்சை புற்கள் மற்றும் அகத்தி கீரை பசுக்களுக்கு வழங்கலாம். குதிரைவாலி அரிசி (உணவு பொருள்-நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) புறாக்களுக்கு வழங்கலாம்
வியாழன் - குரு - ஊற வைத்த கொண்டை கடலை - குதிரை மற்றும் பசுக்களுக்கு வழங்கலாம்.சோளம் புறாக்களுக்கு வழங்கலாம்.
வெள்ளி - சுக்கிரன் - பூனைகளுக்கு பாலும் பசுக்களுக்கு புற்கள் அல்லது அகத்தி கீரையும் வழங்கலாம்.
சனி - சனி - கருப்பு நிற நாய்கள் மற்றும் கருப்பு நிற பசுக்களுக்கு நல்லெண்ணையில் சுட்ட சப்பாத்தி அல்லது வேறு உணவுகளை வழங்கலாம்.
புதன் அல்லது சனி கிழமைகளில்- ராகு - எருமைகளுக்கு தீனி வைத்தல் மற்றும் யானைகளுக்கு இலை தழை ஏதேனும் வழங்கலாம்.
கேது- நாய் வளர்க்கலாம், அல்லது முயல், பசு எது முடிகிறதோ வளர்க்கலாம். ஆனால் அவைகளை துன்புறுத்தாமல் தினசரி உணவிட்டு பராமரிக்க வேண்டும். லக்னத்தில், அஷ்டமத்தில் கேது, கேது திசை நடப்பவர்கள் இவற்றை செய்து பலன் அடையலாம்.
பொதுவாகவே தினசரி நாய்களுக்கு ஒரு மூன்று ரூபாய் பிஸ்கட் பாக்கெட் ஆவது வாங்கி போட்டு வருவது நலம்.
மேலும் உங்கள் குழந்தைகளுக்கும் நாய்,பூனை சிறு உயிரினங்கள்,
எறும்பு போன்றவற்றை துன்புறுத்தாமல் இருக்க கற்று கொடுத்து, கர்ம வினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி வாருங்கள்.

🔯 தாரா பலன் எனும் [ நட்சத்திர பலன்

 🔯 தாரா பலன் எனும் [ நட்சத்திர பலன்

உங்கள் நட்சத்திரத்தின்
♦நலம் தரும் ‘சம்பத்து தாரை’
♦ஜெயிக்க வைக்கும் ‘சாதக தாரை’
♦வளம் தரும் ‘மைத்ர தாரை’
♦சிக்கல் தரும் ’வதை தாரை’;
♦பாவக்கணக்கு தீர்க்கும்
ஜென்ம தாரை’!
ஜென்ம நட்சத்திரம் என்பது உங்களின் பிறப்பின் நோக்கம் எதுவோ அதைச் செய்யும். இது ஜென்ம தாரையாகும் ( தாரை என்றால் தருவது.. நம்மை வந்து சேர்வது என்று பொருள்).
♦சம்பத்து தாரை என்னும் இரண்டாவது நட்சத்திரமே உங்களுக்கு பலவித நன்மைகளைத் தரும். அதாவது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தரும். அந்த நட்சத்திரக்காரர்களே உங்களுக்கு பல வகைகளிலும் உதவிகரமாக இருப்பார்கள்.
இரண்டாவது நட்சத்திரம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கும். பணவரவு, திருமணம், புத்திர பாக்கியம் உருவாகுதல், எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைப்பது, நல்ல வேலை கிடைப்பது, மனம் மகிழும் சம்பவங்கள் நடப்பது இவையனைத்தும் இந்த “சம்பத்து தாரை”? நட்சத்திரத்தின் வேலை!
♦மூன்றாவது நட்சத்திரம் நீங்கள் வேதனைகளை, துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைகிறது. உதாரணமாக ஒரு சிக்கலில் சிக்கி மன நிம்மதி தொலைத்தால்.. அந்த நிகழ்வு எப்போது, எந்த நட்சத்திர நாளில் நடந்தது என்று என்பதைக் கவனியுங்கள். நிச்சயமாக அது மூன்றாவது நட்சத்திரமாகத்தான் இருக்கும். ’நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். ஆனால் எங்கிருந்தோ வந்து இப்படி சிக்கலில் மாட்டிவிட்டுட்டானே’ என உங்களைப் புலம்ப வைத்தால் அது நிச்சயம் மூன்றாவது நட்சத்திரமாகவோ மூன்றாவது நட்சத்திரக்கார்களாலோ
தான் நடந்திருக்கும். அதாவது விபத்து தாரையாகத்தான் இருக்கும். விபத்து என்றால் அடிபட்டு காயம் ஏற்படுதல் மட்டுமல்ல... எதிர்பாராத துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தாலும் அதுவும் விபத்துதான். பயணங்களில் ஏற்படும் விபத்தும் இந்த மூன்றாவது நட்சத்திர நாட்களில்தான் நடக்கும். ஆகவே, இந்த “விபத்து தாரை” நட்சத்திர நாளையும் நட்சத்திரக்காரர்களையும் தவிர்த்து விடுங்கள்.
♦4 வது நட்சத்திரம்“க்ஷேம தாரை” என்னும் சுகபோக தாரை நட்சத்திரமாகும்.
வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் எண்ணம் வருகிறதா? அல்லது அது தொடர்பான தகவல்கள் உங்களை வந்து சேர்கிறதா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரமாகத்தான் இருக்கும்.நான்காவது நட்சத்திர நாளாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை தொடர்வதற்கும், ஆதாயம் தரக்கூடிய பயணங்களை மேற்கொள்ளவும் நான்காவது நட்சத்திர நாளாகத்தான் அமைந்திருக்கும். இப்படி சொத்து சுகம் சேர்வதற்கும் ஆனந்த வாழ்வுக்கும் காரணம் இந்த நான்காவது நட்சத்திரம் “க்ஷேம தாரை” என்னும் சுகபோக தாரை நட்சத்திரமாகும்.
♦5வது நட்சத்திரம் “பிரத்தியக்கு தாரை” என்னும் பிறருக்கு நன்மையை தரும் தாரை!
மிகுந்த எதிர்பார்ப்போடு.. நிச்சயமாக நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும், என்று ஒரு காரியத்தில் முழுவீச்சாக செய்து வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த காரியம் முடிந்தவுடன் அந்த நபர் “ரொம்ப நன்றி சார், நீங்க மட்டும் இல்லேன்னா இது நடந்திருக்காது. வாழ்நாள் முழுசும் மறக்க மாட்டேன்” என்று நன்றியை மட்டுமே பரிசாகத் தருகிறாரா? நிச்சயமாக அது உங்கள் நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரமாகத்தான் இருக்கும், அதாவது அந்த காரியத்தை நீங்கள் தொடங்கியது அந்த நட்சத்திர நாளில்தான்! அந்த 5வது நட்சத்திரம் “பிரத்தியக்கு தாரை” என்னும் பிறருக்கு நன்மையை தரும் தாரை! ஆனாலும் உங்களுக்குப் புண்ணியங்கள் சேரும். ’புண்ணியம் சேருவது இருக்கட்டும் சார்! பணம் கிடைக்கவில்லையே’ என விரக்தியாக கேட்பது புரிகிறது. என்ன செய்வது..? இது பணம் சம்பந்தப்பட்ட விஷயமில்லை. புண்ணியம் தரக்கூடிய காரியங்கள். ஒரு காரியம் தொடங்கும்போது, நாள், நட்சத்திரம் பார்க்கச் சொல்வது இதற்காகத்தான். இனியாவது நாள் நட்சத்திரம் பார்த்து தொடங்குங்கள். நன்மைகள் கிடைக்கும்.
♦6.ஆறாவது நட்சத்திரமான “சாதக தாரை”உங்களுக்கு எதிரான விஷயத்தை உங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டுமா? வழக்கு போட்டு வெற்றி அடைய வேண்டுமா? நல்ல நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வியாபார அனுகூலம் கிடைக்க வேண்டுமா? தொழில் வியாபாரம் தொடங்க வேண்டுமா? மொத்தத்தில் எடுத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரமான “சாதக தாரை” நட்சத்திரத்தில் செய்தால் முழுமையான வெற்றி உறுதி. நூறு சதவீத வெற்றி நிச்சயம்!
நம்பிக்கையோடு குறுகிய காலத்தில் திருப்பி தந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு கடன் வாங்குகிறீர்கள்..ஆனால் ஏதோ சிக்கல். அந்தக் கடனை அடைக்க முடியவில்லை, பணப்புழக்கம் இருந்தாலும் அந்தக் கடனை அடைக்க முடியவில்லை. ஏன்?
♦7 வது நட்சத்திரமான “வதை தாரை”சரி, அடுத்து உடல்நலத்தில் சிறிய பிரச்சினை, மருத்துவர் பல பரிசோதனைகள் செய்யச் சொல்கிறார். நீங்களும் பணம் செலவு செய்து சோதனை செய்கிறீர்கள். முடிவில். ஒன்றும் பிரச்சினையில்லை சாதாரண கேஸ் டிரபிள் தான் என மருத்துவர் சொல்கிறார். நீங்களும் நிம்மதியடைகிறீர்கள். ஆனால் செலவுகளும் மன உளைச்சலும் உண்டாகிறது! ஏன்?
அலுவலகத்திலோ அல்லது உறவுகளிடமோ அல்லது நண்பர்களிடமோ கிண்டல் செய்வதாக நினைத்து ஒரு வார்த்தையை விடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அது அவர்களை காயப்படுத்தி உங்களுக்கு எதிராக மாறுகிறது. எதிர்ப்பாகவே மாறிவிடுகிறது. ஏன்?
மேற்கண்ட மூன்று சம்பவங்களுக்கும் காரணம்... நீங்கள் செய்த இந்த மூன்று விஷயமும் உங்கள் நட்சத்திரத்திற்கு 7வது நட்சத்திரமான “வதை தாரை” நாளில் செய்ததுதான் காரணம். வதை என்றால் மன நிம்மதி இழத்தல்,கடும் வேதனையைத் தருவது என்று அர்த்தம்.
♦ எட்டாவதாக வரக்கூடிய “மைத்ர தாரை”யைப் பார்ப்போம். மைத்ரம் என்றால் நன்மை என பொருள். சுப காரியங்கள் தொடங்கவும், வியாபார, தொழில் ரீதியாக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கும் அயல்நாட்டில் வேலைக்கு முயற்சி செய்யவும், வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்யவும், ஒரு காரியத்தில் லாபம் கிடைக்கவும், இரண்டாவது திருமணம், இரண்டாவது குழந்தை பாக்கியம் பெறவும் ஏற்றது... ‘மைத்ர தாரை’. இங்கே இரண்டாவது திருமணம் என்பது முதல் திருமணம் முடிவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது, முதல் திருமணம் நடந்து, வாழ்க்கைத் துணை இறந்திருக்கலாம். அல்லது விவாகரத்து ஏற்பட்டிருக்கலாம். அல்லது இருதரப்பிலும் பேசி பிரிந்திருக்கலாம். அவர்களுக்கு, இரண்டாவது திருமணம் நடப்பதற்கான சூழல், ‘மைத்ர தாரை’யில் நிலவும்.
♦ஒன்பதாவதாக வரக்கூடிய “அதிமைத்ர தாரை” நட்சத்திரங்கள். இந்த அதிமைத்ர தாரை வருகின்ற நட்சத்திர நாளில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள், தொழில் வியாபார பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், ஆன்மிகப் பயணங்கள், மகான்கள் தரிசனம், சுப காரிய செலவுகள், அதாவது திருமணத்திற்கு நகை, ஆடை போன்றவற்றை வாங்க ஏற்ற தினங்கள்!
முதன் முதலில் பார்த்த “ஜென்ம தாரைக்கு” என்ன பலன்
எல்லா சுபமும் நடக்கும். ஆனால் செய்யக்கூடாதவை என சில விஷயங்கள் உண்டு. அது.. ஆண்கள் ஜென்ம தாரை நாளில், ஜென்ம நட்சத்திர நாளில், திருமணம் செய்யக்கூடாது. பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது, இருவருக்கும் பொதுவாக சில தகவல்கள் ... எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது. நகம் வெட்டக்கூடாது. முடி திருத்தம் செய்யக்கூடாது. தாம்பத்தியம் கூடாது. இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டு
சம்பத்து தாரை நட்சத்திரத்தில் மட்டும் பணவரவு என்றால் மாதத்திற்கு ஒருமுறைதானே வரும். அப்படியானால் பணத்திற்காக ஒருமாதம் காத்திருக்க வேண்டுமா? என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்!
உங்களுக்கு மாதத்தில் 10 தினங்கள் மட்டுமே சலசலப்புகள் இருக்கும். மற்ற நாட்கள் நன்மை தருவதாக இருக்கும். உங்களுக்கு என்றால் உங்களுக்கு மட்டுமில்லை... எல்லோருக்கும்தான்!
உங்கள் நட்சத்திரத்திற்கு சம்பத்து தாரை என்பது உங்களின் இரண்டாவது நட்சத்திரம் ஆக 2வது நட்சத்திரம், 11வது நட்சத்திரம் (கூட்டினால் 2 வருகிறதுதானே), 20 வது நட்சத்திரம் இந்த மூன்றுமே சம்பத்து தாரை நட்சத்திரங்கள்தான்!
க்ஷேம தாரை நட்சத்திரம் 4வது நட்சத்திரம் என்று சொன்னேன் தானே. ஆக... 4வது நட்சத்திரம், 13 வது நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திர நாட்களும் க்ஷேமம் கொடுக்கும். அதாவது நன்மைகள் நடக்கும். அப்படியானால் 22 வது நட்சத்திரம்...?
இந்த 22 வது நட்சத்திரத்தை அனைவரும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். க்ஷேம தாரையாக இருந்தாலும், இது “வைநாசிக நட்சத்திரம்” ஆகும். வைநாசிகம் என்றால் முற்றிலும் கெடுதல்(சர்வ நாசம்) என்பதாகும். எனவே தவிர்க்க வேண்டும்.
அடுத்து 6வது நட்சத்திரமான “சாதக தாரை” நட்சத்திர நாட்கள். உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 6வது நட்சத்திர நாள், 15 வது நட்சத்திர நாள், 24வது நட்சத்திர நாள் இந்த மூன்றும் சாதகம் தரக்கூடிய நட்சத்திரங்கள்; சாதகம் வழங்கக்கூடிய நாட்கள். .
இதேபோல மற்ற நட்சத்திரங்களையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
27 நட்சத்திர வரிசை தெரிந்தால்தானே கணக்கிட முடியும் என்பவர்களுக்காக..!
1. அஸ்வினி,
2. பரணி,
3. கார்த்திகை,
4. ரோகிணி,
5. மிருகசீரிடம்,
6. திருவாதிரை,
7. புனர்பூசம்,
8. பூசம்,
9. ஆயில்யம்.
10. மகம்,
11. பூரம்,
12. உத்திரம்,
13. அஸ்தம்,
14. சித்திரை,
15. சுவாதி,
16. விசாகம்,
17. அனுஷம்,
18. கேட்டை,
19. மூலம்,
20. பூராடம்,
21. உத்திராடம்,
22. திருவோணம்,
23. அவிட்டம்,
24. சதயம்,
5. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி,
27. ரேவதி.
இதை வரிசையாகக் கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திரத்தை ஒன்று என எண்ணிக் கொள்ளுங்கள். அதில் இருந்து தொடந்து எண்ணிக்கொண்டு வந்தால், ஒவ்வொரு தாரையையும் நீங்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்வீர்கள்.

ஜோதிட சாஸ்திர சூட்சுமங்கள்

                                      ஜோதிட சாஸ்திர சூட்சுமங்கள்

1. உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம்,தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம். உதாரணத்திற்குச் சுக்ரன் நன்றாக இருக்கிறாரென்றால், அவர்களது கண்கள் காந்தமாகவும், கனிவானதாகவும் இருக்கும். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்று பேச வைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
2. கண்களெல்லாம் சுக்ரன் நன்றாக இருந்தாரென்றால், அந்த ஒளி அவர்களிடம் இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இருக்காது. சும்மா அப்படிப் பார்த்து கண் சிமிட்டினாலே போதும் நாம் விழுந்துவிடுவோம். அந்த மாதிரி இருப்பார்கள்.
3. சந்திரனும் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்குத் தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான்.
4.லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள்.
5. அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.
6. மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருப்பதைப் பார்க்கலாம்.
7. துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களைப் பார்த்தீர்களென்றால், மூக்கு நீளமாக இருக்கும். தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு பதுங்கி, ஒரு மாதிரி மடிந்து, அதாவது ஊர் பக்கத்திலெல்லாம் பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.
8. சாமுத்திரிகா லட்சணத்தில் பிரதானம். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்துச் சில விஷயங்களைச் சொல்லிவிடலாம்.
. 9. சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும்.
10. புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய மற்றும் நீளமான விரல்களாக இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே, அவர் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருக்கிறார் என்று சொல்லிவிடலாம்.
11. நட்சத்திரம் என்பது என்ன?ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்கு நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்றுஉரைப்பது ஒருவருடைய நட்சத்திரம்தான்.
12.திருமணத்திற்கு நட்சத்திரப் பொருத்தம் என்பது ஒரு தொடக்கம். 21பொருத்தங்கள் பார்ப்பார்கள், அதன் பிறகு 15 பொருத்தங்களாக மாற்றினார்கள், இப்போது 10 ஆகக் குறைத்து விட்டார்கள்.
13. திருமணத்திற்குப் பார்க்கப்படும் பொருத்தங்களில் தினப் பொருத்தம், கனப் பொருத்தம்,யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகிய ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது.
14. நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்து விடலாகாது.
15. பத்துப் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்துவைத்த பத்தாவது நாளிலேயே விவாகரத்து செய்து கொண்டவர்களை எல்லாம் கூட நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.
16. தினப் பொருத்தம் என்பது என்ன?தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள், அதாவதுஉரையாடல்கள். கணவன் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு மனைவி சொல்லும் பதிலும், மனைவி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு கணவன் சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக் கேட்கும்போது பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும்.
17. லக்னத்தின் இரண்டாவது வீட்டில் 6க்குஉரியவர், 8க்கு உரியவர் இருந்தால், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதே ஒரு முரண்பாடாக இருக்கும். அதாவது கணவர் கேட்பது ஒன்றாகவும், மனைவி கூறும் பதில் வேறாகவும் இருக்கும். அது எரிச்சலூட்டும். எனவேதான் ஜாதகப் பொருத்தம் என்பது மிகுந்த அவசியமாகிறது.
18. நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரை மட்டும் சார்ந்தது, ஆனால், ஜாதகப் பொருத்தம் என்பதுஅவர்களுடைய உறவுகள் நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களா என்பதைக் கண்டறிய ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவே இந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.
19. ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைப்பிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம்.
20. கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.
21. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால், அந்த ஜாதகர், தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார்.
22. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.
23. பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணமும் அமையும் எனக் கூற வேண்டும்.
24. ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவக் கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்குப் பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.
25. களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.
26. ஜோதிட ரீதியாக ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னம்/லக்னாதிபதி அல்லது சந்திரனைக் குரு பார்த்தால், அவருக்குப் பிறக்கும் குழந்தை அவருடையதுதான் என உறுதியாகக் கூற முடியும்.
27. பூர்வ புண்ணியாதிபதியை குரு பார்த்தாலும், அந்த ஜாதகர் குழந்தையின் பிறப்பில் களங்கம் இருக்காது. இதுபோல் பல வகையான அமைப்புகள் மூலம் ஒரு குழந்தை அந்த ஜாதகருக்குதான் பிறந்தது என்று ஜோதிட ரீதியாக உறுதிபடக் கூறிவிட முடியும்.
28. நவகிரகங்கள் மற்றும் அவற்றின் காரகத்துவம் பற்றி ஜோதிடத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.உதாரணமாக, சூரியனை எடுத்துக் கொண்டால் அவர் ஆத்மா, பிதுர், அரசாங்கம், அரசியல், இதயம் ஆகியவற்றில் ஆற்றல் செலுத்துவார்.
29. ஜோதிட ரீதியாகப் பார்த்தால் ஒரு கிரகம் குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால், அதன் காரகத்துவம் முழுமையாகக் கிடைக்கும். அதே கிரகம் கெட்டுப்போய் இருந்தால், அது வழங்கும் பலன்களும் கெடுதல் பயக்கும்.
30. உதாரணமாக, செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட ஜாதகர் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்யலாம். இதன் மூலம் விபத்தால் ரத்த இழப்பு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
31. ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் (7, 8ஆம் இடம்) சிறப்பாக இல்லாமல், சுக்கிரனும் கெட்டுப் போய் இருந்ததால் அவருக்கு மண விலக்கு பெற்ற பெண்ணை திருமணம் செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும்.
32. லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, வாக்கு அதிபதி வாக்கு ஸ்தானத்தில் இருப்பது போன்ற அமைப்பைப் பெற்ற குழந்தைகளுக்கு, நல்ல தசாபுக்தி நடைபெறும் போது நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். தடைகள் ஏற்படாது.
33. குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.
34. தற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். இதனால் நிச்சயம் முழுப்பலன் கிடைக்காது.
35. இன்றைய சூழலில் ஹோமம் நடத்துவதற்கு வரும் குருமார்கள், கையில் செல்போன் சகிதம் வருகின்றனர். அதில் அழைப்பு வந்தால் பேசிக் கொண்டே மந்திரங்களை ஜெபிக்கின்றனர். இதுவும் சரியான முறை அல்ல. கண்டிக்கத்தக்கது.
36. ஹோமம் செய்யும் போது குறிப்பிட்ட ஆவர்த்திகளை உச்சரிக்கும் சமயத்தில் 100% கவனம் தேவை. முறையான சமித்துகள் கொண்டு யாகம் செய்யும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.
37. பல்வேறு வகையான ஹோமம், யாகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட தியாகமே சிறந்த பலனை அளிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, யாகத்தை விட தியாகம் தான் வெற்றியைக் கொடுக்கும்.
38. ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால், ஏழ்மை நிலையிலும் அவருக்குத் தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாகப் பலர் தங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும். உதாரணமாக, ஏழ்மை நிலையில் உள்ள மாணவனின் கல்வி தடைபடாமல் தொடர, அவனது வகுப்பு ஆசிரியரே கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார்.
39.ஜோதிடத்தைப் பொறுத்தவரை 2ஆம் இடம் வாக்கு ஸ்தானத்தை மட்டுமின்றி, ஆரம்பக் கல்வியையும் குறிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 4ஆம் இடம் உயர் கல்வியையும், 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வியையும் (கல்லூரி, பல்கலைக்கழகம்) குறிக்கிறது.
40. 5 ஆம் இடம்தான் மனதைக் குறிக்கிறது. படிக்கும் பாடங்களை ஒருவர் நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்வதற்கு உதவுவது இந்த 5ஆம் இடம். ஒருவருக்கு 5ஆம் இடம் சிறப்பாக இருந்தால்தான் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைவாற்றல் நன்றாக இருக்கும். தேர்விலும் அதிக மதிப்பெண் பெற முடியும்.
41.படிக்கும் காலத்தில் ராகு தசை, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி வந்தால் அந்த மாணவர், மாணவியின் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கிவிடும். எனவே, பெற்றோர் தங்களின் வாரிசுக்கு ராகு தசை நடக்கும் காலத்தில் அவர்கள் மீது படிப்பைத் திணிக்காமல், அவர்களின் பிரச்சனைகளை, இடையூறுகளைப் புரிந்து கொண்டு கல்வி புகட்ட வேண்டும். சில மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதைகள் கூட ஏற்படலாம்.
42. ஒருவருக்கு தரமான கல்வி கிடைப்பதைச் சாதாரண விடயமாக கருதக் கூடாது. அதற்குக் கிரகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பிறக்கும் போது உள்ள கிரக அமைப்பு, தற்கால் கிரக நிலைகள் ஆகிய இரண்டும் சிறப்பாக இருந்தால், மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராகத் திகழ முடியும்.
43. வேற்று மதத்தினர், அயல்நாட்டில் வசிப்பர்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களாக சனி, ராகு கருதப்படுகிறது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. அமெரிக்காவுக்கு குருவும், இங்கிலாந்துக்கு சனியும், ஆஸ்திரேலியாவுக்கு புதனும் ஆட்சி கிரகங்களாகத் திகழ்கின்றன.
44. ஒரு ஜாதகத்தில் இயக்கும் கிரகங்கள், இயங்கும் கிரகங்கள் என்று இரண்டாகப் பிரிக்கிறோம். அதில் ஒரு கிரகம் மட்டுமே இயக்கும் கிரகமாக (Key planet) ஆக இருக்கும். இரு வேறு நபர்களின் ஜாதகத்தில் இயக்கும் கிரகம் ஒன்றாக இருந்தால் அவர்களிடையே பிரச்சனை வராது. எனவே இயக்கும் கிரகம் ஒத்துப்போனால் வேற்று மதத்தைச் சேர்ந்தவருடன் கூட கூட்டாகத் தொழில் தொடங்கலாம்.
45. ஜோதிடத்தில் கூட ஆணாதிக்கக் கிரகங்கள், பெண் ஆதிக்கக் கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்கக் கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்கக் கிரகங்கள்.
46. ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார்.
47. ஒரு வீட்டில் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்தக் குடும்பம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில பெண்களுக்குக் குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால் மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம்.
48. ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை நான் பார்த்துள்ளேன். அதற்குக் காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே.
49. ஆறுக்கு உரியவனின் தசை, 8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதைச் செலுத்தலாம்.
50. ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும்.இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ரத்தத்தின் சேர்க்கையிலும் மாறுதல் காணப்படும்.
51. செவ்வாய்+சனி சேர்க்கை இருந்தால் ரத்தத்தில் இரும்புச் சத்து, கால்சியம் அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற கூட்டுக் கிரகச் சேர்க்கை பெற்றவர்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
52. ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும். இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்டமச்சனி, சனி தசைக்கும் பொருந்தும்.
53. அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து, அதிகளவில் நடைபழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்குக் காரணம்.
54. இருதயக் கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால், அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்குப் பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
55. சந்திரனுக்கு 6, 8, 12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அது போன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
56. ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள்.
57. மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் போஜனப் பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை இவர்கள் விரும்புவர்.
58. மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை விரும்புவர்.
59. கடகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர்.
60. மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் அதிகம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். பசி நேரத்தில் கூட வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர்
61. மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் போஜனப் பிரியர்களாக இருப்பர்.
62. புதனின் ராசிகளாக மிதுனமும், கன்னியும் வருவதால் அவர்கள் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுபவர்களாக இருப்பர். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர்.
62. ஜோதிட ரீதியாகப் பார்க்கும் போது, ஒருவரின் உணவுப் பழக்கமும், சுவை விருப்பமும் அவரது ராசியைப் பொறுத்தே அமையும். மேலும், உடல்வாகு, குடல்வாகு ஆகியவை லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து மாறுபடும்.
63. மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர். துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள்.
64. கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகச் சூட்டுடன் சாப்பிடுவர்.
65. மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர். மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை விரும்புவர்.
66. காதல் என்பது முழுக்க முழுக்க மன எழுச்சி சம்பந்தப்பட்டது. ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கத் தூண்டுவதும், ஒரு ஆணைப் பெண் பார்க்கத் தூண்டுவதும் சந்திரனும், சூரியனும்தான். இவை இரண்டும் கண்களுக்கு உரிய கிரகம். துவக்கத்தில் கண்கள் வழியாகவே காதல் ஏற்படுகிறது.
67. காதல்/காமத்தைத் தூண்டுவது சுக்கிரன். இதில் ஒழுங்கு நெறிமுறைகளைக் கொண்டு வருவது செவ்வாய் கிரகத்தின் வேலை.
68. காதலிக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று வீர வசனம் பேசுபவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் நேர்மறையாக இருக்கும். அதே செவ்வாய் எதிர்மறையாக இருந்தால் காதலை இழந்து தவிப்பார்கள்.
69. சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்களின் பங்களிப்பு காதலுக்கு தேவைப்படுகிறது. இந்தக் கிரகங்களைக் கொண்டுதான் ஒருவரின் காதல் நிறைவேறுமா?அல்லது தோல்வி அடையுமா? என்பதைக் கணிக்க முடியும்.
70. காதலிக்கும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தசா புக்தி நடக்கிறது? என்பதையும் பார்க்க வேண்டும். ஏழரைச் சனியில் காதலிப்பவர்கள் அந்தக் காலகட்டம் முடிந்தவுடன் பிரிந்து விடுகிறார்கள். இது அஷ்டமச் சனி காலகட்டத்திற்கும் பொருந்தும்.
71. ஒரு கரு உருவாகும் போது அதில் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ போன்ற அடிப்படை மூலக் கூறுகளை பெற்றோரின் மரபுக் கூறில் இருந்து கருவுக்கு கடத்துவது 5ஆம் இடம் மற்றும் அதற்கு உரிய கிரகமாகும். எனவே, ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.
72. ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, கௌரவம், பாரம்பரியத்தை அந்த ஜாதகர் காப்பாற்றுபவராகவும், முன்னோர்களின் சொத்தை வைத்து முன்னுக்கு வருபவராகவும் இருப்பார்.
73. ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடம் பலவீனமாக இருந்தாலும், லக்னாதிபதி நன்றாக இருந்தால் தனது முயற்சியால் வாழ்க்கையில் அவர் முன்னேறுவார். ஆனால் ஒருமுறை முயன்றால் இவர்களுக்கு வெற்றி கிடைக்காது. பலமுறை முயற்சிக்க வேண்டும்.
74. லக்னாதிபதி நன்றாக இருந்து (ஆட்சி, உச்சம் பெறுதல்), நீச்சம் பெறாமல் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அவருக்கு வீரம், விவேகம் ஒரு சேர இருக்கும்.
75. ஜோதிடத்தைப் பொறுத்தவரை சண்டை, சச்சரவுகளை உருவாக்கக் கூடியது 6ஆம் இடமாகும்.ஒருவர் ஜாதகத்தில் 6க்கு உரியவன் பலவீனம்/மறைந்து இருந்தால், அவர் சண்டை, சச்சரவில் ஈடுபட மாட்டார்.
76. ஆறுக்கு உரியவர் 6இல் (வலுவாக) இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்புவார். நேரடியாக சண்டையில் இறங்காவிட்டாலும், மற்றவர்களை தூண்டிவிட்டு கலகம் ஏற்படுத்துவர். கடன் தொல்லையும் ஏற்படும்.
77. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.
78. 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும்.
79. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள், அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.
80. சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
81. அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும்.
82. சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார்.
83. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால், அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.
84. ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
85. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும். எனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும்.
86. குரு கல்விக்கு உரிய கிரகமாகும்.குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளைப் புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
87. எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
88. அகதிகளுக்கு உதவலாம்.வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
89. ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பரிகாரம் குலதெய்வ வழிபாடுதான். வருடத்திற்கு ஒரு முறையாவது திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.
90. ஒரே வீட்டில் இரண்டு ராசிக்காரர்கள் இருந்தால் இருவருக்கும் சுயமரியாதை பிரச்சினை ஏற்படும். ஒருவர் நன்றாக இருந்தால் மற்றொருவர் நன்றாக இருக்க மாட்டார். ஒருவர் வளர்ச்சி அடைந்தால் மற்றொருவர் வளர்ச்சி தடைபடும்.
91. ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இருந்தால்தான் அது கிட்டும். பரிகாரங்கள் மூலமாகக் குழந்தை பெறும் ஜாதகங்களும் உண்டு. ஆனால் ஜாதகத்தில் குழந்தை பாக்கியமே இல்லையென்றால் என்னதான் செய்தாலும் கிட்டாது.
92. ஜாதகங்களுக்கு என்ன செய்தாலும் நன்மை அடைய முடியாது. முந்தைய காலத்தில் தர்ம, கர்ம புத்திரன் கிடைப்பான் என்று கூறுவார்கள். அதாவது தர்மம் பண்ணு. உனக்குக் கர்மம் பண்ண புத்திரன் இருப்பான் என்பதுதான் இதன் அர்த்தம்.
93. எண்ணத்தைக் கொடுப்பவன் சந்திரன். மனதில் நல்ல விதைகளை விதைக்கக் கூடியவன் சந்திரன். அதனைச் செயல்படுத்தக் கூடியவன் சுக்ரன். எண்ணம் நல்லதாக இருந்தால் நல்லவையே கிடைக்கும்.
94. வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
95. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
96. வெள்ளெருக்குச் செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளைக் கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
97. இடம்புரி விநாயகர் வினைகளை தீர்க்கக் கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. வலம்புரி விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க வல்லவர். பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சேர்ந்தவர்.
98. இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்கும் வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து சாஸ்திரம் ஆகிய குறைகளுக்காக வைக்கப்படும் விநாயகர் இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.
99. சூரியனின் வீடு சிம்மம்.
100. பரிகாரங்கள் செய்வதால் நிவாரணம் பெறலாம். குறிப்பிட்ட விருட்சத்தை பராமரிக்கும் போது அல்லது மரக்கன்றை நடும் போது கிரகத்தினால் ஏற்படும் தாக்கம் குறைகிறது. அதேபோல, அந்த ராசிக்குரிய கடவுளை வணங்கும் போது கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

கிரகச் சேர்க்கை

                                                        கிரகச் சேர்க்கை

சூரியன் – சந்திரன்
ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.
சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்.
சூரியன் – செவ்வாய்
உடல் உஷ்ணம் அதிகம். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பார்கள். ஆண்மைக்கு உரிய கம்பீரம் இவர்களிடம் கூடுதலாகவே காணப்படும். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே இவர்களுக்கு அமையும். அதிக சகோதரர்களும் அவர்களால் ஆதாயமும் உண்டு. இந்த சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அந்த வீட்டில் மீனாக்ஷி ஆட்சிதான் நடக்கும் என்று சொல்லலாம். இந்த சேர்க்கை மேஷத்தில் காணப்பட்டால், மேலே சொன்ன பலன்கள் கூடுதலாக நடக்கும்.
சூரியன் – புதன்
சூரியன், புதன் சேர்க்கை பெற்ற 8 பாகைகளுக்குள் ஜாதகர் பிறந்திருந்தால், புதனுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்பட்டு பலன் தராமல் போய்விடும். குறிப்பாக புதனின் தசா புக்தி காலங்களில் கெடுபலன்களே நடைபெறும். 8 பாகைகளுக்குப் பிறகு பிறந்தால்தான் பலன் தரும். சூரியன் புதனின் சேர்க்கையானது ஜாதகரை கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும். அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் தாமதமாகவே படிப்பை முடிப்பர். தகுதியைவிட உயர்ந்த இடத்தில் வேலைக்குப் போவர். இவருடைய பணி பெரும்பாலும் அரசாங்கப் பணியாகவே அமையும். தாய்மாமன் உறவுமுறை சுமுகமாகவும் ஆதாயம் தருவதாகவும் இருக்கும். வாக்குத்திறமை பெற்றிருப்பர்.
சூரியன்-குரு
சூரியன், குரு சேர்க்கை பெற்ற ஜாதகருக்கு பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லலாம். பொன் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்யும் குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். நிதி அமைச்சகம், வங்கிகள், நிதிநிறுவனங்களில் வேலை அமையும். அத்தகைய பணியும்கூட தலைமையிடத்தில் இருக்கும். ஒருசிலர் பேராசிரியராகவும் பணிபுரிவர். இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் இவர்களில் சிலர் ஆன்மிக குருவாகவும் பிரகாசிப்பர்.
சூரியன் – சுக்ரன்
சூரியன் சுக்ரன் சேர்க்கையானது ஜாதகருக்கு எதிர்பாராத பொருள்வரவைத் தரும். இவர்களுக்கு எதிலும் நஷ்டம் என்பதே ஏற்படாது. ராணுவத் தளவாடங்கள் விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பர். வசதியான குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். விலை உயர்ந்த சொகுசு வாகன பிராப்தி இவர்களுக்கு உண்டு. இவருக்குச் சொந்தமான வீட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது.
சூரியன் – சனி
பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு பித்ருகாரகன் சூரியன் என்றால், இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பித்ருகாரகன். இந்தச் சேர்க்கையானது தந்தை மகன் உறவில் விரிசலை ஏற்படுத்துவதுடன், கோர்ட், கேஸ் என்றும் அலைக்கழிக்கும். அவ்வப்போது மன அமைதி பறிபோகும். சமையல் கலைஞராகவும், கேன்டீன் காண்ட்ராக்டராகவும் பணம் சம்பாதிப்பர். இரும்புக் கழிவுகளை வாங்கி விற்றும் ஜீவனம் நடத்துவர். கடினமான உழைப்பாளிகளான இவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாக நடந்துக்கொள்வர். சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் பணம் சம்பாதிக்கவும், அதில் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்குச் செலவழிக்கவும் தயங்கமாட்டார்கள். எதையுமே புதியதாக வாங்குவது இவர்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் பயன்படுத்திய கார், பைக் போன்றவைகளையே வாங்குவர்.
சூரியன் – ராகு
சூரியன் ராகு சேர்க்கை அமையப் பெற்ற ஜாதகர்கள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். எதிலும் மாற்றுச் சிந்தனையும், புரட்சிகரமான எண்ணங்களும் கொண்டிருப்பர். பிறருடைய சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கு எதிர்பாராமல் வந்து சேரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகளை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பர். இவர்களுக்கு அமையக்கூடிய பணியும்கூட மீன்வளத்துறை போன்று கடல் சார்ந்த பணியாகவே இருக்கும்.
சூரியன் – கேது
ஆன்மிகவாதியாக இருப்பர். ஆன்மிகம் தொடர்புடைய மரங்களைக் கோயில்களுக்குக் கொடுப்பர். மரங்களை வெட்டி விற்பனை செய்வதால், இவர்கள் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் செய்வர். ஒருசிலர் காய்,கனி வகைகளை விற்றும் ஜீவனம் செய்வர். இவர்களுக்கு வனத்துறை சார்ந்த பணிகளே பெரும்பாலும் அமையும்.

நட்சத்திர குணம்-2

 

நட்சத்திர குணம்-2
அஸ்வினி - க்ஷிப்ரம்/லகு
பரணி - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம் - மிருது/மைத்ரம்
திருவாதிரை - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம் - சரம்/சலனம்
பூசம் - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம் - தாருணம்/தீக்ஷணம்
மகம் - உக்கிரம்/குரூரம்
பூரம் - உக்கிரம்/குரூரம்
உத்திரம் - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம் - க்ஷிப்ரம்/லகு
சித்திரை - மிருது/மைத்ரம்
ஸ்வாதி - சரம்/சலனம்
விசாகம் - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம் - மிருது/மைத்ரம்
கேட்டை - தீக்ஷணம்/தாருணம்
மூலம் - தீக்ஷணம்/தாருணம்
பூராடம் - உக்கிரம்/குரூரம்
உத்திராடம் - ஸ்திரம்/துருவம்
திருவோணம் - சரம்/சலனம்
அவிட்டம் - சரம்/சலனம்
சதயம் - சரம்/சலனம்
பூரட்டாதி - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்/துருவம்
ரேவதி - மிருது/மைத்ரம்
(க்ஷிப்ரம்-துரிதமானது) (உக்கிரம்,குரூரம்-கொடியது) (சரம், சலனம்-அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது) (தாருணம்-கொடூரமானது) (லகு-கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)
நட்சத்திர கணம்
அஸ்வினி - தேவம்
பரணி - மனுசம்
கிருத்திகை - ராக்ஷசம்
ரோஹிணி - மனுசம்
மிருகசீரிடம் - தேவம்
திருவாதிரை - மனுசம்
புனர்பூசம் - தேவம்
பூசம் - தேவம்
ஆயில்யம் - ராக்ஷசம்
மகம் - ராக்ஷசம்
பூரம் - மனுசம்
உத்திரம் - மனுசம்
ஹஸ்தம் - தேவம்
சித்திரை - ராக்ஷசம்
ஸ்வாதி - தேவம்
விசாகம் - ராக்ஷசம்
அனுசம் - தேவம்
கேட்டை - ராக்ஷசம்
மூலம் - ராக்ஷசம்
பூராடம் - மனுசம்
உத்திராடம் - மனுசம்
திருவோணம் - தேவம்
அவிட்டம் - ராக்ஷசம்
சதயம் - ராக்ஷசம்
பூரட்டாதி - மனுசம்
உத்திரட்டாதி - மனுசம்
ரேவதி - தேவம்
தேவம்-அழகு,ஈகைகுணம்,விவேகம்,நல்லொழுக்கம்,அல்ப போஜனம்,பேரறிவு
மனுசம்-அபிமானம்,செல்வமுடைமை,கிருபை,அதிகாரம்,பந்துக்களை பாதுகாத்தல்
ராக்ஷசம்-பராக்கிரமம்,அதிமோகம்,கலகப்பிரியம்,துக்கம்,தீயசெயல்,பயங்கர வடிவம்
தாமசாதி நட்சத்திர குணங்கள்
அஸ்வினி - தாமசம்
பரணி - ராஜசம்
கிருத்திகை - ராஜசம்
ரோஹிணி - ராஜசம்
மிருகசீரிடம் - தாமசம்
திருவாதிரை - தாமசம்
புனர்பூசம் - சாத்வீகம்
பூசம் - தாமசம்
ஆயில்யம் - தாமசம்
மகம் - தாமசம்
பூரம் - ராஜசம்
உத்திரம் - ராஜசம்
ஹஸ்தம் - ராஜசம்
சித்திரை - தாமசம்
ஸ்வாதி - தாமசம்
விசாகம் - சாத்வீகம்
அனுசம் - தாமசம்
கேட்டை - சாத்வீகம்
மூலம் - தாமசம்
பூராடம் - ராஜசம்
உத்திராடம் - ராஜசம்
திருவோணம் - ராஜசம்
அவிட்டம் - தாமசம்
சதயம் - தாமசம்
பூரட்டாதி - சாத்வீகம்
உத்திரட்டாதி - தாமசம்
ரேவதி - சாத்வீகம்
சாத்வீகம்-நுட்பமான புத்தி,ஞானம்,தெய்வபக்தி,குருபக்தி,தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்
ராஜசம்-உயிர்கள் மீது இரக்கம்,நல்லறிவு,இனிமையான பேச்சு,
கல்வியில் தேர்ச்சி,இன்பசுகம்,பரோபகாரம்,யாருக்கும் தீங்கு நினையாமை,
தான தர்மம் செய்வதில் விருப்பம்,நடுநிலையோடு செயல்படுதல்
தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை,
சோம்பேறித்தனம்,பாவசிந்தை,முன்யோசனை இல்லாமை
நட்சத்திர யோனி
அஸ்வினி - ஆண் குதிரை
பரணி - பெண் யானை
கிருத்திகை - பெண் ஆடு
ரோஹிணி - ஆண் நாகம்
மிருகசீரிடம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்திரம் - ஆண் எருது
ஹஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
ஸ்வாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுசம் - பெண் மான்
கேட்டை - ஆண் மான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - பெண் கீரி
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பெண் பசு
ரேவதி - பெண் யானை
நட்சத்திர கோத்திரங்கள்(வேறு)
அஸ்வினி - மரீசா
பரணி - மரீசா
கிருத்திகை - மரீசா
ரோஹிணி - மரீசா
மிருகசீரிடம் - அத்ரி
திருவாதிரை - அத்ரி
புனர்பூசம் - அத்ரி
பூசம் - அத்ரி
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - வஷிஷ்டா
பூரம் - வஷிஷ்டா
உத்திரம் - வஷிஷ்டா
ஹஸ்தம் - ஆங்கீரஸா
சித்திரை - ஆங்கீரஸா
ஸ்வாதி - ஆங்கீரஸா
விசாகம் - ஆங்கீரஸா
அனுசம் - புலஸ்தியா
கேட்டை - புலஸ்தியா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஸ்தியா
உத்திராடம் - புலஹா
திருவோணம் - புலஹா
அவிட்டம் - புலஹா
சதயம் - க்ரது
பூரட்டாதி - க்ரது
உத்திரட்டாதி - க்ரது
ரேவதி - க்ரது
நட்சத்திர திசைகள்
அஸ்வினி - கிழக்கு
பரணி - கிழக்கு
கிருத்திகை - கிழக்கு
ரோஹிணி - கிழக்கு
மிருகசீரிடம் - கிழக்கு
திருவாதிரை - தென்கிழக்கு
புனர்பூசம் - தென்கிழக்கு
பூசம் - தென்கிழக்கு
ஆயில்யம் - தெற்கு
மகம் - தெற்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தெற்கு
ஹஸ்தம் - தென்மேற்கு
சித்திரை - தென்மேற்கு
ஸ்வாதி - மேற்கு
விசாகம் - மேற்கு
அனுசம் - மேற்கு
கேட்டை - மேற்கு
மூலம் - வடமேற்கு
பூராடம் - வடமேற்கு
உத்திராடம் - வடக்கு
திருவோணம் - வடக்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடக்கு
பூரட்டாதி - வடக்கு
உத்திரட்டாதி - வடக்கு
ரேவதி - வடக்கு
நட்சத்திர திசைகள்(வேறு)
அஸ்வினி - கிழக்கு
பரணி - தென்கிழக்கு
கிருத்திகை - தெற்கு
ரோஹிணி - தென்மேற்கு
மிருகசீரிடம் - மேற்கு
திருவாதிரை - வடமேற்கு
புனர்பூசம் - வடக்கு
பூசம் - வடகிழக்கு
ஆயில்யம் - கிழக்கு
மகம் - தென்கிழக்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தென்மேற்கு
ஹஸ்தம் - மேற்கு
சித்திரை - வடமேற்கு
ஸ்வாதி - வடக்கு
விசாகம் - வடகிழக்கு
அனுசம் - கிழக்கு
கேட்டை - தென்கிழக்கு
மூலம் - தெற்கு
பூராடம் - தென்மேற்கு
உத்திராடம் - மேற்கு
திருவோணம் - வடமேற்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடகிழக்கு
பூரட்டாதி - கிழக்கு
உத்திரட்டாதி - தென்கிழக்கு
ரேவதி - தெற்கு
நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்
அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்
பரணி - சிவன்
கிருத்திகை - சுப்பிரமணியன்
ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம் - நாக தேவதைகள்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - ஸ்ரீராமன்
பூசம் - சுப்பிரமணியன்
ஆயில்யம் - நாக தேவதைகள்
மகம் - சூரியன்,நரசிம்மன்
பூரம் - சூரியன்
உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம் - மஹாவிஷ்ணு,ராஜராஜேஷ்வரி
சித்திரை - மஹாலக்ஷ்மி
ஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - சிவன்
கேட்டை - ஹனுமன்
மூலம் - கணபதி
பூராடம் - ராஜராஜேஷ்வரி
உத்திராடம் - ஆதித்தியன்
திருவோணம் - மஹாவிஷ்ணு
அவிட்டம் - கணபதி
சதயம் - நாக தேவதைகள்
பூரட்டாதி - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - மஹாவிஷ்ணு
நட்சத்திர அதிதேவதைகள்
அஸ்வினி - கணபதி,சரஸ்வதி
பரணி - துர்கை
கிருத்திகை - அக்னி தேவன்
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சந்திரன்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - தேவதைகள்
பூசம் - குரு
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்கிரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சாஸ்தா
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - லக்ஷ்மி
கேட்டை - தேவேந்திரன்
மூலம் - அசுர தேவதைகள்
பூராடம் - வருணன்
உத்திராடம் - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்,இந்திராணி
சதயம் - யமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - சனீஸ்வரன்
நட்சத்திர நாடி
அஸ்வினி - ஆதி
பரணி - மத்யா
கிருத்திகை - அந்த்யா
ரோஹிணி - அந்த்யா
மிருகசீரிடம் - மத்யா
திருவாதிரை - ஆதி
புனர்பூசம் - ஆதி
பூசம் - மத்யா
ஆயில்யம் - அந்த்யா
மகம் - அந்த்யா
பூரம் - மத்யா
உத்திரம் - ஆதி
ஹஸ்தம் - ஆதி
சித்திரை - மத்யா
ஸ்வாதி - அந்த்யா
விசாகம் - அந்த்யா
அனுசம் - மத்யா
கேட்டை - ஆதி
மூலம் - ஆதி
பூராடம் - மத்யா
உத்திராடம் - அந்த்யா
திருவோணம் - அந்த்யா
அவிட்டம் - மத்யா
சதயம் - ஆதி
பூரட்டாதி - ஆதி
உத்திரட்டாதி - மத்யா
ரேவதி - அந்த்யா
நட்சத்திர பஞ்சபக்ஷிகள்
அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோஹிணி - வல்லூறு
மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை - ஆந்தை
புனர்பூசம் - ஆந்தை
பூசம் - ஆந்தை
ஆயில்யம் - ஆந்தை
மகம் - ஆந்தை
பூரம் - ஆந்தை
உத்திரம் - காகம்
ஹஸ்தம் - காகம்
சித்திரை - காகம்
ஸ்வாதி - காகம்
விசாகம் - காகம்
அனுசம் - கோழி
கேட்டை - கோழி
மூலம் - கோழி
பூராடம் - கோழி
உத்திராடம் - கோழி
திருவோணம் - மயில்
அவிட்டம் - மயில்
சதயம் - மயில்
பூரட்டாதி - மயில்
உத்திரட்டாதி - மயில்
ரேவதி - மயில்
நட்சத்திர பஞ்சபூதங்கள்
அஸ்வினி - நிலம்
பரணி - நிலம்
கிருத்திகை - நிலம்
ரோஹிணி - நிலம்
மிருகசீரிடம் - நிலம்
திருவாதிரை - நீர்
புனர்பூசம் - நீர்
பூசம் - நீர்
ஆயில்யம் - நீர்
மகம் - நீர்
பூரம் - நீர்
உத்திரம் - நெருப்பு
ஹஸ்தம் - நெருப்பு
சித்திரை - நெருப்பு
ஸ்வாதி - நெருப்பு
விசாகம் - நெருப்பு
அனுசம் - நெருப்பு
கேட்டை - காற்று
மூலம் - காற்று
பூராடம் - காற்று
உத்திராடம் - காற்று
திருவோணம் - காற்று
அவிட்டம் - ஆகாயம்
சதயம் - ஆகாயம்
பூரட்டாதி - ஆகாயம்
உத்திரட்டாதி - ஆகாயம்
ரேவதி - ஆகாயம்
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
அஸ்வினி - அஸ்வத்தாமன்
பரணி - துரியோதனன்
கிருத்திகை - கார்த்திகேயன்
ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம் - புருஷமிருகம்
திருவாதிரை - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்
புனர்பூசம் - ராமன்
பூசம் - பரதன்,தாமரை மலர்,கிளி
ஆயில்யம் - தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்
மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம் - பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்
உத்திரம் - மஹாலக்ஷ்மி,குரு
ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,லவ-குசன்
சித்திரை - வில்வ மரம்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கணேசர்,முருகர்,
அனுசம் - நந்தனம்
கேட்டை - யுதிஸ்திரர்
மூலம் - அனுமன்,ராவணன்
பூராடம் - ப்ருஹஸ்பதி
உத்திராடம் - சல்யன்
திருவோணம் - வாமனன்,விபீசனன்,அங்காரகன்
அவிட்டம் - துந்துபி வாத்தியம்
சதயம் - வருணன்
பூரட்டாதி - கர்ணன்,கின்னரன்,குபேரன்
உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
ரேவதி - அபிமன்யு,சனிபகவான்

நட்சத்திரத்தின் அனைத்து தகவல்கள்

                                    நட்சத்திரத்தின் அனைத்து தகவல்கள் 

••••••••••••••••••••••••
நக்ஷ்சத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.
நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
நட்சத்திர பெயர்கள்
1.அஸ்வினி 2. பரணி 3.கிருத்திகை 4.ரோஹிணி 5.மிருகசீரிடம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம்
10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்தம் 14.சித்திரை 15.ஸ்வாதி 16.விசாகம் 17. அனுசம் 18. கேட்டை
19.மூலம் 20.பூராடம் 21.உத்திராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27. ரேவதி
நட்சத்திர வடிவம்
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம்,தோரணம்,குயவன் சக்கரம்
அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின் வால்,பொற்காளம்,யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல்,மூன்று பாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு
நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம்
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோஹிணி - சிவப்பானது
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்ட த்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கை
சித்திரை - ஒளி வீசுவது
ஸ்வாதி சுதந்தரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது,காது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது
நட்சத்திர அதிபதிகள்
அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கிருத்திகை - சூரியன்
ரோஹிணி - சந்திரன்
மிருகசீரிடம் - செவ்வாய்
திருவாதிரை - ராஹு
புனர்பூசம் - குரு
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
ஸ்வாதி - ராஹு
விசாகம் - குரு
அனுசம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராஹு
பூரட்டாதி - குரு
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்
சராதி நட்சத்திரப்பிரிவுகள்
அஸ்வினி - சரம்
பரணி - ஸ்திரம்
கிருத்திகை - உபயம்
ரோஹிணி - சரம்
மிருகசீரிடம் - ஸ்திரம்
திருவாதிரை - உபயம்
புனர்பூசம் - சரம்
பூசம் - ஸ்திரம்
ஆயில்யம் - உபயம்
மகம் - சரம்
பூரம் - ஸ்திரம்
உத்திரம் - உபயம்
ஹஸ்தம் - சரம்
சித்திரை - ஸ்திரம்
ஸ்வாதி - உபயம்
விசாகம் - சரம்
அனுசம் - ஸ்திரம்
கேட்டை - உபயம்
மூலம் - சரம்
பூராடம் - ஸ்திரம்
உத்திராடம் - உபயம்
திருவோணம் - சரம்
அவிட்டம் - ஸ்திரம்
சதயம் - உபயம்
பூரட்டாதி - சரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்
ரேவதி - உபயம்
மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்
அஸ்வினி - தாது
பரணி - மூலம்
கிருத்திகை - ஜீவன்
ரோஹிணி - தாது
மிருகசீரிடம் - மூலம்
திருவாதிரை - ஜீவன்
புனர்பூசம் - தாது
பூசம் - மூலம்
ஆயில்யம் - ஜீவன்
மகம் - தாது
பூரம் - மூலம்
உத்திரம் - ஜீவன்
ஹஸ்தம் - தாது
சித்திரை - மூலம்
ஸ்வாதி - ஜீவன்
விசாகம் - தாது
அனுசம் - மூலம்
கேட்டை - ஜீவன்
மூலம் - தாது
பூராடம் - மூலம்
உத்திராடம் - ஜீவன்
திருவோணம் - தாது
அவிட்டம் - மூலம்
சதயம் - ஜீவன்
பூரட்டாதி - தாது
உத்திரட்டாதி - மூலம்
ரேவதி - ஜீவன
பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்
அஸ்வினி - பிரம்மா
பரணி - சிவன்
கிருத்திகை - விஷ்ணு
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சிவன்
திருவாதிரை - விஷ்ணு
புனர்பூசம் - பிரம்மா
பூசம் - சிவன்
ஆயில்யம் - விஷ்ணு
மகம் - பிரம்மா
பூரம் - சிவன்
உத்திரம் - விஷ்ணு
ஹஸ்தம் - பிரம்மா
சித்திரை - சிவன்
ஸ்வாதி - விஷ்ணு
விசாகம் - பிரம்மா
அனுசம் - சிவன்
கேட்டை - விஷ்ணு
மூலம் - பிரம்மா
பூராடம் - சிவன்
உத்திராடம் - விஷ்ணு
திருவோணம் - பிரம்மா
அவிட்டம் - சிவன்
சதயம் - விஷ்ணு
பூரட்டாதி - பிரம்மா
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - விஷ்ணு.
நட்சத்திர திரிதோஷம்
அஸ்வினி - வாதம்
பரணி - பித்தம்
கிருத்திகை - கபம்
ரோஹிணி - கபம்
மிருகசீரிடம் - பித்தம்
திருவாதிரை - வாதம்
புனர்பூசம் - வாதம்
பூசம் - பித்தம்
ஆயில்யம் - கபம்
மகம் - கபம்
பூரம் - பித்தம்
உத்திரம் - வாதம்
ஹஸ்தம் - வாதம்
சித்திரை - பித்தம்
ஸ்வாதி - கபம்
விசாகம் - கபம்
அனுசம் - பித்தம்
கேட்டை - வாதம்
மூலம் - வாதம்
பூராடம் - பித்தம்
உத்திராடம் - கபம்
திருவோணம் - கபம்
அவிட்டம் - பித்தம்
சதயம் - வாதம்
பூரட்டாதி - வாதம்
உத்திரட்டாதி - பித்தம்
ரேவதி - கபமபுருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்
அஸ்வினி - தர்மம்
பரணி - ஆர்த்தம்
கிருத்திகை - காமம்
ரோஹிணி - மோட்சம்
மிருகசீரிடம் - மோட்சம்
திருவாதிரை - காமம்
புனர்பூசம் - ஆர்த்தம்
பூசம் - தர்மம்
ஆயில்யம் - தர்மம்
மகம் - ஆர்த்தம்
பூரம் - காமம்
உத்திரம் - மோட்சம்
ஹஸ்தம் - மோட்சம்
சித்திரை - காமம்
ஸ்வாதி - ஆர்த்தம்
விசாகம் - தர்மம்
அனுசம் - தர்மம்
கேட்டை - ஆர்த்தம்
மூலம் - காமம்
பூராடம் - மோட்சம்
உத்திராடம் - மோட்சம்
அபிஜித் - காமம்
திருவோணம் - ஆர்த்தம்
அவிட்டம் - தர்மம்
சதயம் - தர்மம்
பூரட்டாதி - ஆர்த்தம்
உத்திரட்டாதி - காமம்
ரேவதி - மோட்சம்
நட்சத்திர தேவதைகள்
அஸ்வினி - அஸ்வினி குமாரர்
பரணி - யமன்
கிருத்திகை - அக்னி
ரோஹிணி - பிரஜாபதி
மிருகசீரிடம் - சோமன்
திருவாதிரை - ருத்ரன்
புனர்பூசம் - அதிதி
பூசம் - பிரஹஸ்பதி
ஆயில்யம் - அஹி
மகம் - பித்ருக்கள்
பூரம் - பகன்
உத்திரம் - ஆர்யமான்
ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்திரி -விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சக்ராக்னி
அனுசம் - மித்ரன்
கேட்டை - இந்திரன்
மூலம் - நைருதி
பூராடம் - அபா
உத்திராடம் - விஸ்வதேவன்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வாசுதேவன்
சதயம் - வருணன்
பூரட்டாதி - அஜைகபாதன்
உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்
ரேவதி - பூசன
நட்சத்திர ரிஷிகள்
அஸ்வினி - காத்யாயனா
பரணி - ரிஷிபத்தன்யா
கிருத்திகை - அக்னிவேஷா
ரோஹிணி - அனுரோஹி
மிருகசீரிடம் - ஸ்வேதயி
திருவாதிரை - பார்கவா
புனர்பூசம் - வாத்ஸாயனா
பூசம் - பரத்வாஜா
ஆயில்யம் - ஜடுகர்ணா
மகம் - வ்யாக்ரபாதா
பூரம் - பராசரா
உத்திரம் - உபசிவா
ஹஸ்தம் - மாண்டவ்யா
சித்திரை - கௌதமா
ஸ்வாதி - கௌண்டின்யா
விசாகம் - கபி
அனுசம் - மைத்ரேயா
கேட்டை - கௌசிகா
மூலம் - குட்சா
பூராடம் - ஹரிதா
உத்திராடம் - கஸ்யபா
அபிஜித் - சௌனகா
திருவோணம் - அத்ரி
அவிட்டம் - கர்கா
சதயம் - தாக்ஷாயணா
பூரட்டாதி - வத்ஸா
உத்திரட்டாதி - அகஸ்தியா
ரேவதி - சந்தாயணா
நட்சத்திர கோத்திரங்கள்
அஸ்வினி - அகஸ்தியா
பரணி - வஷிஷ்டா
கிருத்திகை - அத்ரி
ரோஹிணி - ஆங்கீரஸா
மிருகசீரிடம் - புலஸ்தியா
திருவாதிரை - புலஹா
புனர்பூசம் - க்ரது
பூசம் - அகஸ்தியா
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - அத்ரி
பூரம் - ஆங்கீரஸா
உத்திரம் - புலஸ்தியா
ஹஸ்தம் - புலஹா
சித்திரை - க்ரது
ஸ்வாதி - அகஸ்தியா
விசாகம் - வஷிஷ்டா
அனுசம் - அத்ரி
கேட்டை - ஆங்கீரஸா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஹா
உத்திராடம் - க்ரது
அபிஜித் - அகஸ்தியா
திருவோணம் - வஷிஷ்டா
அவிட்டம் - அத்ரி
சதயம் - ஆங்கீரஸா
பூரட்டாதி - புலஸ்தியா
உத்திரட்டாதி - புலஹா
ரேவதி - க்ரது
அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்
அஸ்வினி - பஹிரங்கம்
பரணி - பஹிரங்கம்
கிருத்திகை - அந்தரங்கம்
ரோஹிணி - அந்தரங்கம்
மிருகசீரிடம் - அந்தரங்கம்
திருவாதிரை - அந்தரங்கம்
புனர்பூசம் - பஹிரங்கம்
பூசம் - பஹிரங்கம்
ஆயில்யம் - பஹிரங்கம்
மகம் - அந்தரங்கம்
பூரம் - அந்தரங்கம்
உத்திரம் - அந்தரங்கம்
ஹஸ்தம் - அந்தரங்கம்
சித்திரை - பஹிரங்கம்
ஸ்வாதி - பஹிரங்கம்
விசாகம் - பஹிரங்கம்
அனுசம் - அந்தரங்கம்
கேட்டை - அந்தரங்கம்
மூலம் - அந்தரங்கம்
பூராடம் - அந்தரங்கம்
உத்திராடம் - பஹிரங்கம்
திருவோணம் - பஹிரங்கம்
அவிட்டம் - அந்தரங்கம்
சதயம் - அந்தரங்கம்
பூரட்டாதி - அந்தரங்கம்
உத்திரட்டாதி - அந்தரங்கம்
ரேவதி - பஹிரங்கம்
நட்சத்திரங்களூம் தானங்களும்
அஸ்வினி - பொன் தானம்
பரணி - எள் தானம்
கிருத்திகை - அன்ன தானம்
ரோஹிணி - பால் தானம்
மிருகசீரிடம் - கோதானம்
திருவாதிரை - எள் தானம்
புனர்பூசம் - அன்ன தானம்
பூசம் - சந்தன தானம்
ஆயில்யம் - காளைமாடு தானம்
மகம் - எள் தானம்
பூரம் - பொன் தானம்
உத்திரம் - எள் தானம்
ஹஸ்தம் - வாகன தானம்
சித்திரை - வஸ்திர தானம்
ஸ்வாதி - பணம் தானம்
விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்
நட்சத்திர வீதி
அஸ்வினி - நாக வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - கஜ வீதி
மிருகசீரிடம் - கஜ வீதி
திருவாதிரை - கஜ வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - ஆர்ஷப வீதி
பூரம் - ஆர்ஷப வீதி
உத்திரம் - ஆர்ஷப வீதி
ஹஸ்தம் - கோ வீதி
சித்திரை - கோ வீதி
ஸ்வாதி - கோ வீதி
விசாகம் - ஜாரத்கவீ வீதி
அனுசம் - ஜாரத்கவீ வீதி
கேட்டை - ஜாரத்கவீ வீதி
மூலம் - அஜ வீதி
பூராடம் - அஜ வீதி
உத்திராடம் - அஜ வீதி
திருவோணம் - மிருக வீதி
அவிட்டம் - மிருக வீதி
சதயம் - மிருக வீதி
பூரட்டாதி - வைஷ்வானரீ வீதி
உத்திரட்டாதி - வைஷ்வானரீ வீதி
ரேவதி - வைஷ்வானரீ வீதி
நட்சத்திர வீதி(வேறு)
அஸ்வினி - பசு வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - யானை வீதி
மிருகசீரிடம் - யானை வீதி
திருவாதிரை - யானை வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - வ்ரிஷப வீதி
பூரம் - வ்ரிஷப வீதி
உத்திரம் - வ்ரிஷப வீதி
ஹஸ்தம் - ஆடு வீதி
சித்திரை - ஆடு வீதி
ஸ்வாதி - நாக வீதி
விசாகம் - ஆடு வீதி
அனுசம் - மான் வீதி
கேட்டை - மான் வீதி
மூலம் - மான் வீதி
பூராடம் - தகன வீதி
உத்திராடம் - தகன வீதி
திருவோணம் - கன்றுகுட்டி வீதி
அவிட்டம் - கன்றுகுட்டி வீதி
சதயம் - கன்றுகுட்டி வீதி
பூரட்டாதி - பசு வீதி
உத்திரட்டாதி - தகன வீதி
ரேவதி - பசு வீதி
நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்
அஸ்வினி - ஸ்வர்ண பாதம்
பரணி - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை - இரும்பு பாதம்
ரோஹிணி - இரும்பு பாதம்
மிருகசீரிடம் - இரும்பு பாதம்
திருவாதிரை - வெள்ளி பாதம்
புனர்பூசம் - வெள்ளி பாதம்
பூசம் - வெள்ளி பாதம்
ஆயில்யம் - வெள்ளி பாதம்
மகம் - வெள்ளி பாதம்
பூரம் - வெள்ளி பாதம்
உத்திரம் - வெள்ளி பாதம்
ஹஸ்தம் - வெள்ளி பாதம்
சித்திரை - வெள்ளி பாதம்
ஸ்வாதி - வெள்ளி பாதம்
விசாகம் - வெள்ளி பாதம்
அனுசம் - வெள்ளி பாதம்
கேட்டை - தாமிர பாதம்
மூலம் - தாமிர பாதம்
பூராடம் - தாமிர பாதம்
உத்திராடம் - தாமிர பாதம்
திருவோணம் - தாமிர பாதம்
அவிட்டம் - தாமிர பாதம்
சதயம் - தாமிர பாதம்
பூரட்டாதி - தாமிர பாதம்
உத்திரட்டாதி - தாமிர பாதம்
ரேவதி - ஸ்வர்ண பாதம்