Thursday, 23 January 2020

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: ஆன்மீக பொன் மொழிகள்

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: ஆன்மீக பொன் மொழிகள்: 1.ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்...

Monday, 6 January 2020

சந்திரன் சனி கிரக சேர்க்கை

சந்திரனின் கிரக சேர்க்கை வரிசையில் அடுத்து நாம் பார்ப்பது....
சந்திரன் சனிஙஸ சேர்க்கை அல்லது பார்வை அல்லது பரிவர்த்தனை.......
இது ஒரு மீள்பதிவு
இது புனர்பூ தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது வாழ்நாள் முழுவதும் செத்து பிழைப்பது.
இது பொதுவாழ்க்கைக்கு சிறப்பாகவும்....
குடும்ப வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என்று பொருள்.
இவர் கடும் உழைப்பாளியாக இருப்பார்.
எப்போதும் ஒருவித சோகத்துடனும்.... தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பர்.
இவர் பழமைவாதி..... பழம்பெரும் விஷயங்களைப் பேசுபவராக இருப்பார்.
பிறரை குறை கூறிக் கொண்டே இருப்பார் அதனால் இவரிடம் யாரும் நட்புடன் பழக மாட்டர்.
இவர்களுக்கு யூக அறிவு சிறப்பாக இருக்கும்.
இந்த சேர்க்கை உள்ளவர்கள் பகலில் சாமியாராகவும்...... இரவில் சம்சாரியாகவும் இருப்பர்.
இவர்களுக்கு எந்த சுபகாரியமும் தாமதமாகத்தான் நடக்கும்.
ஒவ்வொரு முயற்சியும் முதலில் தோல்வியும் அதன் பிறகு வெற்றியையும் தரும்.
ஏதேனும் ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர்.
மற்றவர்களின் சுமைகளை இவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதனால்.... இவர்கள் அடிக்கடி சாமியாராக போய்விடுவேன்..... என்று கூறிக் கொண்டே இருப்பர்.
இவர்களிடம் தொழில் பற்றிய அறிவு மிக சிறப்பாக இருக்கும்..
இவர்கள் யோசனை சொல்லி முன்னுக்கு வந்தவர்கள் அதிகம் இருப்பர்.
இவர்கள் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருப்பதால் மற்றவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது.
எல்லாவற்றிற்கும் கணக்கு பார்ப்பவர்களாக இருப்பார்கள்.... மேலும் இவர்கள் இல்வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வருவார்களானால் தன்னுடைய உழைப்பினால் மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்.
தொழிலில் கவனம் முழுவதும் செலுத்தும்போது மிகப்பெரிய அளவில் புகழடைவார்கள்....
குடும்பம் அமைப்பு என்று வரும்போது சுமாராகத்தான் குடும்ப விஷயங்களை கவனிப்பார்கள்.
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு.... நிச்சயித்த திருமணம் கூட.....
கடைசி நேரத்தில் நின்று விடும் வாய்ப்பு உண்டு.
எப்பொழுதுமே தொழில் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி செய்கின்ற தொழில்களையும் செய்கின்ற இடத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
சந்திரன் என்றாலே பாதிநாள் வளர்ச்சியையும் பாதிநாள் தேய்மானத்தையும் குறிக்கும் இவர்கள் செய்கின்ற தொழிலும் அப்படியே நிலை இல்லாமல் இருக்கும்.
ஒரு மளிகைக் கடை வைத்திருக்கும் நபர் கூட இந்த சேர்க்கை இருந்தால் வாழ்நாளில் எப்படியும் குறைந்தது 10முறையாவது கடை நடத்தும் இடத்தை மாற்றி இருப்பார்.
அதே மாதிரி சந்திரன் என்பது இடமாற்றத்தை குறிப்பதால் அடிக்கடி பயணம் செய்துகொண்டே இருப்பது இவர்களில் அமைப்பாகும் மெடிக்கல் representative மற்றும் மார்க்கெட்டிங் வேலையில் உள்ள நபர்கள் இந்த கிரக சேர்க்கை இருக்கும்.
முக்கியமாக எங்களைப்போன்ற ஜோதிடர்களுக்கு இந்த கிரக சேர்க்கை இருக்குமானால் வாடிக்கையாளர்களின் நிறைகுறைகளை அல்லது குற்றங்களை எளிதில் கண்டுபிடித்து விடும் வாய்ப்பு வந்து விடும்.
ஒரு சில நேரங்களில் திருமண தாமதத்திற்கு இந்த கிரகமும் பங்காற்றுகிறது. தாலிகட்டும் வரை நிச்சயம் இருக்காது.
இது பொதுவான பலன்களே.... அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில்.. அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.... சுபர்களின் பார்வையில்.... அல்லது அசுபர்களின் பார்வையில்....பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை..

Saturday, 4 January 2020

ஜோதிடம்( இதற்கு ஆதாரம் கேட்ககூடாது ஆய்வுசெய்து பார்க்கவும் சரியாக இருக்கும்)

ஜோதிடம்( இதற்கு ஆதாரம் கேட்ககூடாது ஆய்வுசெய்து பார்க்கவும் சரியாக இருக்கும்)
இதுவரை யாரும் கூறாதது ஏன்?
ஒரு இராசியின் குணம் என்பது அதன் பின் உள்ள இராசியின் குணமே உள்ளிருக்கும் ஒருவருக்கு ,
மேஷராசியில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மீனம் ,மீன் போல் விழிப்புடன் இருப்பார்கள் ,பேச்சில் சொல்திரிபுடன் பேசுவார்கள்,காரணம் இரண்டுமீன் உள்ளதால்,
ரிஷபம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மேஷம் எனவே மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் இருக்கும்,
மிதுனம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி ரிஷபம் ,எனவே இவர்களின் செயல் கர்மாவின்(தொழில்) அடிப்படையில் மட்டும் இருக்கும்,
கடகம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மிதுனம் ,எனவே இவர்களிடம் சொல்திரிபு இருக்கும் ஆண்,பெண் தன்மையில் இருக்கும்,
சிம்மம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி கடகம், எனவே இவர்கள் எப்பொழுதும் எதையும் அடையவேண்டும் என்று பசியுடன் இருப்பார்கள்,
கன்னி இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி சிம்மம், எனவே அமைதியாக இருப்பார்கள்,எதுவும் சிக்கினால் விடமாட்டார்கள்,
துலாம் இராசி
இதில்பிறந்தவர்களுக்கு பின்ராசி கன்னி, எனவே இவர்கள் அனைவரையும் ஈர்க்கும் தன்மையான குணம் இவர்களிடம் உண்டு,
விருச்சிகம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி துலாம் ,எனவே இவர்களிடம் எதையும் சீர்தூக்கி பார்த்து சரி தவறு என்று கூறும் குணம் உண்டு,
தனுசு இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி விருச்சிகம் ,எனவே இவர்களிடம் தேளின் குணம் இருக்கும்,
மகரம் இராசி
இதில் பிறந்தவர்களூக்கு பின்ராசி தனுசு ,எனவே இவர்களிடம் யுத்தம் செய்து எதையும் அடையும் குணம் உண்டு,
கும்பம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி மகரம்,எனவே இவர்களிடம் யாழின் இசைபோல் பேசும் குணம் உண்டு,
மீனம் இராசி
இதில் பிறந்தவர்களுக்கு பின்ராசி கும்பம்,எனவே கும்பத்தில் பொருள்மறைவாக உள்ளதுபோல் இவர்கள் குணம் எதையும் மறைக்கும் குணம் உண்டு ,

ஆறாம் பாவகம்


                                                       ஆறாம் பாவகம்
ஜாதகருக்கு 6, 8, 12 இடங்கள் காற்று ராசியாக இருந்தால் ஆயுள் குறைவு உண்டு.
கிரக நோய்கள்
சூரியன்
இருதய நோய், எலும்பு முறிவு, ஒற்றைதலைவலி, மஞ்சள் காமாலை, ஜுரம், நெருப்பினால் ஏற்படும் புண், வெட்டுக்காயம், தோலில் ஏற்படும் குஷ்டம், பித்த உடல், கண்பார்வை குறைவு, மனநோய், மாறுதல், செரிமான கெடுதல், வயிற்றுப்போக்கு, தலைவலி, இமேஜ் எல்லாம் சூரியனுடைய நோய்கள்
சூரியன் சூரியன் சாரத்தில் இருந்தால் கட்டாயம் காய்ச்சல் வரும், தாங்கமுடியாத எரிச்சல் உடம்பில் இருக்கும் ,ஆறாத புண் இருக்கும், எப்பவும் சொறிந்து கொண்டே இருப்பார்கள்.
சூரியன் சந்திரன் சாரத்தில் இருந்தால் தன்னம்பிக்கை இருக்காது. ஜாதகர் உணர்ச்சி வசப்படுவார்.
சூரியன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும் ரத்த அழுத்தம் இருக்கும் அல்லது low bp, high bp இருக்கும், தலைசுற்றல் வரும், இவர்கள் ராட்டினம் ஏறக்கூடாது, உயரமான மாடியில் இருந்து எட்டி பார்க்க கூடாது.
சூரியன் புதன் சாரத்தில் இருந்தால் ஒற்றை தலைவலி வரும்.
சூரியன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நீர்த்தாரையில் பிரச்சனை இருக்கும்.
சூரியன் சனி சாரத்தில் இருந்தாள் ஓ பி பி வரும்.
சூரியன் ராகு சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். சோம்பல் இருக்கும். தன்னை மறந்து இருப்பார்.
சூரியன் கேது சாரத்தில் இருந்தால் ரத்தக் குறைவு, இருக்கும்.
குருவும் சூரியனும் பலம் குறைந்தால் பாதிப்பு இருக்கும் high bp வரும்.
சனி சூரியன் பாதிப்படைந்தால் லோ பிபி வரும்.
செவ்வாய் சூரியன் பாதிப்படைந்தால் ஒற்றைத் தலைவலி, இருதய நோய், வயிற்று பிரச்சனை இருக்கும்.
சூரியன் கும்பத்தில் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
சூரியன் ராகு இணைவு உயர் ரத்த அழுத்தம், கண் நோய் இருக்கும்.
சூரியன் செவ்வாய் இணைவு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால், லக்னத்தில் இருந்தாலும், கருக்கலைப்பு கண்டிப்பாக இருக்கும்.
லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருக்க செவ்வாய் திசையில் பன்றி காய்ச்சல் வரும்.
நீர் ராசியில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் ஜாதகர் குடிகாரனாக இருப்பான்.
சூரியனுக்கு சுக்கிரன் மூன்று டிகிரிக்குள் இருந்தால் உடலுறவில் அதிக நாட்டம் இருக்கும்.
சூரியன் சனி இணைவு காசநோய் வரும்.

சந்திரன் நோய்கள்
இருதயம், நுரையீரல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காசநோய், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, குடல் வால்வு நோய், மாதவிடாய் கோளாறு, நரம்பு தளர்ச்சி, ரத்தம் கெட்டுப் போவது, தோல் நோய், இரத்தசோகை, செரிமான கோளாறு, இருமல், கண்புரை, கண் குறைபாடு, கண் பார்வை குறைவு, தலைசுற்றல், உடலுறவு நோய், கருவுறுதல், இவையெல்லாம் வரும்.
சந்திரன் சூரியன் சாரத்தில் இருந்தால் ஜாதகர் உணர்ச்சிவசப்பட்டு கொண்டே இருப்பார்.
சந்திரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் நல்ல கற்பனை வளம் இருக்கும். கவலையற்ற வாழ்க்கை வாழ்வார்.
சந்திரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் தோல் நோய், யூரியனில் ரத்தம் வரும்.
சந்திரன் புதன் சாரத்தில் இருந்தால் கற்பனைவாதி, எப்போதும் மன கவலை இருந்து கொண்டே இருக்கும்.
சந்திரன் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நோய் எதிர்ப்பு ஜாதகருக்கு குறைவாக இருக்கும். பாலியல் நோய் வரும். மோசமான உடல் நலம் இருக்கும்.
சந்திரன் சனி சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பார்.
சந்திரன் ராகு சாரத்தில் இருந்தாள் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். மன குழப்பம் இருக்கும்.
சந்திரன் கேது சாரத்தில் இருந்தால் ஜாதகர் எரிச்சலான பேச்சு பேசிக்கொண்டே இருப்பார். முடிந்தவரை மற்றவர்களை எதிர்த்து பேசுவார்கள், முடியாத நிலையில் காலில் விழுந்து விடுவார்கள்.
அமாவாசையில் பிறந்தால் உடல்நிலை குறைவு உண்டு 3 இல் சந்திரன் பலம் குறைந்தால் மனச்சிதைவு ஏற்படும் ஆறில் சந்திரன் இருந்தால் உடல் நலம் கெடும், சக்தி குறைவு.
எட்டில் சந்திரன் இருந்தால், சிறுநீரக கோளாறு கணவன் மற்றும் தாயின் ஆயுள்காலம் கெடும்.
மேஷத்தில் சந்திரன் இருந்தால் சகிப்புத்தன்மை இருக்காது.
விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால அகண்ட மார்பகம் இருக்கும். பால் இருக்காது. மிகுந்த உணர்ச்சி வசப்படுவார்கள்.
மீனத்தில் சந்திரன் இருந்தால் மன நோய் தாக்கும், குடிப்பழக்கத்திற்கு கொண்டுசெல்லும், போதைக்கு அடிமையாவார்கள், இவர்களுக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்கும், எந்த விஷயத்திற்கும் இவர்கள் ஒத்துப்போக மாட்டார்கள்.
சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு கண் நோய் வரும், தாய்ப்பாசம் இல்லாதவராக இருப்பார், மாற்று தாய் உடையவராக இருப்பார்.
6, 8, 12 ல் சந்திரன் இருந்தால் அல்லது சம்பந்தம் இருந்தால் மனசு பலவீனமாக இருக்கும். பயந்த சுபாவம் ஆக இருப்பார்.
செவ்வாய் சனிக்கு நடுவில் சந்திரன் இருந்தால் மூச்சு திணறல் கண்டிப்பாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட பலமிழந்த சந்திரன் இருந்தால் ஜாதகரின் தாய் படுத்த படுக்கையாக இருப்பார்.
சந்திரன் செவ்வாய் சம்பந்தப்பட்டால் உடல்நிலை பலமற்றதாக இருக்கும் ரத்த சம்பந்தமான நோய், புற்றுநோய் இருக்கும்,
பலமற்ற சந்திரன் எட்டில் இருக்க அந்த நபர் நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புண்டு.
எட்டாம் பாவத்தில் சந்திரன் கேது இருக்க பைல்ஸ் வரும்.
எட்டில் பலமற்ற சந்திரன் இருக்க சிறுவயதில் உடல்நிலை மோசமாக இருக்கும்.
லக்னத்தில் சந்திரன் செவ்வாய் இருக்க தன்னை கட்டுப்படுத்த முடியாதவராக இருப்பார். முன் கோபியாக இருப்பார். திடகாத்திரமான மனசு உள்ளவராக இருப்பார்.
சந்திரன் புதன் பாதிக்கப்பட்டால் அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார்கள். தாழ்வுமனப்பான்மை இருக்கும்.
சந்திரன் சுக்கிரன் சேர்ந்து 7, 11 ல் இருந்தால் எப்போதும் பெண்கள் சூழ்ந்து இருப்பார்கள்.
சனி சந்திரன் தாழ்வு மனப்பான்மை, கவலை இருக்கும்.
செவ்வாய் நோய்கள்
வெட்டுக் காயங்கள், கொப்பளம், காயங்கள், எலும்பு முறிவு, சுட்ட புண், எரிச்சல், மஞ்சள் காமாலை, ரத்தம் வடிதல், ரத்த கொதிப்பு, காக்கா வலிப்பு, கட்டிகள், ஆசனவாய் நோய், பல்நோய் ஆகும்.
செவ்வாய் சூரியன் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும்.
செவ்வாய் சந்திரன் சாரத்தில் இருந்தால் தோல் வியாதி வரும்.
செவ்வாய் செவ்வாய் சாரத்தில் இருந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
செவ்வாய் புதன் சாரத்தில் இருந்தால் மன சிதறல் இருக்கும்.
செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் வரும்.
செவ்வாய் சனி சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.
செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.
செவ்வாய் கேது சாரத்தில் இருந்தால் HIGH பி பி பொறுமை இல்லாதவர்கள்.
செவ்வாய் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பு. லக்னத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும்.
லக்னத்தில் செவ்வாய் சந்திரன் இருந்தால் கொப்பளம் வீக்கம், ரத்தப்போக்கு இருக்கும்.
லக்னத்தில் செவ்வாய் புதன் இருந்தால் வயிற்றுப்போக்கு, நரம்புத்தளர்ச்சி இருக்கும்.
லக்னத்தில் செவ்வாய், குரு இருந்தால் ஜாதகருக்கு எலும்பு உடையும்.
லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் இருந்தால் பாலியல் வியாதி வரும்.
லக்னத்தில் செவ்வாய் சனி இருந்தால் மனைவி ஓடிவிடுவார், சூதாட்டத்தில் விரயம் இருக்கும், பொய் பேசுவார்கள், இவர்களுக்கு sex ஆர்வம் அதிகமாக இருக்கும்.
3 இல் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் சிறு விபத்து இருக்கும். தொண்டை நோய், காது சம்பந்தமான நோய் இருக்கும்.
ஆறில் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் வண்டியில் விபத்து ஏற்படும். தீக்காயம் இருக்கும்.
சூரியன் செவ்வாய் சேர்ந்து பாவிகளின் பார்வையில் இருந்தால் விபத்து அல்லது வெட்டுக்காயம் ஏற்படும்.
சந்திரன் செவ்வாய் எங்கிருந்தாலும் பாவிகளின் சம்பந்தம் இருந்தால் ரத்தப் போக்கு, விபத்து இருக்கும்.
குரு செவ்வாய் கெட்டு ஏழாம் பாவத்திற்கு தொடர்பு இருந்தால் விரை வீக்கம், குடல் வால் நோய் இருக்கும்.
ஒன்பதில் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் விபத்து இருக்கும்.
12 ல் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் அறுவை சிகிச்சை உண்டு.
செவ்வாய் விருச்சிகத்தில் கெட்டால் ஆசனவாயில் கொப்பளங்கள் கட்டாயம் இருக்கும்.
கெட்டுப் போவது என்பது திதி சூன்யம், பாதகம் இவையெல்லாம் பார்த்து ஆறு, எட்டு தொடர்பு பார்த்து பின்புதான் பலன் எடுக்க வேண்டும்.
செவ்வாய் குரு சேர்க்கை குறைந்த ரத்த அழுத்தம் ரத்தசோகை இருக்கும்.
செவ்வாய் எட்டாம் அதிபதியாகி ஐந்தில் இருந்தால் சந்திரனுடன் தொடர்பும் இருந்தாள் மனநோய் உண்டு.
செவ்வாய், சனி லக்னத்தில் இருந்தால் பொய் பேசுவது, அவனுக்கு அவனே எதிரி. நட்பு பாவம் கெடும். உடலில் ஏற்படும் தோல் நோய் இருக்கும்.
புதன் நோய்கள்
மூளையில் ஏற்படும் மாறுதல்கள், மனநோய், பேச்சு குழறுதல், நரம்பு தளர்ச்சி, ஆண்மை தன்மை இழப்பு, சொறி, சிரங்கு, எலும்பு முறிவு, டைபாய்டு, அதிகமான வியர்வை வருதல், அதிர்ச்சி, கண், காது, மூக்கு நோய், வெண்குஷ்டம், செரியாமை, கல்லீரல், வயிறு, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்.
புதன், சூரியன் சாரத்தில் இருந்தால் நரம்பு சம்பந்தமான வியாதி. அதிக வியர்வை வருதல்.
புதன் சந்திரன் சாரத்தில் இருந்தால் மிகுந்த கற்பனை வியாதி இருக்கும்.
செவ்வாய் சாரத்தில் இருந்தால் தலைவலி, மன சிதறல் இருக்கும்.
புதன், புதன் சாரத்தில் இருந்தால் ஜாதகர் தன்னம்பிக்கை மிகுந்தவர், மனக்கட்டுப்பாடு இருக்கும்.
புதன், குரு சாரத்தில் இருந்தால் மிகுந்த சக்தி உடையவர்.
புதன், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் தோலில் ஏற்படும் வியாதிகள்.
புதன், சனி சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். புதன், ராகு சாரத்தில் இருந்தால் தாழ்வு மனப்பான்மை இருக்கும்.
புதன், கேது சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும்.
புதன், ஆறாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டு லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அலியாவார்.
மூன்று 11 இல் சந்திரனுடன் புதன் சேர்ந்தால் காது நோய் வரும்.
புதன் ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் நரம்புத் தளர்ச்சி வரும்.
புதன் 6 ல் இருந்தால் சோம்பேறி பலவித நோய் வரும், மோசமான நடத்தை உடையவர், இவர்கள் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.
புதன் 6, 8, 12 ல் இருந்தால் அக்கி கட்டி வரும்.
புதன் 6, 8, 12 ஆம் இடத்தை பார்த்தாலும் அக்கி கட்டி வரும்.
மேஷத்தில் புதன் இருந்தால் வாதாடுபவர் ஆக இருப்பார்கள். தேவையில்லாமல் வாக்குவாதம் செய்வார்கள். சூதாடுவார்கள், மனநோய் மனஅழுத்தம் உடையவராக இருப்பார்கள், ஆசனவாய் நோய் இருக்கும்.
புதன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்தால் இருதயம் பாதிக்கப்படும்.
புதன் 6, 8, 12 க்கு சம்பந்தப்பட்டால் நரம்புத் தளர்ச்சி வியாதி கட்டாயம் இருக்கும்.
புதன் சனி சேர்ந்திருந்தால் அடுத்தவர்களை ஏமாற்றுவார்கள், சொன்ன சொல் கேட்க மாட்டார்கள். தாழ்வு மனப்பான்மை இருக்கும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
குரு நோய்கள்
கல்லீரல், கணையம், நுரையீரல், தொடைகள், கொழுப்பு, மூளை, நாக்கு, காது, சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, ரத்தசோகை, உடல் வலிகள், மனக்குழப்பம், வயிறு, வயிற்றுக் கோளாறு, காது, நுரையீரல், மர்ம உறுப்புகளில் நோய், தலைச்சுற்றல், காய்ச்சல், மயக்கம், விரை வீக்கம், மூளை நோய், கண்புரை, உடல் உறுப்புக்கள்.
குரு சூரியன் சாரத்தில் இருந்தால் தொற்றுநோய், காய்ச்சல், செரிமானமின்மை, உணவு குறைத்து சாப்பிடுவது.
குரு சந்திரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
குரு செவ்வாய் சாரத்தில் இருந்தால் நீர்த்தாரையில் கல் இருக்கும், குடலில் நோய் வலி இருக்கும்.
குரு புதன் சாரத்தில் இருந்தால் விரைவீக்கம், ஆசனவாய் நோய் இருக்கும்.
குரு குரு சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
குரு சுக்கிரன் சாரத்தில் இருந்தால் தலைசுற்றல், வாந்தி, மஞ்சகாமாலை, உடல் உறவில் நாட்டமில்லாமல் இருப்பார்.
குரு சனி சாரத்தில் இருந்தால் நோய் குணமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும்.
குரு ராகு சாரத்தில் இருந்தால் வயிற்றுப் போக்கு இருக்கும்.
குரு கேது சாரத்தில் இருந்தால் கல்லீரல் வீங்குதல், தொற்று நோய்கள் வரும்.
குரு கெட்டுப்போய் ஆறாம் இடத்தை பலமற்று பார்த்தால் சர்க்கரை நோய் வரும்.
குரு கெட்டுப்போய் எட்டாம் பாவத்தை பார்த்தால் ஆசனவாய் நோய் இருக்கும்.
மூன்று, எட்டாம் அதிபதிகள் சேர்ந்து பலமற்று, குரு சம்பந்தம் பெற்றால், பேசுவதில் பிரச்சனை இருக்கும்.
நாலாமிடம் ஒருவருக்கு கடக ராசியாக இருந்து அதில் குரு பலமற்று அமர இருமல் இருக்கும்.
எட்டில் குரு நல்ல சாவு.
6 ல் குரு சில நோய்களில் உடல்நிலை கோளாறு ஏற்படும்.
மகரத்தில் பலமற்ற குரு இருந்தால் புத்திர சோகத்தை கொடுக்கும்.
சுக்கிரன் நோய்கள் பாலியல் நோய், சர்க்கரை வியாதி, மூத்திரப்பைகள், கண்புரை, மயக்கம், வலிப்பு ,பிறப்புறுப்பு நோய், வெண்குஷ்டம், அதிகமான பாலியல் நாட்டம், அதிக வெள்ளைப்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு.
சுக்கிரன் சூரியன் சாரத்தில் இருந்தால் கண் குறைபாடு நோய்.
சுக்கிரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் பிறப்புறுப்பில் குறைகள் இருக்கும்.
சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் பாலியல் வெறி உணர்வு இருக்கும்.
சுக்கிரன் புதன் சாரத்தில் இருந்தால் தோளில் புள்ளிகள் இருக்கும், தோல் வியாதி இருக்கும், எரிச்சல் இருக்கும்.
சுக்கிரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.
சுக்கிரன் சனி சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் இருக்கும்.
சுக்கிரன் ராகு சாரத்தில் இருந்தால் நரம்புத் தளர்ச்சி இருக்கும், பாலியல் சம்பந்தமான நோய் இருக்கும்.
சுக்கிரன் கேது சாரத்தில் இருந்தால் பாலியல் நோய், கண்நோய், விந்து கோளாறு, ரத்தத்தில் அணுக்கள் குறைவு,
சுக்கிரன், செவ்வாய், சனி, ஆறாம் அதிபதி சம்பந்தம் பெற்றால் பித்தம் சம்பந்தமான நோய் ஏற்படும். சுக்கிரன் சனியால் பாதிக்கப்பட்டால் முகம் அழகு கெடும், முகத்தில் கொப்பளம் தரும்.
சுக்கிரன் மூத்திரத்தை குறிக்கும் மேலும் விந்து, கண்பார்வை இவைகளையும் குறிக்கும்.
சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் மூத்திர பையை மட்டும் குறிக்கும்.
சுக்கிரன் பலம் பெற்று புதன் சனியால் சம்பந்தப்பட்டால் உடலுறவு ஈடுபாட்டில் குறைவு ஏற்படும்.
ஆறில் சுக்கிரன் இருந்தால் ஆண்மையற்றவர், உடலுறவில் திருப்தி படுத்த முடியாதவராக இருப்பார்கள்.
சுக்கிரன் சனி ராகுவிற்கு நடுவில் இருந்தால் தாம்பத்தியம் இல்லை.
ஆறாமிடம் நீர் ராசியாகி சுக்கிரன் இருந்தால் மதுவிற்கு அடிமையாக இருப்பார்கள்.
சுக்கிரன் கடகத்தில் இருந்து எட்டாவது பாவமாக இருந்து செவ்வாய் அல்லது ராகு பார்க்க மூத்திர பையில் நோய் வரும்.
சுக்கிரன் பாபர் ஆனால் போதை சர்க்கரை வியாதி வரும்.
8 ல் சனி சுக்கிரன் இருந்தால் லோ பிபி, காம வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும்,
சனி நோய்கள்
சுற்றுச்சூழல் மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள், மனச்சிதைவுகள், வயிறு, உணவு செரியாமை, குடலில் ஏற்படும் மாறுபாடுகள், வெட்டுக்காயம், சிராய்ப்பு, கைகால்களை கிழித்தல், மனநோய், கண்நோய், கட்டிகள், சுரப்பிகளில் ஏற்படும் நோய், புற்று நோய், பக்கவாதம், மூட்டு தளர்வு, காது கேட்காமல் இருப்பது. மிக நீண்டகாலமாக குணமாகாத வியாதிகள். சனி காலம் கடத்துதல், தடைகள், தடங்கல், துன்பம், கஞ்சத்தனம், இவையெல்லாம் சனி நோய்கள்.
சனி சூரியன் சாரத்தில் இருந்தால் கண் நோய், காசநோய்.
சனி சந்திரன் சாரத்தில் இருந்தால் மாதவிடாய் பிரச்சனை, எதிர்காலத்தை பற்றி பயம், கடின உழைப்பாளி.
சனி செவ்வாய் சாரத்தில் இருந்தால் அடிக்கடி ஏற்படுகின்ற காய்ச்சல் கொப்புளங்கள், கட்டிகள், ரத்தம் சம்பந்தமான நோய்கள், வயிற்றுவலி.
சனி புதன் சாரத்தில் இருந்தால் ஞாபக சக்தி குறைவு, தன்னம்பிக்கை குறைவு, நரம்புத்தளர்ச்சி, வரும்.
சனி குரு சாரத்தில் இருந்தால் சோம்பேறி, எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், உயர் ரத்த அழுத்தம் இருக்கும், மஞ்சக்காமாலை, அதிக அளவு உணவு உன் கொள்பவர்களாக இருப்பார்கள்,
சனி சுக்கிரன் சாரத்தில் பாலியல், கண், உணவுப்பை
இதில் நோய்.
சனி சனி சாரத்தில் இருந்தால் மிக சிறப்பான உடல்நலம்.
சனி ராகு சாரத்தில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாத நோய், அவ நம்பிக்கை உடையவர், ஆண்மை யில்லாதவன்.
சனி கேது சாரத்தில் இருந்தால் நீர்வற்றி போகுதல், வெற்றுப்பு, சுரப்பிகள் மாற்றம் இருக்கும்.
சனி புதன் கெட்டால் பய உணர்வு நிரந்தரமாக இருக்கும்.
சனியால் குரு கெட்டால் ஆண்தன்மை ஆண் தன்மையை பாதிக்கும்.
சனி சூரியன் இருவரும் பாவிகளின் பார்வை இருந்தால் பாலியல் நோய், பீதிநோய், நீண்ட நோய்களுக்கு காரணம்
சனி சனியால் புதன் கெட்டு மிதுனம் கன்னியில் இருந்தால் நரம்பு தளர்ச்சி வரும்.
லக்னத்தில் சனி இருந்து ஏழில் குரு பாவி இருக்க ஜாதகன் ஆண்மை அற்றவர், உடலுறவில் மகிழ்ச்சி இருக்காது.
சந்திரனுக்கு கேந்திரத்தில் சனி நிற்க மனத் தளர்ச்சி, சோர்வு இருக்கும்.
சுக்கிரனுக்கு இரண்டில் சனி இருக்க மிகவும் வேகமானவர்.
கோச்சாரசனி வக்கிரம் பெற்று ஆறில் இருக்கும் கிரகத்தின் மீது வரும் போது நோய் வரும்.
சனி, ராகு, கேது பலம் பெற்று லக்னாதிபதியை பார்த்தால் சர்க்கரை வியாதி வரும்.
சனி, செவ்வாய், ராகு, கேது, ஆறு, எட்டு பன்னிரெண்டில் இருக்க அந்த ராசிகள் நீர் ராசியானால் சர்க்கரை நோய் உண்டு.
ராகு நோய்கள்
ராகு கேது என்றால் நிழல் கிரகங்கள் சாயா கிரகங்கள்.
ராகு சந்திரன் சேர்க்கை சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் ஹிஸ்டீரியா என்ற நோய் வரும், மனநோய் இருக்கும், பைத்தியம் பிடித்தல், மதவெறி வரும், இதுவே விருச்சிக லக்னத்திற்கு பொருந்தி வராது.
புதனுக்கு ராகு கேது சேர்க்கை இருந்தால் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாது.
ராகு கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் விபரீத காமம் இருக்கும், ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.
ராகு கேதுவுடன் சனி சம்பந்தம் இருந்தால் இதை குரு பார்த்தால் யோகம் இல்லை என்றால் தற்கொலை முயற்சி இருக்கும், கொடூரமானவராக இருப்பார், மரியாதை தெரியாதவர்களாக இருப்பார்கள், ஆண்மையற்றவர்,விபத்து இருக்கும்.
ராகு கேதுவுடன் செவ்வாய் சேர விரைவீக்கம், மூத்திரம் கோளாறு இருக்கும். பெண்கள் ஜாதகத்தில் லக்னம் நவாம்ச லக்னம் ராகு அல்லது கேது இருப்பின் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பார்கள்.
ராகு கேதுவுடன் செவ்வாய் இருந்தால் அடிக்கடி விபத்து இருக்கும்.
லக்னத்தில் ராகு உடல் நலம் கெடும்.
ஐந்தில் ராகு இருந்து பாவிகளின் பார்வை இருப்பின் மறதி, புத்தி பேதலிப்பு.
ஆறில் ராகு கைகால் மூட்டுவலி, நரம்புகள் இயங்காமல் இருக்கும்.
12ல் ராகு தொழுநோய், என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத நோயாக இருக்கும்.
ராகு குரு இனைவு எட்டில் இருக்க வயிற்றில் பிரச்சனை,செவ்வாய் சம்பந்தம் பெற்றால் வயிற்றில் அறுவை சிகிச்சை உண்டு.
சந்திரனுக்கு ஐந்தில் ராகு இருக்க அடிக்கடி விபத்து நீரினால், அபாயம் இருக்கும்.
ஜாதகத்தில் ராகு கேது 6, 12 ஆக இருந்தால் நிச்சயமாக அந்தக் கிரகத்தின் திசா புத்தியில் நரம்பு சம்பந்தமான வியாதி இருக்கும்.
சனி லக்னாதிபதியாகி செவ்வாய் அல்லது கேது சம்பந்தம் பெறுவது எப்போது காமத்தைப் பற்றியே சிந்தனை இருக்கும்.
சனி அல்லது ராகு லக்னத்தில் இருப்பது காமம்அதிகமாக இருக்கும்.
சனி ராகு சந்திரன் சேர்ந்திருப்பது எட்டாம் அதிபதி சனி ராகு நடுவில் இருப்பது காமம் அதிகம்.
ராகு சந்திரன் இருப்பது மனக்கோளாறு இருக்கும், பேச்சை மாற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்.
ராகு லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ தொடர்பு இருந்தால் உடல் முழுவதும் அரிப்பு இருக்கும்.
ராகுவின் நோய் இதன் ஆளுகை கால்பாதம், சுவாசம் ஸ்பீரியஸ், அர்டினி சுரப்பிகள், குடல் நோய், அறிவு குறைபாடு, குடல்புண், கொப்பளங்கள், குஷ்டம், தோல் நோய், எரிச்சல் தன்மை, கண்டுபிடிக்க முடியாத நோய், மேலே இருந்து கீழே விழுவது இவையெல்லாம் வரும். பண்பு, வைராக்கியம் உள்ளவர்கள், குணமாக எடுப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
கேது நோய்கள்
மண்ணீரல் வீங்குதல், கண் புரை, விரை வீக்கம், நுரையீரல் பாதிப்பு, காய்ச்சல், வயிற்றுவலி, உடலில் வலி, எந்த காரணத்தால் வியாதி என்று புரியாமல் இருக்கும், வாந்திபேதி இருக்கும், அடிக்கடி காய்ச்சல் வரும், வெட்டுக்காயம், அரிப்பு, படை, கொப்பளங்கள், கால் பாதம் எரிவது, குஷ்டம், தற்கொலை எண்ணம், இவையெல்லாம் கொடுக்கும்.
கேது சனி 7 இல் இருக்க கொப்புளங்கள் வரும்.
லக்னத்தில் கேது உடல் நலம் இல்லாமல் இருக்கும், தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
11-ல் கேது இருந்தால் நோய் தரும்.
கேது புதன் மிதுனம் கன்னியில் இருந்தால் முதுகுத்தண்டு, பற்களில் பிரச்சனை வரும்,
ஆறில் கேது இருந்து சனி பார்த்தால் சனி கேது புக்தியில் நோயிருக்கும்.
லக்னத்தில் கேது உடல்நல கோளாறு, வாயுக் கோளாறு, இருக்கும் ஆசனவாய் நோய் இருக்கும், மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும்.
மூன்றில் கேது கை, தோள்பட்டையில் பிரச்சனை, இருக்கும்.
ஐந்தில் கேது வயிற்றில் பிரச்சனை, வாயுகோளாறு, மனப்போராட்டம் அதிகமாக இருக்கும்.
ஏழில் கேது கீழ்ஜாதி பெண்களுடன் சேர்க்கை இருக்கும் சிறுநீர் தாரையில் நோய் இருக்கும், மீறினால் ஆபத்து, பயம் இருக்கும்.
எட்டில் கேது மோசமான உடல்நிலை, மர்ம இடத்தில் நோய் இருக்கும்.
பத்தில் கேது வாயுத் தொல்லை இருக்கும், கேது மிதுனத்தில் இருந்தாலும் வாயுத் தொல்லை இருக்கும்.
கேது துலாத்தில் இருந்தால் தோல் நோய் இருக்கும்.
கேது கன்னியில் இருந்தால் உணவு செரிமான கோளாறு இருக்கும். இதில் கிரகம் ஆதிபத்தியம், பார்க்கும் கிரகங்கள் அனைத்தும் பார்த்துதான் பலன் எடுக்க வேண்டும்.
ஜனன ஜாதகத்தில் லக்னம் முதல் திரிகோணம் ஆனால் பித்தம் தொடர்பான நோய் வரும்.
இரண்டாவது திரிகோணம் ஆனால் கபம் சம்பந்தமான நோய் இருக்கும்.
மூன்றாவது திரிகோணம் ஆனால் காற்று சம்பந்தப்பட்ட நோய் வரும்
ஆறாம் பாவகம்
ஆறாம் இடத்தை சுபர்கள் பார்த்தால் அது உபஜெய ஸ்தானம் ஆக வேலை செய்யவில்லை என்றால் அது துர் ஸ்தானமாக தான் வேலை செய்யும்.
பாப கிரகங்கள் 6 ல் இருந்தால் ஆயுள் காலம் அதிகமாக இருக்கும். உடல்நலம் கெடும்.
ஆறாம் பாவத்தில் செவ்வாய் ராகுவும் இருக்க குடல்வால் நோய் இருக்கும்.
லக்னாதிபதி 6ல் இருக்க ஆறாம் அதிபதி லக்னத்தை பார்க்க உடல் நலம் கெடும்.
சந்திரனிலிருந்து ஆறாம் வீட்டில் ராகு இருக்க மூட்டு வலி வரும்.
ஆறாம் அதிபதி லக்னத்தில் இருக்கும் ராகு ஆறில் இருக்க உடல் நலம் கெடும்.
சனி இராகு ஆறிலிருந்து ஒரு பார்வை இல்லையென்றால் நோய்வரும்.
பலமற்ற சுபர் ஆறில் இருந்தால் நோய் வரும்.
ஆறாம் வீடு ஆறாம் வீடு நெருப்பு ராசியாகி சூரியன் செவ்வாய் அதில் இருந்தால் தீ மின்சாரம் வெடிமருந்து இவைகளால் விபத்து ஏற்படும்.
சூரியன் செவ்வாய் ஆறில் இருந்து அது காற்று ராசி ஆனால் முதல் விமானம் போன்ற விபத்து இருக்கும்.
ஆறாம் இடத்தை சுக்கிரனுடன் சேர்ந்து ஒன்று அல்லது எட்டில் இருந்தால் கண் பார்வை கெடும். கேதுவுடன் சேர்ந்தால் முகத்தில் பரு தோன்றும்.
சந்திரன் 6-ல் இருக்க சனி, செவ்வாய் சம்பந்தம் பெற கணக்கில்லாமல் நோய் வரும், ரத்த அழுத்தம் வரும்.
சந்திரன் சனியுடன் செவ்வாய் சம்பந்தம் பெற ஆசனவாயில் அறுவை சிகிச்சை வரும்.
புதன் ஆறில் இருக்க சனி சம்பந்தம் பெறுவது காது கேளாமை பிரச்சனை இருக்கும்.
6 ல் கேது இருக்க ஆறாம் அதிபதி கேது பார்க்க அல்லது 6 ல் கேது, செவ்வாய், சனி சம்பந்தம் பெறுவது அல்லது 1, 3, 7 வீடுகளுக்கு இரண்டாம் வீட்டோடு செவ்வாய், சூரியன் சம்பந்தம் பெறுவது செவ்வாய் லக்னத்தில் பாவ கிரகத்தோடு சம்பந்தம் பெறுவது அல்லது செவ்வாய் 1 ஏழு எட்டில் இருக்க சூரியன் பார்க்க நெருப்பு ராசி எனில் நீரினால் அபாயம் இருக்கும்.
சந்திரனை ஒரு லக்னத்திலிருந்து பார்க்க பலமற்ற செவ்வாய் அல்லது நீசம் பெற்ற செவ்வாய் எட்டில் இருக்க அந்த ராசி நீர் ராசி எனில் ஜாதகருக்கு நீரினால் அபாயம் ஏற்படும்.
கிரகங்கள் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவத்தோடு தொடர்பு ஏற்பட்டால்
சூரியன் பாதிக்கப்பட்டு ஆறாம் வீட்டோடு அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் கொப்பளங்கள், தலைவலி, காச நோய், ரத்த அழுத்தம், கால் கட்டைவிரலில் அசுத்தம் பெரும்.
சந்திரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அது அதிபதிக்கு தொடர்பு கொண்டால் உணவு செரியாமை, வயிற்று பிரச்சனை, ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ,சர்க்கரை வியாதி, ரத்தக்குழாயில் நோய், இருக்கும்.
செவ்வாய் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டால் காய்ச்சல், எரிச்சல், தசைகளில் பிரச்சனை, தோல்நோய், விரைவீக்கம், குடலிறக்கம், ஆசன நோய் இருக்கும்.
புதன் ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய், மனநோய், மனச்சோர்வு, கவலை, மூச்சுத் திணறல், தலைவலி, சளி, மூட்டு வலி, கை கால் வலி இருக்கும்.
குரு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்புகொண்டால் கல்லீரல், வயிறு, கை கால் வலி இருக்கும்.
சுக்கிரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, கருப்பை பாதிப்பு இருக்கும்.
சனி பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கோ தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய் இருக்கும், கை கால்கள் வலி, மூட்டுவலி, காக்காவலிப்பு இருக்கும்.
ராகு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்கா வலிப்பு, சின்னம்மை, குஷ்டம் வரும்.
கேது பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்காவலிப்பு, அம்மை, குடல் நோய், செரிமான கோளாறு இருக்கும் இவை அனைத்தும் ஆறாமிட தசா புத்தியில்தான் நடக்கும்.
கிரக இணைவுகளால் வரும் நோய்கள்
செவ்வாய் ராகு ஆறில் இருந்தால் விரைவீக்கம்.
செவ்வாய், ராகு, சனி நினைவு குடலிறக்கம்.
குரு, ராகு லக்னத்தில் இருந்தால் குடலிறக்கம். செவ்வாய், ராகு ஏழில் இருந்தால் மாதவிடாய் கோளாறு.
கேது 6 அல்லது ஏழாம் அதிபதியோடு சேர்ந்து இருந்தால் நெஞ்சில் கோளாறு, நுரையீரல் பிரச்சனை இருக்கும்.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்தால் கைகால் கிழிப்பு வரும்.
சுக்கிரன், சந்திரன் 6 ல் இருந்தால் மாலைக்கண் நோய் வரும்.
லக்னாதிபதி சூரியன் சுக்கிரன் 6 ல் இருந்தால் பார்வை இழப்பு.
ஆறாம் அதிபதி ஏழில் இருந்து செவ்வாய் தொடர்பு இருந்தால் சின்னம்மை நோய் வரும்.
எட்டாம் அதிபதி 6 ம் அதிபதியோடு சேர்ந்திருந்தால் ஆயுள் குறைபாடு இருக்கும்.
எட்டாம் அதிபதி லக்னாதிபதி யோடு ஆறில் இருந்தால் ஆயுள் குறைவு.
லக்னாதிபதி சூரியன் 6 ல் இருந்தால் கொப்புளம் காய்ச்சல் வரும்.
லக்னாதிபதி சந்திரன் 6 ல் இருந்தால் தண்ணீர் கொப்பளம்.
லக்னாதிபதி செவ்வாய் 6 ல் இருந்தால் சுரப்பிகள் பிரச்சனை, காயம் ஏற்படும்.
லக்னாதிபதி புதன் 6 ல் இருந்தால் ஆசன நோய் இருக்கும்.
லக்னாதிபதி குரு ஆறில் இருந்தால் வயிற்றுப்போக்கு இருக்கும்.
லக்னாதிபதி சுக்கிரன் 6 ல் இருந்தால் வெள்ளைப்படுதல், சுக்கிலம் கெடுதல்.
செவ்வாய் சனி ராகு அல்லது செவ்வாய் சூரியன் சனி 6 ல் இருந்தால் நோய் அதிகமாக இருக்கும்.
சனி ராகு 6 ல் இருந்தால் கழுத்து வீங்குதல், குடல்புண் இருக்கும்.
பாவ கிரகம் ஆறில் அல்லது கன்னியில் இருந்தால் வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
ஆறாம் அதிபதி சூரியன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் தலைக்காயம் வரும்.
ஆறாம் அதிபதி சந்திரன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் வாய், குதம் இதில் நோய் வரும்.
ஆறாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் இருந்தால் கழுத்தில் நோய் வரும்.
ஆறாம் அதிபதி புதன் லக்னத்தில் இருந்தால் இருதய நோய் வரும்.
ஆறாம் அதிபதி குரு சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அடிவயிறு பிரச்சனை நோய் இருக்கும்.
ஆறாம் அதிபதி சுக்கிரன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் கண் பார்வை, கோளாறு வரும்.
ஆறாம் அதிபதி சனி சேர்ந்து லக்னத்தில் இருந்தால் கால் பாதங்களில் நோய் வரும்.
ஆறாம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்து லக்னத்தில் இருந்தால் உதட்டுப்பிளவு வரும்.
ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அஜீரண கோளாறு இருக்கும், கவலையற்ற தன்மை இருக்கும்.
நவாம்சத்தில் விருச்சிகத்தில் உள்ள கிரகம் வியாதியை சொல்லும்.
நவாம்ச விருச்சிக ராசியில் ராகுவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தால் மாற்று உறுப்பு பொருத்துவார்கள்.
உடலில் ஒரு உறுப்பு எடுத்துவிட்டு வேறு உறுப்பு பொருத்துவார்கள்
ஆறாம் பாவம்
ஒருவருக்கு ஏற்படும் வியாதி, அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல், யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்

Thursday, 2 January 2020

ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது ! ------ ------

ஜோதிடத்தில் 12 கட்டம் 9 கிரகம் வைத்து எப்படி பலன் சொல்வது !
------
------
ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.
முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?
மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.
நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?
5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.
6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.
7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.
8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.
10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.
11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.
12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.
நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.