Monday, 7 January 2019

சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்ம வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.

சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்ம வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?,கடன் தொல்லையா?,மனக்கவலை அதிகம் இருக்கிறதா?, நவக்கிரகங்கள் ஆட்டி படைக்கிறதா?, சொத்து பிரச்சனையா?,இன்னும் சொல்லிகொண்டே போகலாம்...
இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்ன?
வரும் சுவாதி நட்சத்திரத்தில் விரதம் இருந்து பாருங்கள், உங்கள் கவலைகள் எல்லாம் பஞ்சி போல் உங்களை விட்டு பறந்தோடும் .
ஏனென்றால் நரசிம்ம மூர்த்தி அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தில்தான்.
சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்ம வழிபாடு சிறப்பான பலன்களை தரும்.
சுவாதி நட்சதிரத்தன்று பக்தர்கள் காலையில் நீராடிவிட்டு, நரசிம்ம மூர்த்தி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அன்று பக்தர்கள் விரதம் இருந்து நரசிம்ம சஹஸ்ரநாமம், மந்திர ராஜபத ஸ்தோத்திரம், நரசிம்ம கவசம் போன்ற துதிகளை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு மாலையும் நரசிம்ம மூர்த்தி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அறிய அர்ச்சகரை அணுகுங்கள்.
நான் சொல்லவதை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையே மாறும். நரசிம்மரின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.
விரதம் இருக்க முடியாதவர்கள் அருகிலுள்ள நரசிம்ம மூர்த்தி கோவிலுக்கு சென்று வர சிறப்பான பலன்களை பெறலாம்.
விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆரம்பிக்கலாம்.
சுவாதி நட்சத்திரமும் நரசிம்ம மூர்த்திக்கு மிகவும் உகந்த தினம்.
மிக முக்கியம் என்னவென்றால் அசைவ உணவையும், போதை பழக்கவழக்கங்களையும், உங்கள் வாழ்க்கையில் இருந்தே நீக்கி விட வேண்டும்.

No comments:

Post a Comment